முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் » வாஸ்கோ ட காமா (கி.பி.1460 - கி.பி.1524)
வாஸ்கோ ட காமா (கி.பி.1460 - கி.பி.1524)
ஆப்ரிக்காவைச் சுற்றிக்கொண்டு ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு நேரடியான கடல் வழியைக் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசிய நாடாய்வாளர் வாஸ்கோடகாமா ஆவார்.
மகா மீகாமன் எனப் புகழ்பெற்ற ஹென்றி இளவரசர் (Prince Henry The Navigator, 1394-1460) காலம் முதற்கொண்டு இத்தகையதொரு கடல் வழியைக் கண்டுபிடிப்பதற்குப் போர்ச்சுசீசியர் முயன்று வந்தனர். பார்த்தலோமியோ டயஸ் என்ற நடாய்வாளரின் தலைமையில் சென்ற குழுவினர் 1488 ஆம் ஆண்டில் ஆப்ரிக்காவின் தென்முனையிலுள்ள நன்னம்பிக்கை முனை வரை சென்று, அதைச் சுற்றிவிட்டு போ‘ச்சுகலுக்குத் திரும்பியது. இந்தச் சாதனை, இந்தியாவுக்கு ஒரு கடல் வழியைக் கண்டு பிடிக்கும் நீண்ட கால முயற்சி விரைவியேயே வெற்றிபெறும் என்ற நம்பிக்கையைப் போர்ச்சுக்கீசிய அரசருக்கு அளித்தது. எனினும் பல காலத்தாழ்வுகள் ஏற்பட்டன. 1497 ஆம் ஆண்டில் தான் ஒரு நாடாய்வுக் குழு இந்தியாவுக்குக் கடல்வழி காண்பதற்குப் பயணத்தைத் தொடங்கியது. இக்குழுவிற்குத் தலைவராக வாஸ்கோ ட காமாவை அரசர் தேர்ந்தெடுத்தார். இவர் ஓர் உயர்குடியில் 1430 ஆம் ஆண்டில் போர்ச்சுகலில் சைனஸ் ஊரில் பிறந்தவர்.
வாஸ்கோ ட காமா தம் தலைமையின் கீழ் நான்கு கப்பல்களுடனும், அரபு மொழி பேசும் மொழிபெயர்ப்பாளர்கள் உட்பட 170 ஆட்களுடனும் தமது பயணத்தைத் தொடங்கினார். அவரது குழு முதலில் வெர்தே தீவு முனைக்குச் சென்றது. பிறகு, அது டயஸ் செய்தது போல், ஆப்ரிக்காவின் கடற்கரையோரமாக அட்லாண்டிக் பெருங்கடலில் தெற்கு நோக்கிச் சென்றது. தென் திசையில் நெடுந்து‘ரம் சென்ற பிறது கிழக்கே திரும்பி நன்னம்பிக்கை முனையை அடைந்தது. இது, கடலோரம் செல்வதை விட சிறந்த வழியாக இருந்தது. ஆனால், இதற்கு மிகுந்த துணிவும், சிறந்த மீகாமத் திறனும் தேவைப்பட்டது. ட காமா தோந்தெடுத்த வழியின் காரணமாக, அவரது கப்பல்கள் மனக்கலக்கம் உண்டாக்கும் வகையில் 90 நாட்கள் வரை கண்ணுக்குத் தெரியாமலே இருந்தன. இது, கொலம்பசின் கப்பல்கள் மறைந்து போயிருந்த காலத்தை விட ஏறத்தாழ இரண்டரை மடங்கு அதிகம்!
