முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 330
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 330
கள் இருந்தார்கள். கலகம் தொடங்கிய அன்றே, அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை ஜெனரல்களாகக் கருதினார்கள். வெறும் ஜெனரல்களே நிறைந்த ஒரு சேனை, வெற்றி பெறமுடியாது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க மங்களசிங்கிற்கு ஒரு வாரமாகிவிட்டது. அந்தச் சேனையில், மங்களசிங்கைத் தவிர யுத்த நிபுணத்துவம் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை. இதே நிலைதான், கலகம் செய்யத் தொடங்கிய எல்லாச் சேனைகளிலும் இருந்தது. ஒரு இடத்திலே தங்கி, சிப்பாய்களுக்கு யுத்தப் பயிற்சி கொடுப்பதற்கு மங்களசிங்கிற்கு நேரமில்லை. முடிந்த அளவு வேகமாக, ஜில்லாக்களிலே ஆங்கிலேயர்களின் ஆட்சி சக்தியை ஒழிக்க வேண்டியது அவசியமாயிருந்தது.
கங்கையைக் கடந்து ரஹில்கண்டை அடைந்ததுமே, மங்களசிங் சிப்பாய்களுக்கு ஒவ்வோர் இரவிலும் ஒழுங்காகத் தனது அரசியல் கொள்கையை விளக்கத் தொடங்கினான். சிப்பாய்கள் அதைப் புரிந்து கொள்வதற்குச் சிறிது காலமாயிற்று. அவர்கள் மனதிலே தோன்றிய சந்தேகங்களையெல்லாம் மங்களசிங் தீர்த்துவைத்து, அவர்களுக்குத் தெளிவை உண்டாக்கினான். பிரான்ஸின்-இரண்டு புரட்சிகளை (1792, 1849)யும் பற்றிய விவரங்களை அவர்களுக்கு எடுத்துச் சொன்னான். வேல்ஸின் ஆங்கிலத் தொழிலாளிகள், இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் இந்த ஆங்கில வியாபாரிகளுக்கு விரோதமாகக் கத்தி எடுத்த கதையையும் விளக்கிச்
சொன்னான். இந்த ஆங்கில வியாபாரிகள் தங்கள் ஆள்பலத்தால் அதை அடக்கிவிட்டார்கள் என்றாலும், வீரத்தோடு போராடிய இந்தத் தொழிலாளரின் உரிமையைப் பறித்துக்கொள்ள அவர்களால் முடியவில்லை என்பதையும் தெளிவாக்கினான்.
விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு போராடிய மங்களசிங்கின் சிப்பாய்களுடைய நடவடிக்கையே முற்றிலும் மாறிவிட்டது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னைச் சுதந்திரப் போரின் ஒரு சேவகனாகவே கருதினான். கிராமங்களிலும் நகரங்களிலும், ஜனங்களிடையே தங்கள் பேச்சாலும் செயலாலும் ஒரு நம்பிக்கையைத் தோற்றுவித்ததோடு, அவர்களின் மரியாதைக்கும் பாத்திரரானார்கள். ஆங்கிலேயர்களின் கஜானாவிலிருந்து கிடைத்த பணத்திலே ஒவ்வொரு பைசாவையும் சரியாகவே செலவிட்டார்கள். அவசியம் நேர்ந்தபொழுது, ஜனங்களுக்கு வரியும் விதித்தார்கள். ஆனால் அங்கங்கே பஞ்சாயத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு நிலைமையை விளக்கி அவர்களின் சம்மதத்தையும் சக்தியையும் பொருத்தே வரி விதிக்கப்பட்டது. எந்தச் சிப்பாயும், யாரிடமிருந்தும் எந்தப் பொருளையும் விலை கொடுக்காமல் பெறக் கூடாது என்ற மங்கள சிங்கின் உத்தரவு எல்லா இடத்திலும் மிகுந்த பலனை அளித்தது. கூட்டம் கூட்டமாக, வாலிபர்கள் இந்தச் சுதந்தரச்சேனையிலே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் மங்களசிங் ராணுவக் கவாத்துப் பயிற்சி மட்டுமல்ல, ஒற்றர் வேலையையும் உணவுப்பொருள்களைச் சேகரித்துத் தயாரிக்கும் வேலையையும் கற்றுக்
கொடுத்தான். தன்னுடைய சேனையோடு கூட, ஒரு சிறிய வைத்தியக் கோஷ்டியையும் சேர்த்துக்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 328 | 329 | 330 | 331 | 332 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மங்களசிங், அவர்கள் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்