புதுக் கவிதைகள் - ஒரு பால்வினையாளியின் அழுகுரல்...
- எ.ஜோன்ஸ் - அமெரிக்கன் கல்லூரி நவம்பர் சூரியன், அதிகாலை மலரும் என் அன்பு மகளின் பஞ்சுமிட்டாய் சிரிப்பு தலை நிறைய பூ டம்ளர் நிறைய காபி தலையணையருகில் மனைவி இவ்வளவு இன்பமிருந்தும் எனக்கு மகிழ்வில்லை. ஏன் தெரியுமா? ஆயிரம் முறை சமுத்திரத்தில் தவழ்ந்திருந்தாலும், ஒரு முறை சாக்கடை நதியில் சங்கமித்ததால், இன்று என் இதயக்கூட்டில் கரையானின் குடியேற்றம். எலும்புகளையே விறகாக்கி என் உயிரடுப்பு எரிகிறது கடவுள் எனக்கு மட்டும் நல்லதையும், கெட்டதையும் ஒரே நேரத்தில் கொடுத்தான். நல்லது அவள் எனக்கு மனைவியானது. கெட்டது நான் அவளுக்கு கணவனானது. உயிர் கொள்ளியால் - என் உயிர் உறிஞ்சப்படுவது தெரியாமல் என்னோடு அவள் உறவு கொள்ள வரும் போதெல்லாம், ஒரு நாள் தூக்கம், ஒரு நாள் தலைவலி, ஒரு நாள் உடல்அலுப்பு காரணங்களைச் சொல்லிச் சொல்லி நான் தள்ளிப் போகும் போது என் உயிர் மெழுகுவர்த்தி உருகி...உருகி... அழுவது உனக்குத் தெரியாது. எய்ட்ஸால் எனதுயிர் அழியப் போவது இந்த ஊருக்கு மட்டுமல்ல உனக்கும் கூடத்தான் தெரியாது. ஊரைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்காக வந்த உனக்கும் நமக்காக வந்த நம் மகளுக்கும் நான் என்ன செய்தேன். நடந்ததை நினைத்து இனி அழுவதில் பலனில்லை - மரணம் எனக்கு நிச்சயம். இறைவா! சீக்கிரம் என்னை இறக்கவிடு! - இல்லை மனைவிக்கு குழந்தையாய் பிறக்கவிடு!... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒரு பால்வினையாளியின் அழுகுரல்... - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - எனக்கு, நாள், நான், உயிர்