ட காமா நவம்பர் 22 ஆம் நாளன்று நன்னம்பிக்கை முனையைச் சுற்றினார். பிறகு, ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரையோரமாக வடக்கு நோக்கிச் சென்றார். வழியில், இன்றையக் கெனியாவின் மொம்பாசா, மாலிண்டி, நகர்கள் உட்பட, ஆட்சியிலிருந்த சில நகரங்களில் அவர் தங்கினார். மாலிண்டியாவில் ஓர் இந்திய மீகாமரை அவ்ர் தம் குழுவில் சேர்த்துக் கொண்டார். அந்த இந்தியர் ட காமாவுக்கு இந்தியா செல்ல வழி காட்டினார். அரபிக் கடல் வழியாக 23 நாட்கள் பயணம் செய்த பிறகு போர்ச்சுகலிலிருந்து புறப்பட்டு ஏறத்தாழ பத்து மாதங்கள் கழித்து- 1498 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் நாளன்று, தென்னிந்தியாவின் மிக முக்கியமான வாணிக மையமாகிய கள்ளிக்கோட்டையை ஆண்டுவந்த இந்திய அரசன் சாமோரின் முதலில் ட காமாவை வரவேற்றான். ஆனால், ட காமா தமக்குப் பரிசாக வழங்கிய மிக மலிவான பொருள்களைக் கண்டு சாமோரின் ஏமாற்றமடைந்தான். அதோடு, இந்தியப் பெருங்கடலின் வாணிக வழித்தடங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் வணிகர்களும் ட காமாவுக்குக் கடும் எதி‘ப்புத் தெரிவித்தனர். இதனால், சாமாரினுடன் ஒரு வாணிக உடன்படிக்கை செய்து கொள்ள ட காமாவால் இயலாமற் போயிற்று. எனினும், ட காமா தம் அரசரிடன் காட்டுவதற்கதாக நேர்த்தியான நறுமணப் பொருள்களையும், கணிசமான எண்ணிக்கையில்‘ன இந்தியர்களையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு ஆகஸ்ட் மாதத்தில் கள்ளிக்கோடடையிலிருந்து புறப்பட்டார்.
தாயகத்திலிருந்து வந்த பயணத்தை விட திரும்பிச் சென்ற பயணம் மிகக் கடினமாக இருந்தது. அரபிக் கடலைக் கடப்பதற்கு மட்டும் மூன்று மாதங்கள் பிடித்தன. வழியில் பல மாலுமிகள் ஊட்டச் சத்துக் குறைவினால் ஏற்படும் சொறி கரப்பான்-பல் எகிறு வீக்க நோய் கண்டு இறந்தனர். இறுதியில் இரண்டு கப்பல்கள் மட்டுமே பத்திரமாகத் தாயகம் சேர்ந்தன. இவற்றுள் முதற் கப்பல் 1499 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் நாளன்று போர்ச்சுக்கல் சென்றடைந்தது. இதற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகே டா காமா சென்ற கப்பல் போய்ச் சேர்ந்தது. இந்தப் பய்ணத்தின் இறுதியில் 55 மாலுமிகள் மட்டுமே- அதாவது, புறப்படும் போதிருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் குகறைவானவர்கள் மட்டுமே உயிருடன் தாயகம் திரும்பினர். எனினும், 1496 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாளன்று ட காமாவும் அவரது மாலுமிகளும் தலைநகர் லிஸ்பனை அடைந்தபோது அவரது ஈராண்டுக் காலப் பயணத்தின் மாபெரும் வெற்றியை அரசர் நன்கு உணர்ந்து அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளித்தார்
இதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, ட காமாவின் பயணத்தை அடியொற்றிச் சென்று வருவதற்காக மற்றொரு நாடாய்வுக் குழுவை பீட்ரோ ஆல்வாரஸ் காப்ரால் என்பவரின் தலைமையில் போர்ச்சுக்கீசிய அரசர் அனுப்பினார். காப்ராலும் தடையின்றி இந்தியாவை அடைந்தார். இடையில் அவர் பிரேசிலைக் கண்டுபிடித்தார். (ஆனால், இவருக்கு முன்னரே சில போர்ச்சுக்கீசிய நாடாய்வாளர்கள் பிரேசிலைக் கண்டு பிடித்திருக்க வேண்டுமெனச் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.) அவர் ஏராளமான நறுமணப் பொருள்களுடன் இந்தியாவிலிருந்து போர்ச்சுக்கல் திரும்பினார். ஆயினும், காப்ராலின் நாட்களில் சிலர் கள்ளிக் கோட்டையில் கொல்லப்பட்டனர். அதனால், இதற்கு பழிவாங்கும் நோக்குட்ன் ட காமா மீண்டும் கள்ளிக் கோட்டைக்கு அனுப்பப்பட்டா‘. அவர் 23 கப்பல்களுடன் புறப்பட்டார்.
