புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 169
கேளே நீசேல் கன்னி யெருதுமேடம் |
மேலும் ஒன்றை நீ மனங்கொண்டு கேட்பாயாக! மீனம், கன்னி, ரிஷபம், மேடம் நற்கதியுள்ள மகரம் மற்றும் கடகம் தன்னில் கரும்பாம்பு எனப் பகரப்படும் இராகு நிற்பின், அதனால் வெகு நன்மையான யோகங்கள் வாய்த்திடும் என்று புகழ்ந்து கூறாதே. இனி, சிறப்பு என்னவெனில் நான்கு திக்கிலும் கிரகங்கள் கூடி நிற்பின், அச்சென்மனுக்கு யோகம் உண்டென்று கூறுவாயேயன்றி அச்சென்மனுக்கு அஸ்தகிரி தோடம் என்று சிவபரம் பொருளின் அருளாணையால் கூறுக என்று போகர் அருள்பெற்ற புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 167 | 168 | 169 | 170 | 171 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 169 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -