புதுக் கவிதைகள் - புலம்பல்
- ஆ. வெற்றி வேலாயுதம் வழக்கம் போல் தான் காலைக் கதிரவன் உதித்துவிட்டான். அந்த முதியதாயும் பல கவலைகளுடன் கண் விழிக்கிறான். தன் வாழ்க்கையின் தாகத்தை, நிகழ்ந்த சோகத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளத் துடிக்கும் அந்த கிராமத்து தாய்க்கு குறிஞ்சி பூவாய் அகப்படுகிறான். ஒருவன் அந்த தாயின் புலம்பலுக்கு, உணர்ச்சிக்கு உயிரூட்டுவதற்காக இதோ கிராமத்து நடையில் எனது வரிகள்... மழை பேஞ்சு நாளாச்சு, விவசாயம் பாழாச்சு, உறவுக்காரக வந்தா நாள் சொல்லி வருவாக, அந்த மழை என்ன சொல்லியா? வருது பத்துரூபா பணம் பார்த்து பல நாளு ஆயிடுச்சு, எங்கவீட்டு கஞ்சிப் பானையும் எங்க ஊரு, வறண்ட கிணறாய் போயிடுச்சு. பச்ச புள்ள வயிறு... பாழாப் போக, அம்மா பசின்னு, ஆளாப் பறக்குது., இத்தனையும் பார்த்து, பார்த்து பட்டமரமான என் புருஷன் பச்சமரம் வெட்டப்போக... பத்து மாசம் ஜெயிலுன்னு இப்ப பாளையத்து சிறையில அய்யா! நீதிமான்களே! உங்களுக்கொரு கேள்வி பத்து ரூபா பணத்துக்கு பல மாசம்னா... பல கோடி கோடிக்கு...? ஜாமீனாவது... அன்பா கேட்டவரே! என்னைக்கைய்யா தேர்தல் வரும்... அன்னைக்குத்தான், இரு நூறு கூலி கிடைக்கும். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புலம்பல் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - அந்த, பார்த்து