புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 168
கோசாரம்கேளப்பா குருமூன்றில் குலைதானெட்டு |
இன்னுமொரு விஷயத்தையும் நான் கூறுகிறேன். இதனையும் நன்கு கேட்பாயாக! ஒரு சாதகனுக்கு இலக்கினத்திற்கு மூன்றில் அமைந்து கேடு செய்யும். குரு சனி ஜென்மம் தன்னிலும் புதன் நான்கிலும், சேய் என்று கூறப்படும் செவ்வாய் ஏழிலும், சிவந்த கதிர்களைக் கொண்ட சூரியன் 6,5 ஆகிய இடங்களிலும், சீறி வரக்கூடிய இராகுவெனும் கரும்பாம்பு 2-ஆம் இடத்தில் நிற்கவும் அசுர குருவான சுக்கிரன் ஆறாம் இடத்தில் மேவவும் நீ அச்சென்மனுடைய திசையையும் புத்தியையும் வலுவையும் அறிந்து கூறாவிட்டால் குற்றம் நேருவது உண்மையே. இது கோசார பலம் என்று நீ உணர்தலோடு, அக்குழவிக்கு நிராயணம் (மரணம்) என நன்கு ஆராய்ந்து கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 166 | 167 | 168 | 169 | 170 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 168 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -