புதுக் கவிதைகள் - புதைந்து போனவை...!
- மு. கார்த்திக் - மதுரை காமராஜர் பல்கலைக்கல்லூரி அப்போது வலித்திருக்குமோ! வாலில் நு‘ல்கட்டி பறக்க விட்ட பட்டாம் பூச்சி! ஆலமரத்தடியில் குத்தவைத்து ஒட்ட வெட்டிய தலைமுடியோடு ஒரு கையில் எனைப்பிடித்து மறுகையில் 'மடக் மடக்கென்று' நீர் வாரிக் குளிப்பாட்டிய அப்பா! இன்னும் இருக்குமா? அப்பாவின் சட்டையில் பத்து பைசா திருடி "ப்ரைஸ்" கிழித்த போது கிடைத்த ஜிகினாப் பேப்பர்! ஈச்சங் குச்சியில் தலையில் புளியம் பழப் பந்து செய்து சீனியில் தொட்டு... ஆஹா அதுதான் 'லாலிபாப்'! இப்படி நினைவுக்குரிய நிகழ்வுகளெலாம் நிச்சயமாய்க் கலைந்து போயிருக்காது! அப்பா இறந்தபோது இளமீசையோடு மழிக்கப்பட்ட என் குழந்தை முகமும் நெஞ்சு முழுதும் பூரிப்போடு தெறித்து விழுந்த - என் பழைய சிரிப்பும் திரும்பக் கிடைத்திருந்தால் இதெல்லாம் நிச்சயமாய்க் கலைந்து போயிருக்காது! புரிகிறது! புதைந்து போனது 'லெமூரியா' மட்டுமல்ல! என் பால்ய நினைவுகளுந்தான். |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதைந்து போனவை...! - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -