அக்னி புராணம் - பகுதி 24 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில் வஜ்ஜிரவா என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்கு நச்சிகேதா என்றொரு மகன் இருந்தான். வஜ்ஜிரவா ஒரு பெரிய யாகம் செய்து தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான். நச்சிகேதா தன்னை யாருக்குத் தன் தந்தை கொடுத்திருக்கிறான் என்று திரும்பத் திரும்பக் கேட்டான். இதனால் கோபம் கொண்ட வஜ்ஜிரவா, உன்னை யமனுக்குக் கொடுத்து விட்டேன்' என்று கூறினான். தந்தையின் பதிலைக் கேட்ட மகன் யமனுடைய உலகிற்குச் சென்றான். அங்கு மூன்று நாட்கள் தங்கி யமனைப் பார்த்தான். அங்கு சென்ற யாரும் மீண்டும் பூலோகம் திரும்பியதில்லை. ஆனால் நச்சிகேதாவைக் கண்ட யமன், மனமகிழ்ந்து அவன் மீண்டும் பூலோகம் செல்ல வரம் கொடுத்தான். ஆனால் அதை விரும்பாத நச்சிகேதா, யமனிடம் ஆத்மாவைப் பற்றிய உண்மை இயல்பைத் தெரிந்து கொள்ள அவனை வேண்டினான். யமன் நச்சிகேதாவிற்கு ஆத்மாவைப் பற்றிக் கூறியவையே யம கீதை' என்று வழங்கப்படுகிறது. யமன் கூறியதாவது: உலகத்தில் உள்ள மக்கள் நிலையில்லாத பொருள்களாகிய பதவி, பணம், வீடு என்பவற்றில் மயங்குவது வினோதமாக உள்ளது. ஞானிகள் இவற்றில் ஈடுபடக் கூடாது. இவற்றை நெருங்கவிடக் கூடாது. பழகிவிட முடியாத நிலையை அடையக் கூடாது என்று சொல்லியிருந்தும் மக்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.
பரப் பிரம்மம் இவையனைத்தையும் பெற்றிருக்கிறது. ஆனால் இவற்றோடு ஒவ்வொருவரும் இதனைக் காண முடியாது. ஆனால் எல்லாவற்றிலும் அது ஊடுருவி நிற்கின்றது. ஆத்மா என்பது இவ்வுடம்பினுள் உறைகின்றது என்றாலும், இவ்வுடம்பே ஒரு ரதமாகவும், அறிவு ரதத்தைச் செலுத்துபவனாகவும், மனம் என்பது கடிவாளமாகவும் உள்ளது. ஐந்து பொறிபுலன்களும் குதிரைகளாக உள்ளன. இதனை ஏறிச் செலுத்தும் ஆத்மா ஐந்து குதிரைகளையும் அடக்கி, போர் வீரனைப் போல் தன்னுடைய மெய்யறிவை அம்பைப் போல பரப் பிரம்மத்திடம் செலுத்த வேண்டும். உண்மையான ஞானிகள் ஆத்மாவிற்கும், பரப் பிரம்மத்திற்கும் உள்ள ஒருமைப்பாட்டை நன்கறிவர். சமாதி என்பது இந்த ஒருமைப்பாட்டை அறிகின்ற முறையே தவிர வேறொன்று இல்லை. பரு உடம்பு மறைந்ததும், ஆத்மா அடைந்து பரப்பிரம்மத்துடன் ஐக்கியமாகிறது.
(இங்கு சொல்லப்பட்ட நச்சிகேதாவின் கதை கதோப நிஷத்தில் இடம் பெற்ற ஒன்றாகும். வஜ்ஜிரவா என்பவன் ஒரு சாதாரண பிராமணன் அரசனல்ல. அவன் யாகம் செய்துவிட்டுப் பல பசுக்களை தானமாகக் கொடுப்பதற்குத் தயாராக வைத்திருந்தான். ஆனால் அவற்றில் ஒரு பசுகூடப் பால் தரும் திலையில் இல்லை.இனி சினைபிடித்து பால் கறக்கலாம் என்ற நிலையும் இல்லை. எல்லாம் கடந்து மரத்துப்போன பசுக்கள் அவை பிராமணன் மகனாகிய நச்சிகேதா இத்தகைய மாடுகளை தானம் செய்வது பெரும் தவறு என்று எடுத்துச் சொல்வியும், அவன்தந்தை அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே, இந்தப், பயனற்ற பசுக்களைதானம் செய்ய முற்பட்டடார் மனம் தொந்து போன நச்சிதோஇவற்றையெல்லாம் தானமாகக் கொடுக்கின்ற நீ என்னை யாருக்குக் கொடுக்கப் போகின்றாய் என்றான். பலமுறை கேட்டும் தந்தை விடை கூறவில்லை என்றாலும், நச்சிகேதா விடாமல் அதே கேள்வியைக் கேட்டு நச்சரித்த பொழுது கோப மிகுதியால் அவன்தந்தை உன்னை யமனுக்குத் தரப் போகிறேன் என்றான். அதை ஏற்றுக் கொண்ட தக்சிதோ, மனிடம் சென்று ஆத்மாவின் சொரூபத்தை விளக்குமாறு கேட்கிறான். யமன் கூறிய விடைகளுக்கு யம கீதை' என்ற கதைகள்கூடப் புராணங்களில் இவ்வாறு வடிவெடுத்தன. என்பதற்கு இது ஒர் உதாரணம்)
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 24 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, நச்சிகேதா, வஜ்ஜிரவா, யமன், என்பது, இல்லை, ஆத்மா, கூடாது, கீதை, பரப்