மருதகாசி பாடல்கள் - பக்கம் - 187

ராஜீ: எங்கே?...... எங்கே?........ நீ எங்கே? குங்குமச் சிமிழே கோபுரவிளக்கே! தங்கக் கலசமே! தாமரைப் பூவே! (எங்கே) திருமுகத்தின் அழகை நிலாதிருடிச் சென்றதோ? செவ்விதழைக் கொவ்வைக் கனி கவ்விக் கொண்டதோ? கருவிழிகள் புள்ளி மானைக் கலந்து கொண்டதோ? என் கண்பட்டுத்தான் காலம் உன்னைக் கவர்ந்து சென்றதோ? (எங்கே) மழலை மொழியை கிளிகளுக்கு வழங்கி விட்டாயோ? மண்ணை விட்டு விண்வெளியில் பறந்து விட்டாயோ? நிழலைப்போல நேருவை நீ தொடர்ந்து விட்டாயோ? நிம்மதியாய் அமரவாழ்வை அடைந்து விட்டாயோ? (எங்கே) சாந்தி: பூத்திருக்கும் ரோஜாப்பூவில் மணமில்லையா? அந்த மணத்தைப் போல் உன்மனசுக்குள்ளே தானில்லையா? நேருமாமா சொன்ன சொல்லும் நினைவில்லையா? உன் நேரிலேதான் நானிருக்கேன் தெரியலையா? குங்குமச் சிமிழும் கோபுரவிளக்கும் தங்கக் கலசமும் தாமரைப் பூவும் இங்கே......இங்கே......நான் இங்கே! |
பொன்னான வாழ்வு-1967
இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன் & ராஜேஸ்வரி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 185 | 186 | 187 | 188 | 189 | ... | 205 | 206 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்கம் - 187 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை - எங்கே, விட்டாயோ, இங்கே