புதுக் கவிதைகள் - மதமெதற்கு உனக்கு?
- சுசி. ஜெயசீலன் சிகரம் தொடு அகரம் எடு ஆயுளுள்ளவரை ஆணவம் போக்கு சாதிக்காக மோதிச் செத்தவர்களின் சரித்திரங்களை விட்டுவிடு மீதியுள்ளவர்களைப் பாதிக்கவிடாமல் சாதிக்கவிடு முற்றிய முதுகெலும்பு முன்னும் பின்னும் வளையாது - நீ இளமையிலே தூக்கி எறி இனியெதற்குச் சாதி மனிதனைப் பதம் பார்க்கும் மதமெதற்கு உனக்கு? - அதை அடியோடு ஒதுக்கு வஞ்சகரின் நெஞ்சமெரிய - நம் வண்ணத்தமிழின் பெருமையை வான்மீது முழங்கச் செய் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மதமெதற்கு உனக்கு? - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -