புதுக் கவிதைகள் - மீட்டருள்வாய் நண்பனே!
- மேரி மார்ட்டின் மெல்சி மழையை சந்திக்க தயங்கிய நிலவு. மேகத்தின் பின் ஒளிந்து கொண்டது - ஆனால் என் இனிய புன்னகையே - நீ எதை சந்திக்க தயங்குகிறாய்? விடை காண மனதை வேண்டினேன் ஐயோ அதன் நிலையோ! பரிதாபம்! கணிப்பொறியின் காலம் அல்லவா! என் மனமும் கணிப் பொறியாக மாறிவிட்டதோ! அதனிடம் எனது வேண்டுகோளை நிறைவேற்ற இடமில்லை போல்! ஆம் அதன் நினைவகத்தில் இடமில்லை! நான்கு வருட அனுபவங்களின் பழு! அழித்திட மனமிருந்து அமைதியில்லை அவையென்ன திரும்பப் பெறக் கூடியவையா? அதுவும் நியாயம் தானே! ஆனால் என் மனமே எனக்கு விரோதியாகுமோ? அதை என்னுடன் இணைத்திட நண்பனே! உன்னிடமே வழக்கு தொடர்கிறேன்! என் மனதை எனதாக்கி - என் புன்னகையே மீட்டருள்வாய்! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மீட்டருள்வாய் நண்பனே! - புதுக் கவிதைகள் - Poems - கவிதைகள் -