அக்னி புராணம் - பகுதி 19 - பதினெண் புராணங்கள்
மாடு இடைவிடாமல் குரல் கொடுத்தால், வீட்டுத் தலைவனுக்கு ஆபத்து. இது இரவு நேரத்தில் நடந்தால், திருட்டு அல்லது வீட்டிலுள்ளோர்க்கு மரணம் சம்பவிக்கும். பசு புறாவுடன் விளையாடினால் பசுவிற்கு மரணம் ஏற்படும். யானை தன் வலக் காலை, இடக்காலால் தேய்த்தால் நல்ல சகுனமாகும். யானை தன் காலினால் வலப் பக்க தந்தத்தைத் தேய்க்குமானால், வளமை பெருகும். ஒருவர் பிரயாணம் புறப்படும் பொழுது குடை கீழே விழுமானால், பிரயாணத் தைத் தவிர்ப்பது நல்லது. நல்ல நட்சத்திரங்கள் இருக்கும் நாளிலேயே பிரயாணம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நட்சத்திரங்கள் இருக்கும் நாளில் பிரயாணத்தைத் தவிர்ப்பது நல்லது.
போர்
ஒர் அரசன் போருக்குப் புறப்படுவதானால், புறப்படு வதற்கு ஏழு நாட்கள் முன்னர் தொடங்கி பின்வரும் முறையில் ஒவ்வொரு நாளும் சொல்லப்பட்ட தேவதைகளைப் பூசிக்க வேண்டும். முதல் நாள்- சிவன், விஷ்ணு, கணேசன், இரண்டாம் நாள்- திக்பாலர்கள் மூன்றாம் நாள்- ஏகாதச ருத்ரர்கள். நான்காம் நாள்- கோள்களும், விண்மீன்களும்; ஐந்தாம் நாள்- அஸ்வினி தேவதைகள், புண்ணிய நதிகள்; ஆறாம் நாள்- எதிர்பார்க்கப்படும் வெற்றியை மனத்துள் கொண்டு, சடங்குகளுடன் கூடிய அபிஷேகம் அரசனுக்குச் செய்யப்பட வேண்டும்; ஏழாம் நாள்- போருக்குப் புறப்படுதல்.
போருக்குப் புறப்படும் படைகள், தலைநகரத்துக்குக் கிழக்குத் திசையில் கூட வேண்டும். படைகள் புறப்படும்போது அப்படைகளுக்கு முன்னர் இசை முழக்குவோர் செல்ல ண்டும். புறப்பட்ட படை முன்னோக்கிச் செல்ல வேண்டுமே தவிர, பின்னர் திரும்பிப் பார்க்கவே கூடாது. புறப்பட்ட படைகள் இரண்டு மைல் தூரம் சென்ற பிறகு தங்கி ஒய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். விஷ்ணு முதலானவர்களைத் துதிக்க வேண்டும். அரசன் நேரடியாகப் போர் செய்யக் கூடாது. அவ்வாறு செய்து அரசன் இறக்க நேரிட்டால் போரில் தோற்க வேண்டிவரும். ஒரு யானையைப் பாதுகாக்க நான்கு ரதமும், ஒவ்வொரு ரதத்திற்கும் நான்கு குதிரைப் படைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் நான்கு காலாட்படை என்ற முறையில் அணிவகுப்பு இருக்கவேண்டும். படையில் முதலில் செல்வது காலாட்படை அடுத்து வில் வீரர். அடுத்து, குதிரைப்படை இவற்றின் பின்னே ரதப்படையும், அதன் பின்னர் யானைப் படையும் செல்ல வேண்டும். படையின் முற்பகுதியில் கோழைகள் இடம் பெறக்கூடாது. அவர்கள் பின்னணியில் நிற்க வேண்டும். தைரியம், வீரம் உடையவர்களே தூசிப் படையில் இருக்க வேண்டும். சூரியன் எதிர்ப்புறமாக இல்லாமல் படைக்குப் பின்புறம் இருக்கின்ற முறையில் போர் புரிய வேண்டும்.
போரில் உயிர் துறப்பவர் நேரே வீர சுவர்க்கம் போவர். உண்மை வீரர்கள் சிந்தும் இரத்தம், எல்லாக் குற்றங்களையும் கழுவி விடுகிறது. பல யாகங்கள் செய்வதைக் காட்டிலும் போர்க்களத்தில் ஆயுதங்கள் தன்மேல் படுமாறு ஏற்றுக் கொள்வது சிறப்புடையதாகும். போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஒடுதல் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தை விட அதிகமாகும். போர் என்பது சம பலம் உடைய இருவரிடையே நடைபெற வேண்டும். புறமுதுகிட்டு ஒடுபவர்கள், வேடிக்கை பார்ப்பவர்கள், ஆயுதம் ஏந்தாமல் போர்க்களத்தில் நிற்போர் என்பவர் மேல் ஆயுதப் பிரயோகம் செய்யக் கூடாது. போரில் பிடிபட்டவர்களைச் சிறையில் வைக்காமல் தன் மக்களைப் போல் நடத்த வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 19 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், நாள், நல்ல, போர், நான்கு, படைகள், செல்ல, கூடாது, போர்க்களத்தில், போரில், முறையில், காகம், சகுனம், மரணம், அரசன், போருக்குப், ஒவ்வொரு