பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
நாரதர்
நாரதர் மிக இளம்பிள்ளையாக இருக்கும் பொழுதே காட்டிற்குச் சென்று கிருஷ்ணனை தியானம் செய்ய ஆரம்பித்தார். நீண்ட காலம் தியானம் செய்த பிறகு கிருஷ்ணன் எதிரே காட்சி தந்தார். அந்தக் காட்சியில் ஈடுபட்டு நாரதர் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ணன் மறைந்துவிட்டார். குழந்தை நாரதர் மிகவும் துயரம் அடைந்து அழத் துவங்கினார். அப்பொழுது அசரீரி மூலமாக "கவலைப் பட வேண்டாம்; இந்தப் பிறப்பு முடிந்ததும் உனக்கு பிரம்மத்தை அறிந்து கொண்டு அதனிடம் ஒன்றியிருக்கும் நிலைமை ஏற்படும்” என்று வந்தது. அதன்பிறகு பிரம்மா நாரதரை அழைத்து, 'பிரம்மசரியம், கிருஹஸ்தம் முதலிய நான்கு நிலைகளையும் ஒரு மனிதன் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே சென்ற பிறப்பில் மாலவதி என்ற பெயருடன் உனக்கு மனைவியாக இருந்தவள் இப்பொழுது சிரின்ஜய மன்னனுக்கு மகளாகப் பிறந்துள்ளாள். அவளுடன் வாழ்ந்து விட்டுப் பிறகு உன் வாழ்க்கையைத் தொடரலாம் என்று புத்திமதி கூறினான்.
இதன்பிறகு நாரதர், சிவனை தரிசிக்கக் கயிலை மலைக்குச் சென்றார். மிக்க அழகும் வானுயர்ந்த கட்டடங்களும் உடைய கயிலையில் நாரதர் சிவனை வழிபட்டவுடன் இவருக்குச் சில புத்திமதிகளைச் சிவன் கூறினார். குளித்தல், வாய் கொப்புளித்தல் முதலியவற்றை முறையாகச் செய்து விட்டு, கிருஷ்ணனை வழிபட வேண்டும். சிறப்பான வழிபாடு என்பது சந்தனம், பூக்கள், புதிய துணி ஆகிய வற்றை அணிவித்துப் பிரசாதம் படைத்து, கிருஷ்ணனை வழிபட வேண்டும். இன்னின்ன நாட்களில், இன்னின்ன உணவை உட்கொள்ள வேண்டும். இல்லறத்தில் இருப்போர் சோறு முதலியவற்றைக் குறிப்பிட்ட விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில் உண்ணலாம். ஆனால் துறவிகள் காய், கனி, கிழங்குகள் இவற்றை மட்டும் உட்கொள்ள வேண்டும்.
இதன்பிறகு நாரதர் பத்ரிகாசிரமம் சென்றார். அங்கே நாராயண முனிவர், பொன்னால் ஆகிய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி அப்ஸரஸ்கள், கந்தர்வர்கள் முதலானோர் அமர்ந்திருந்தனர். தம்மை வணங்கிய நாரதரை அமரச் செய்து கிருஷ்ண லீலைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
நாராயண முனிவர் சொல்லியவை
பிரகருதி என்ற பெயருடன் தலைமை மேற்கொண்டுள்ள ஐந்து பெண் தெய்வங்கள் உண்டு. துர்க்கை, ராதா, லட்சுமி, சரஸ்வதி, சாவித்திரி என்போர் ஆவர். இவர்கள் அதிகாரத்தின் கீழ் ஒருசில சக்திகளை மட்டும் பெற்றுப் பணிபுரிபவர்கள் கங்கை நதி, துளசிச் செடி, மானசா என்ற பெயருடைய பாம்புகளின் அதிதேவதை, ஷஸ்தி என்ற பெயருடைய பிறக்கும் குழந்தைகளின் தெய்வம், மஸ்களச்சண்டி, காளி, வசுந்தரா என்பவர் ஆவர். இவர்களை அடுத்துக் கீழ்ப்படியில் உள்ளவர்கள் அக்னியின் மனைவியாகிய சுவாஹா, யாகத் தலைவனின் மனைவியாகிய தட்சிணாத, சுவதா என்ற பெயருடைய பித்ரிக்களின் மனைவி முதலியோர். எல்லாப் பெண்களும் மூலப் பிரகருதியின் வடிவங்கள் ஆவர். தனிப்பட்ட ஒரு பெண்ணைக் கொடுமை செய்தாலோ, அவமானப்படுத்தினாலோ, பிரகருதியை அவமானப்படுத்திய தாகும். பெண்களை மரியாதையுடன் நடத்துவது, பிரகருதியை மரியாதையுடன் நடத்துவது போலாகும். பிரகருதிக்குரிய வர்கள் நன்னடத்தை, அன்புடைமை, கணவனைப் போற்றுதல் ஆகிய பண்புகளுடன் இருப்பர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 6 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, நாரதர், வேண்டும், பெயருடைய, ஆவர், ஆகிய, கிருஷ்ணனை