புதுக் கவிதைகள் - நிகழ்களின் ஓட்டம்
- க.ச. மனுவேல் நான் ஒன்றும் வாழ்வதில்லை! என் குறுகிய நிகழ்காலத்தின் அவசர யோசனைகளும் எனக்குச் சம்பந்தமே இல்லாத அனிச்சைச் செயல்களும்தான் வாழ்ந்து வருகின்றன. நடந்து முடிந்த பின்தான் சிறந்த யோசனைகள் சிந்தனைக்கு வருகின்றன. என்ன செய்வது? - வாழ்ந்து பழக்கமில்லையே எனக்கு! ஒத்திகை வாழ்க்கை ஒன்று தந்திருந்தால் ஒருவேளை துல்லியமாக வாழ்ந்திருப்பேன் முன்னறிவிப்போ ஓய்வோ இல்லாத நிகழ்களின் ஓட்டத்தில் நான் ஓடுவதில்லை இழுத்துச் செல்லப் படுகிறேன். நான் ஒன்றும் வாழ்வதில்லை! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நிகழ்களின் ஓட்டம் - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - நான்