ட காமாவும் அவரது குழுவினரும் சிறிதும் ஈவிரக்கமின்றி நடந்து கொண்டனர். இந்தியக் கடற்கரையோரமாகச் சென்று கொண்டிருந்த ஓர் அரபுக் கப்பலை அவர் கைப்பற்றினார். அதிலிருந்த பயணிகளுடன் அக்கப்பலைக் கடலிலேயே கொளுத்திவிட்டார். பெண்கள், குழந்தைகள் உட்பட அந்தக் கப்பலிலிருந்த நு‘ற்றுக்கணக்கான பயணிகள் மாண்டனர். அவர் கள்ளிக்கோட்டையை அடைந்ததும், துறைமுகத்திலிருந்த முஸ்லிம்கள் அனைவரையும் நாடு கடத்திவிடும்படி சாமோரினுக்கு ஆணவத்துடன் ஆணையிட்டார்! அதற்கு சாமோலின் தயங்கிய போது ட காமா 23 இந்து மீனவர்களைப் பிடித்துக் கொன்று, அவர்களின் உடல்களைச் சின்னா பின்னமாக்கினார், பிறகு, துறை முகத்தைக் குண்டு வீசித் தாக்கின்‘ர், ட காமாவின் அட்டூழியங்களால் சாமோரின் ஆத்திரங்கொண்டாலும், வேறு வழியின்றி அரவது கோ‘க்கைகளுக்கு இணங்கினான். ட காமா தாயகம் திரும்புடம் வழியில், கிழக்கு ஆப்பிரிக்காவில் சில போர்ச்சுக்கீசியக் குடியேற்றங்களை நிறுவினார்.
ட காமாவின் இந்தச் செயல்களுக்காக, போர்ச்சுக்கல் மன்னர் அவருக்கு ஏராளமான வெகுமதிகள் வழங்கினார். விருதுகளையும, பண்ணைச் சொத்துக்களையும், ஓய்வூதியங்ளையும் மற்றப் பணப் பரிசுகளையும் அரசரிடமிருந்து ட காமா பெற்றார். அவர் 1524 ஆம் ஆண்டு வரையில் இ,ந்தியாவுக்குச் செல்லாமலிருந்தார். 1524 ஆம் ஆண்டில் புதிய போர்ச்சுகீசிய அரசர் அவரை இந்தியாவுக்கு அரசப் பிரதிநிதியாக நியமித்தார். அவர் இந்தியாவுக்குச் சென்ற சில மாதங்களிலேயே நோயுற்று, அங்கேயே 1524 ஆம் ஆண்டில் காலமானார். அவர் இறுதியில் லிஸ்பன் அருகில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். ட காமா திருமணம் செய்து கொண்டார். அவருக்கு எழு குழந்தைகள் இருந்தனர்.
வாஸ்கோ ட காமா தமது பயணத்தினால், ஐரோப்பாலிருந்து இந்தியாவுக்கும், து‘ரக்கிழக்கு நாடுகளுக்கும் ஒரு நேரடியான கடல்வழித் தடத்தைக் கண்டுபிடித்தார். இதனால் ஏராளமான நாடுகள் பெரும் பயனடைந்தன. இதுவே வாஸ்கோ ட காமா பயணத்தில் அடிப்படை முக்கியத்துவமாகும்.
ட காமாவின் பயணத்தால் போர்ச்சுக்கலுக்கு குறுகிய காலத்தில் மிகப் பெரும் பயன் விளைந்தது. கீழை நாடுகளுக்கான புதிய கடல் வாணிக வழித் தடத்தைப் போர்ச்சுகல் கட்டுப்படுத்தியது. அதன் மூலம், நாகரிக உலகின் எல்லையோரத்தில் மிகவும் ஏழை நாடாக இருந்துவந்த இந்த நாடு. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வச் செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக மிக விரைவில் முன்னேறியது. அத்துடன் இந்தியப் பெருங்கடலைச் சுற்றிக் கணிசமான எண்ணிக்கையில் குடியேற்றங்களையும் துரிதமாகப் போர்ச்சுக்கல் நிறுவியது. இந்தியாவிலும், இந்தோனேசியாவிலும், மடகாஸ்கரிலும், ஆப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலும், வேறு பல பகுதிகளிலும் போர்ச்சுக்களுக்குப் புறக்காவற் படைத் தளங்களும் நிறுவப் பெற்றன. இவை தவிர, பிரேசிலும் மேற்கு ஆப்ரிக்காவிலும் போர்ச்சுகலுக்குக் குடியேற்றங்கள் இருந்து வந்தன. இக்குடியேற்றங்களை ட காமாவின் பயணங்களுக்கு முன்னரே போர்ச்சுக்கீசியர் நிறுவியிருந்தார். இந்தக் குடியேற்றங்களில் பெரும்பாலானவற்றை இருபதாம் நு‘ற்றாண்டின் கடைசிப் பிற்பாதி வரையிலும் போர்ச்சுகல் விடாது வைத்திருந்தது.
இந்தியாவுக்கு வாஸ்கோ ட காமா புதிய கடல் வாணிக வழித் தடத்தைத் திறந்ததன் விளைவாக இந்தியப் பெருங்கடலின் வாணிக வழித்தடங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லிம்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. முஸ்லிம் வாணிகர்கள் மிக விரைவிலேயே முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்களுடைய இடத்தைப் போர்ச்சுக்கீசியர் கைப்பற்றி கொண்டார்கள். அது மட்டுமின்றி, இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான நிலவழி வாணிகத் தடங்களும் பயனற்றதாயின. ஏனெனில், ஆப்ரிக்காவைச் சுற்றிச் செல்லும் போர்ச்சுக்கீசிய கடல் வழித்தடம் எளிதாகவும் மலிவாகவும் இருந்தது. இது, கீழை நாடுகளுக்கான வாணிக வழித் தடங்களைக் கட்டுப்படுத்தி வந்த ஆட்டோமான் துருக்கியர்களுக்கும் பேரிடியாக அமைந்தது. ஏனென்றால், எஞ்சிய ஐரோப்பியப் பகுதிகளுக்குப் புதிய கடல் வாணிக வழித்தடம் மூலம் து‘ர நாடுகளிலிருந்து சரக்குகள் வருவது முன்பை விட மலிவாக இருந்தது
எனினும், வாஸ்கோ ட காமாவின் பயணத்தினால், மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டது. ஐரோப்பா மீதோ மத்திய கிழக்கு மீதோ அன்று. மாறாக, இந்தியா மீதும், தென்கிழக்கு ஆசியா மீதும்தான் மிகப் பெரும் பாதிப்பு உண்டாகியது. 1498 ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்தியா ஐரோப்பாவின் தொடர்பின்றி தனிமைப்பட்டு இருந்து வந்தது. உண்மையைக் கூறின், வரலாற்றின் பெரும் பகுதியில் ஓரளவு தன்னிறைவுடைய ஒரு தனி நாடாகவும் இயங்கிவந்தது. அவ்வப்போது, வடமேற்கிலிருந்து மட்டுமே சில அயல்நாட்டு பாதிப்புகள் ஏற்பட்டன. ஆயினும், ட காமாவின் பயணத்தால் ஏற்பட்ட கடல்வழித்தடத்தின் வாயிலாக, ஐரோப்பிய நாகரிகத்துடன் இந்தியாவுக்கு நேரடித் தொடர்பு உண்டாயிற்று. ஐரோப்பியரின் செல்வாக்கும், வலிமையும், இந்தியாவில் படிப்படியாக வளர்ந்து வந்தது. 19ஆம் ஆண்டின் கடைசிப் பிற்பாதிக்குள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே பிரிட்டிஷ் குடியரசின் கீழ் அடிமைப்பட்டது. (வரலாற்றில் இந்தியா முழுவதும் ஒரே ஆட்சியாளரின் கீழ் ஒரு குடையில் இருந்தது. இந்தக் காலத்தின் போதுதான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). இந்தோனேசியாவைப் பொறுத்த வரையில் முதலில் அது ஐரோப்பியச் செல்வாக்குக்கு ஆட்பட்டது. பிறகு அது முழுமையாக ஐரோப்பிய் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இருபதாம் நு‘ற்றாண்டின் மத்தியில் தான் இந்தப் பகுதிகள் யாவும் சுதந்திரம் பெற்றன.
வாஸ்கோ ட காமாவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்குப் பொருத்தமான வேறொருவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஆவார். சில வழிகளில், இந்த ஒப்பீடு ட காமாவுக்கு சாதகமாக அமைகிறது. எடுத்துக்காட்டாக, காமாவின் பயணம், மிகப் பெரிய சாதனையாகும். அவர் கொலம்பசைவிட மிக அதிக தொலைவு சென்றார். மிக அதிக காலம் பயணம் சென்தார். அவர் பயணஞ் செய்த காலமும், து‘ரமும் ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம். இதற்கு மிகச் சிறந்த மீகாமத் திறன் தேவைப்பட்டது. (கொலம்பஸ், எத்தனை தொலைவு சென்றார் என்பது ஒரு புறமிருக்க, அவர் தம் பயணத்தில் புதிய உலகைக் கண்டுபிடிக்காமல் தவறவிட்டு விட்டு இந்தியப் பெருங்கடலில் திசைமாறிச் சென்றிருக்கக்கூடும்). மேலும், கொலம்பஸ் போலன்றி, டா காமா தாம் அடைய நினைத்த இலக்கை அடைவதில் வெற்றி கண்டார்.
ஆனால், ட காமா ஒரு புதிய உலகைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், ஐரோப்பாவுக்கும், ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்த ஒரு மண்டலத்திற்குமிடையில் ஒரு தொடர்பை மட்டுமே அவர் ஏற்படுத்தினார் என்றும் சிலர் வாதிடக்கூடும். இந்த வாதம் கொலம்பசுக்கும் பொருந்துமே!
கொலம்பசின் பயணத்தினால், மேற்கு கோளார்த்தத்தில் ஏற்கெனவே நிலவிய நாகரிகங்கள் மீது இறுதியில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. ட காமாவின் பயணத்தினால், இந்தியாவிலும், இந்தோனேசியாவிலுமிருந்த நாகரிகங்கள் கடைசியில் பெருமளவுக்கு உருமாற்றம் பெற்றன. கொலம்பஸ், ட காமா இருவரின் முக்கியத்துவத்தை ஒப்பு நோக்குங்கால் வட அமெரிக்காவும், தென் அமெரிக்காவும் இந்தையாவை விட மிகப் பெரும் பரப்பளைவைக் கொண்டவை என்ற போதிலும், மேற்குக் கோளார்த்த நாடுகள் அனைத்தின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் தொகை இந்தியா கொண்டிருந்தது என்பதை இங்கு நினைவிற்கொள்ள வேண்டும்.
எனினும், வாஸ்கோ ட காமாவை விட கொலம்பஸ் மிகுதியான செல்வாக்கைக் கொண்டிருந்தார் என்பதில் ஐயமில்லை. முதலாவதாக ஆப்ரிக்காவைச் சுற்றி இந்தியாவுக்குப் பயணஞ் செல்லும் கருத்து, வாஸ்கோ ட காமாவின் சொந்தக் கருத்து அன்று. அந்தப் பயணத்திற்குத் தலைமை தாங்குவதற்கு வாஸ்கோ ட காமாவைத் தேர்ந்தெடுப்பதற்கு நெடுங்காலத்திற்கு முன்னரே அத்தகையதொரு குழுவை அனுப்புவதற்கு போர்ச்சுக்கீசிய அரசர் முடிவு செய்திருந்தார். இதற்கு மாறாக கொலம்பசின் நாடாய்வுப் பயண முயற்சிக்கு அவர் தாமே திட்டமிட்டார். அவருடைய இடைவிடாதத் து‘ண்டுதலின் காரணமாக, அவரது பயணத்திற்கு நிதியுதவியளிக்க இசபெல்லா அரசி முன் வந்தார். கொலம்பஸ் இல்லாதிருந்தாலும், புதிய உலகம் (இறுதியில் அது தற்காலத்தில், வேறொரு ஐரோப்பிய நாட்டினால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும், ஆனால் வாஸ்கோ ட காமா தோன்றாது போயிருப்பின், போர்ச்சுக்கீசிய மன்னர் நாடாய்வுக் குழுவிற்கு வேறொரு ஆளைத் தேர்ந்தெடுத்திருப்பார். அந்த ஆள் தகுதியற்றவராக இருந்து தோல்வியடைந்திருந்தாலும். இந்தியாவுக்கு ஒரு நேரடி கடல் வழியைக் கண்டுபிடிப்பதற்கான தமது நீண்ட முயற்சியைப் போர்ச்சுக்கீசிய அரசர் கை விட்டிருக்க மாட்டார். மேலும் ஆப்ரிக்காவின் மேற்குக் கரையோரமாகப் போர்ச்சுகீசியர் நிறுவியிருந்த பல படைத் தளங்களைக் கருத்தில் கொள்ளும் போது மற்றொரு ஐரோப்பிய் நாடு இந்தியாவை முதலில் அடைந்திருக்க வாய்ப்பே இல்லை.
இரண்டாவதாக, இந்தியாவின் மீதும், து‘ரக்கிழக்கின் மீதும் ஐரோப்பியரின் செல்வாக்கு, மேற்குக் கோளார்த்தத்தின் மீது ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கைப் போன்று அத்துணை அபரிமிதமாக இருக்கவில்லை. மேலை நாடுகளுடன் தொடர்பு கொண்டதன் காரணமாக, இந்திய நாகரிகத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன என்பது உண்மைதான். ஆனால், கொலம்பசின் பயணத்திற்கு சில பத்தாண்டுகளுக்குள்ளேயே புதிய உலகிலிருந்த பெரிய நாகரிகங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. மேலும், மேற்குக் கோளார்த்தத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவாக்கியதைப் போன்று இந்தியாவில் எதுவும் நிகழவில்லை.
கொலம்பசுக்குப் பிறகு மேற்குக் கோளார்த்தத்தில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளுக்குமான பெருமைக்கு (அல்லது பழிக்கு) அவரை உரியவராக்க இயலாது. அதே போன்று கீழை நாடுகளுன் ஐரோப்பியர் கொண்ட தாடர்புகளால் ஏறபட்ட எல்லா விளைவுகளுக்குமான பெருமையை வாஸ்கோ ட காமாவுக்கு உரித்தாக்க முடியாது. ஒரு நீண்ட இணைப்புச் சங்கிலியில் ஒரு கண்ணிதான் வாஸ்கோ ட காமா. மகாமீகான் ஹென்றி ஆப்ரிக்காவின் மேற்கு கரை நெடுகிலும், நாடாய்வு செய்த பல்வேறு போர்ச்சுகீசிய கப்பல் தலைவர்கள், பார்த்தலோமிய டயஸ் ஆகியோரும், ட காமாவும், அவருக்குப் பின் வந்த ஃபிரான் சிஸ்கோ டி ஆல்மைடா, அல்ஃபோன்சா டி ஆல்புகர்க் போன்றவர்களும் வேறு பலரும் அந்தச் சங்கிலியின் மிக முக்கியமான கண்ணியாக விளங்கியவர் வாஸ்கோ ட காமா என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், மேற்க்குக் கோளார்த்தத்தை ஐரோப்பிய மயமாக்குவதற்கு அரும்பாணியாற்றியவர்களில் கொலம்பசுக்கு இணையாக வாஸ்கோட காமா பங்கு பெறவில்லை. அதனாலேயே கொலம்பசுக்கு மிகவும் பிற்பட்டு வாஸ்கோ ட காமா இடம் பெற்றிருக்கிறார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 38 | 39 | 40 | 41 | 42 | ... | 109 | 110 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாஸ்கோ ட காமா (கி.பி.1460 - கி.பி.1524), காமா, வாஸ்கோ, அவர், காமாவின், கடல், வாணிக, போர்ச்சுக்கீசிய, பிறகு, பெரும், வந்த, இந்தியாவுக்கு, கொலம்பஸ், இதற்கு, அவரது, அரசர், ஆப்ரிக்காவின், இறுதியில், இந்தியா, மேற்குக், மட்டுமே, கண்டு, எனினும், மிகப், சென்ற, ஆண்டில், ஆண்டு, பயணத்தினால், போர்ச்சுக்கல், நாளன்று, இந்தியப், பயணம், முதலில், கீழ், வழியைக், கொலம்பசின், மேற்கு, இருந்து, பெற்றன, ஏற்பட்டது, வழித், சென்று, நாடுகள், நன்னம்பிக்கை, கீழை, பாதிப்பு, மிகவும், வந்தது, மக்கள், கோளார்த்தத்தில், நாகரிகங்கள், போன்று, மேலும், பெரிய, நீண்ட, ஐரோப்பிய, என்பது, டயஸ், மீதும், நாடு, காரணமாக, ஆப்ரிக்காவைச், செய்த, சிறந்த, காமாவுக்கு, இந்திய, கிழக்கு, சென்றார், வழியில், கப்பல்கள், சாமோரின், தமது, ஏற்பட்டன, முன்னரே, ஏராளமான, ஏறத்தாழ, காமாவும், நாடாய்வுக், உட்பட, காமாவை, தாயகம், கப்பல், வேறு, Life Notes of Historians - வரலாறு படைத்தோரின் வாழ்க்கை குறிப்புகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்