பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
பிரளய காலத்தில், எல்லாம் அழிந்து ஒரு ஒளிப்பிழம்பு ஒன்று மட்டுமே இருந்தது. இந்தப் பேராற்றல் மூன்று உலகங்களையும் விழுங்கி வைத்திருந்தது. இந்த ஒளிப் பிழம்பின் மேலே வைகுந்தம், சிவலோகம், கோலோகதம் ஆகிய மூன்று மட்டுமே இருந்தன. பிரபஞ்ச உற்பத்தியின் பொழுது, வைகுண்டம் நாராயணன், லட்சுமி என்பவர்கள் வாழுமிடமாக இருந்தது. பிரளய காலத்தில் வைகுந்தம் காலியாக இருந்தது. சிவலோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்திக் காலத்தில் காலியான நரகம், பிரளய காலத்தில் சிவன் பார்வதி என்பவருடன் சிவ கணங்களும் இருந்தனர். கோலோகம் என்று சொல்லப்படும் மூன்றாவது உலகம் கிருஷ்ணன் இருப்பிடமாகும். இந்த லோகத்தைப் பொறுத்தமட்டில் பிரபஞ்ச உற்பத்தி, பிரளயம் என்ற இரண்டு நேரங்களிலும் அது நிறைந்தே இருந்தது.
ஏனைய புராணங்களைப் போல் அல்லாமல், கிருஷ்ணனைப் பரப்பிரம்மத்துடன் ஒன்றாக்கும் முயற்சியில் வைகுண்டத்தையும், கோலோகத்தையும் வேறு வேறு என்று சொல்லி, இந்த வேறுபாட்டைக் கற்பிக்கின்றது. கோலோகம் முழுவதும் ஒளியாய் நிரம்பி இருப்பதுடன், அந்த ஒளியினுள் ஆபரணங்கள் அணிந்திருப்பது போன்ற பல வடிவுகளைக் கொண்டது. இந்த வடிவம் மஞ்சள் உடையுடுத்து, கையில் குழலுடன் காணப்படுகிறது. இந்த வடிவம் சந்தனம் பூசிய உடலுடன் கெளத்துப மணியை மார்பில் பதித்திருப்பதோடு, ஸ்ரீவத்ஸ் முத்திரையும் மார்பில் பெற்றுள்ளது. இவ்வடிவம் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. ம்ணிகள் பதித்த கிரீடத்தையும் அணிந்துள்ளது. காட்டுப் பூக்களால் கட்டப்பெற்ற மாலையை அணிந்திருக்கிறது. இந்த வடிவமே பரப்பிரம்மம் என்று சொல்லப்படும்.
பிரபஞ்ச உற்பத்தி பின்கண்டவாறு நடைபெற்றது. தொடக்கத்தில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. தண்ணீர், காற்று எதுவுமில்லை. தன்னைச் சுற்றி ஒருமுறை பார்த்த கிருஷ்ணன் பிரபஞ்சத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தார். இந்நினைவு வேறு எந்த வெளித் தூண்டுதலும் இல்லாமல் அவருள் எழுந்தது. கிருஷ்ணனின் வலப்புறத்தில் இருந்து நாராயணன் தோன்றினார். சத்தியம், நேர்மை என்பவற்றின் வடிவமாக அவர் இருந்தார். அவர் சங்கு சக்கரம், கதை, நீண்ட தடி, தாமரை, கெளஸ்துபம் ஆகியவற்றைத் தம் கரங்களில் தாங்கி இருந்தார். காட்டுப் பூக்களின் மாலையை அணிந்திருந்தார். நான்கு கரங்களுடன், ஸ்ரீவத்தவம் அணிந்த மார்புடன் காணப்பட்டார். கிருஷ்ணனின் புகழ் பாடிய நாராயணன், கிருஷ்ணனின் ஆணைக்குட்பட்டு எதிரே இருந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.
கிருஷ்ணனின் இடப்புறமிருந்து, தாமச குணத்தின் வடிவுடையவராய், இருண்ட நிறமுடையவராய் சிவன் தோன்றினார். கையில் திரிசூலத்துடன், சடையில் பிறைச் சந்திரனையும், மூன்று கண்களையும் உடையவராய் இருந்தார். கிருஷ்ணனின் கொப்பூழில் இருந்து நீண்ட தாமரை வெளிப்பட, அத் தாமரையில் வெண்மையான உடையணிந்த முதிர்ந்த தோற்றத்துடன் ராஜச
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 2 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, பாகம், கிருஷ்ணனின், பிரபஞ்ச, காலத்தில், உற்பத்தி, இருந்தார், வேறு, மூன்று, பிரளய, நாராயணன்