முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 301
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 301
தண்ணீரும் இறைக்கக்கூட வீட்டிலே யாருமில்லை. எஜமானனுடைய கதை தெரியுமா? அந்தச் சப்ரா தாசியைச் சுற்றிக் கொண்டு அலைந்து அவருக்கு
ஏற்பட்ட கதி! அவருடைய ஆண்குறியே அழுகி விழுந்து விட்டது. இப்பொழுது இருக்கிறார்களே, இந்த இரண்டு யுவ ஜமீன்தார்களும் திவானுக்குப் பிறந்தவர்கள்.”
ரேக்கா - “எஜமானர்களிடையே இப்பொழுது இது ரொம்ப சர்வ சாதாரணமாகி விட்டது.”
சோபரன் - நிலம் போய்விட்டது; கிராமம் போய் விட்டது; கடலுக்கு அப்பாலிருந்து வந்த கொள்ளைக்காரர்கள், நம் தலை மீது உள்ளூர்க் கொள்ளைக்காரர்களை உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். பஞ்சாயத்தும் போய் விட்டது. நாலு அரிசி விளைந்தால் அதுவும் ஜீரணித்துவிடுகிறது. தப்பித் தவறி நல்ல மழை பெய்து நாலு தானியம் வீட்டிற்கு வந்தால், ஜமீன்தார், சௌகிதார், கணக்கன், குமாஸ்தா இத்தனை பேரையும் தப்பியல்லவா நமக்குக் கிடைக்க வேண்டும்.”
முன்ஷி - “கணக்கனும் கொள்ளையடிக்கிறான் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்; ஆனால் கணக்கனுக்கு மாதம் எட்டணாதான் ஜமீன்தார் சம்பளம் கொடுக்கிறார் என்பது உனக்குத் தெரியுமல்லவா! இந்த எட்டணாவில் தங்களின் நாக்கு நுனியையாவது ஈரமாக்கிக் கொள்ள முடியுமா? ஜமீன்தாருக்கு எல்லா விஷயங்களும் தெரியத்தானே செய்கிறது?”
ரேக்கா - “நன்றாகத் தெரியும். பொட்டையனாகவா இருக்கிறார்? கும்பினி ராஜா ஒரு பெரிய கொள்ளைக்காரன். அவன் கொள்ளையடிப்பதற்காக இந்த ஜமீன்தாரை எங்கள் தலையிலே உட்கார்த்தி வைத்தான். ஜமீன்தார்
சும்மா இருப்பாரா? அவர் சின்னச் சின்னத் திருட்டுக்களையும் எங்கள் மீது சுமத்துகிறார். இதற்கப்பாலும் நாங்கள் எப்படி உயிரோடிருக்கிறோம் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.”
சோபரன் -“ஆம்! உயிரோடிருக்கிறோம். ஆனால் ரேக்கா, வயிறு நிறையச் சோறும், உடம்பை முழுவதும் மூடிக் கொள்ளக் கூடிய துணியும் உடையவன் ஒருவனாவது இந்தத் தயாள்பூரில் இருக்கிறானா?”
முன்ஷி - “ கும்பினிக்கு என்ன கவலை சோபரன்? அவர்கள் வாரத்தை நிச்சயித்து விட்டார்கள். தவணை நாளன்று ஜமீன்தார் சப்ராவுக்குப் போய் பணத்தைச் செலுத்திவிட்டு வருகிறார். கும்பினிக்குப் பைசாக் கூடக் குறைவில்லாமல் வசூலாகும்போது, தயாள்பூர் விவசாயிகள் செத்தாலென்ன - வாழ்ந்தாலென்ன? வாரத்தைப் பாக்கியின்றி நீங்கள் செலுத்தாவிட்டால் ஜமீன்தார் உங்கள் எலும்புகளை முறித்துவிடுவார். உங்களிடம் ஐந்து ரூபாய்கள் வசூல் பண்ணி, ஒரு ரூபாயைக் கும்பினிக்குக் கொடுத்து விட்டு, நான்கு ரூபாய்களைத் தான் விழுங்கிவிடுகிறார். இதையெல்லாம் பற்றிக் கும்பினிக்கு என்ன கவலை?”
ரேக்கா - “கடவுளே! நீ தூங்குகிறாயா, அல்லது மாண்டுதான் போய்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 299 | 300 | 301 | 302 | 303 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜமீன்தார், போய், ரேக்கா, விட்டது, இந்த, சோபரன் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்