புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 155
கேளப்பா யின்னமொருபுதுமைகேளு |
இங்கு வேறொரு விவரத்தையும் கூறுகிறேன். நன்கு விளக்கமாகக் கேட்பாயாக! இராகு என்ற கரும்பாம்பு 1,4,7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களிலோ, 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானத்திலேயோ அந்த வீட்டிற்குடையவன் சுபருடன் கூடினாலோ சுப கிரகங்களின் திருஷ்டி பெறிலோ அச்சாதகனுக்குச் சிறப்பான யோகமே யுண்டாகும். சிவ பரம்பொருளின் பேரருட் கருணையினால் திடமான யோகம் உண்டென்பதை இலக்கினாதிபதி சேர்ந்து நிற்பது கண்டு அந்தப் பலனைக் கூறுக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 153 | 154 | 155 | 156 | 157 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 155 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -