அக்னி புராணம் - பகுதி 18 - பதினெண் புராணங்கள்
கனவுகள்
பின்வரும் கனவுகள் தீக்கனவுகள் என்று கூறப்படும். மனிதர்கள் மேல் மரம் முளைப்பது போலவும், புல் முளைப்பது போலவும் கனவு காணுதல்; கனவு காண்பவர் தான் மொட்டை அடித்துக் கொண்டிருப்பது போலவும், அழுக்கான உடை அணிந்திருப்பது போலவும் கனவு காணுதல்; திருமணம், பாடல் பாடுவது. பாம்பினை அடிப்பது, மிருகங்களைக் கொல்லுவதுபோல் கனவு காணல் ஆகியவையும் தீய கனவுகளாகும். எண்ணெய் குடிப்பது போலவும், பறவைகளின் மாமிசம் சாப்பிடுவது, வீடு இடிந்து விழுவதுபோல், குரங்கு களுடன் விளையாடுவது போல் கனவு காண்பது தீக் கனவாகும். தீய கனவு காண்பவர் விஷ்ணு, சிவன், கணேசன், சூரியன் ஆகியோரை வணங்க வேண்டும். முதல் ஜாமத்தில் காணும் கனவு, ஒரு வருடத்தில் பலிக்கும். இரண்டாம் ஜாமத்தில் காணும் கனவு ஆறுமாத காலத்திலும், மூன்றாம் ஜாமத்தில் காணும் கனவு மூன்று மாதத்திலும் பலிக்கும். நான்காம் ஜாமத்தில் காணும் கனவு பதினைந்து நாட்களிலும், விடியற்காலையில் காணும் கனவு பத்து நாட்களுக்குள்ளும் பலிக்கும். ஒருவர் முதலில் நல்ல கனவும், அடுத்துத் தீய கனவும் கண்டால், தீய கனவே பலிக்கும். ஆகையால் ஒருவர் நல்ல கனவு கண்டால் அதன் பிறகு தூங்குதல் கூடாது. உடனே எழுந்துவிட வேண்டும். பின் வருவனபற்றிக் காணும் கனவுகள் நல்ல கனவுகள் என்று கூறப்படும். மலைகள், குதிரை அல்லது எருதின் மேல் சவாரி செய்தல், வெண்ணிறப் பூக்கள், மரங்கள் ஆகியவை. ஒருவர் தனக்கு நிறைய கைகள், தலைகள் இருப்பது போலவும், புல், புதர், தன்னுடைய கொப்பூழிலிருந்து வளர்வது போலவும் கனவு காணுதல், வெண்ணிற மாலை அணிந் திருப்பது போல, சூரியகிரகணம், பகைவனின் கொடியைப் பற்றுதல் ஆகியவை நல்ல கனவுகளாகும். ஒருவர் பாயசம் உண்ணுவது போல் காணுதல், கனவு காண்பவர் தானே இறந்து விடுவது போல் கனவு காணுதல், வீடு தீப்பற்றி எரிவதுபோல் காணுதல் நல்ல கனவுகள் என்று கூறப்படும். ஈரமான துணிகள், பழங்கள் நிறைந்த மரங்கள், நீலமான மேகம் கனவில் வந்தால் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
சகுனங்களும், அவை தரும் குறிப்புகளும்
தீய சகுனங்கள் என்பவை ஒருவன் வீட்டைவிட்டுப் புறப்படும் பொழுது, எதிர்ப்படவோ, காணவோ கூடாதவை. பஞ்சு, காய்ந்த புல், சாணி, தோல்பொருள், முடி, விதவை, உடைந்த பாத்திரம் ஆகியவைகளைப் பார்த்துவிட்டு வெளியே புறப்படக்கூடாது. புறப்படும் பொழுது இவற்றைப் பார்க்க நேர்ந்தால் சிறிது நேரம் தங்கி, விஷ்ணுவை தியானித்து விட்டுச் செல்ல வேண்டும். பிரயாணம் புறப்படும் பொழுது வாத்தியங்களின் ஒலி ஒலிக்கக்கூடாது. ஒரு காரியத்திற்கெனப் புறப்பட்டவர்களை மீண்டும் அழைக்கக் கூடாது.
பின்வருவனவற்றைப் பார்த்துப் புறப்பட்டால் நல்ல சகுனம் என்று கூறப்படும். அவை: வெண்மையான பூக்கள், நீர் நிரம்பிய பாத்திரம், இறைச்சி, வயதான ஆடு, பசு, குதிரை, யானை, தீ, தங்கம், வெள்ளி, வாள், குடை, பழம், சங்கு, தயிர் இடியோசை பிணம் ஆகியவை ஆகும். கழுதை எதிரில் வந்தால் நல்லது நடக்கப் போகிறதென்று பொருள். பன்றி அல்லது எருது இடமிருந்து வலம் சென்றால் நல்ல சகுனம். வலமிருந்து இடம் சென்றால் கெட்ட சகுனம். குதிரை, புலி, நினைத்தது கைகூடும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 18 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கனவு, போலவும், நல்ல, வேண்டும், காணும், காணுதல், ஒருவர், கனவுகள், பலிக்கும், குதிரை, கூறப்படும், ஜாமத்தில், புறப்படும், பொழுது, சகுனம், ஆகியவை, புல், அல்லது, காண்பவர், போல்