புதுக் கவிதைகள் - நினைவிருக்கும் வரை
- ஜே. ஜான்ரவி இதயம் வலிக்காமல் எப்படிச் சொன்னாய்..? எட்டிப்போ என்று...... அந்த மரண வார்த்தையை கேட்டதும் என் செவி நரம்புகள் சேதமடைந்து விட்டன. கோடிக் குண்டூசியை கொட்டிக் கொட்டி விழிகளுக்குள் அழுத்தியது போல..... கொடூரமானதல்லவா உன் பிரிவு..... இதயம் கூட ஏதோ ஓர் இருட்டறையில்..... சிலு சிலுக்கும் தென்றலாய் சிதறிச் சேர்கிறேன்....... முகாரி ராகத்தை மூச்சு போல முணுமுணுக்க முடியாமல்........ விளக்கைத் தொடாமல் விட்டில்கள் சாவதில்லை தென்றலைத் தழுவாமல் பூக்கள் மலர்வதில்லை கனவுகள் தொடாமல் காதலர்கள் இணைவதில்லை விரிசல்கள் ஏற்படாமல் விதைகள் முளைப்பதில்லை ஆனால் வெளிச்சத்தை பார்க்காமல் சூரியனும் அல்லியை அறியாமல் நிலவும் நீயும் நானுமாக...... |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நினைவிருக்கும் வரை - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -