புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 171
வாரே நீ யின்னமொன்று வழுந்தக்கேளு |
மேலும் ஒரு கருத்தினைச் சொல்கிறேன். அதனையும் நீ மிகவும் கவனமுடன் கேட்பாயாக! வளர்பிறைச் சந்திரனும் நல்லவனாய் அமைந்து அவனைச் சனி பார்த்திட்டாலும் சிறப்பருளும் சனியினால் செழுமையுள்ள சாதகனுக்கு சிறப்புமிக்க பசும்பொன் கிட்டுதலோடு இவன் லேவாதேவி செய்வான். இத்தகைய செல்வன் மந்தனாகிய சனிபகவானின் திருநட்சத்திரமான பூசத்தின் மூணாம் காலில் நின்றால் முழுப்பலன் என்று முறையோடு கிரகநிலவரமும் பிறவும் சேர்ந்து கூறுவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி நவின்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 169 | 170 | 171 | 172 | 173 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 171 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -