வாயு புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
தாரா என்ற அசுரனுக்குத் தாரகன் என்ற பிள்ளை தோன்றினான். தாரகன் தேவர்களை வெல்ல வேண்டும் என்று கடுந்தவம் செய்ய முடிவு செய்தான். ஒரு காலைக் கட்டை விரலில் ஊன்றிக் கொண்டு, மற்றொரு காலை மடக்கிக் கொண்டு, இரண்டு கைகளையும் உயர்த்தி சூரியனைப் பார்த்தபடியே, தண்ணீரை மட்டும் பருகிக் கொண்டு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். அதன்பிறகு தண்ணிர் குடிப்பதையும் நிறுத்திவிட்டுக் காற்றை மட்டும் உட்கொண்டு இன்னொரு நூறாண்டு தவம் செய்தான். நீரின் நடுவே நின்றும், பஞ்சாக்கினி மத்தியில் நின்றும் நூறு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். ஒரு மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கி மற்றுமொரு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். இறுதியாக பிரம்மன் தோன்றி, "உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான். தாரகன் 'சிவபெருமானின் பிள்ளையைத் தவிர வேறு யாராலும் எனக்கு சாவு வரக் கூடாது என்ற வரத்தையும், என்னளவு பலமுடைய மற்றொருவனைப் பிரம்மன் படைக்கக் கூடாது' என்ற வரத்தையும் கேட்டுப் பெற்றுக் கொண்டான். சிறிது காலத்தில் தேவர் உலகம் உள்பட எல்லா உலகங்களையும் ஜெயித்து தேவர்களை எல்லாம் தனக்கு அடிமைகள் ஆக்கினான். நொந்து போன தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன், நான் கொடுத்த வரத்தை மீற என்னால் முடியாது. மேலும் மகாதேவன் இமயமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். பார்வதி தனியே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மைந்தனைப் பெற்றால் ஒழிய தாரகனை யாரும் வெல்ல முடியாது என்று சொல்லி விட்டார். தேவர்கள் அனைவரும் சேர்ந்து கந்தர்பன் என்ற பெயருடைய மன்மதனிடம் சென்று ‘எப்படியாவது மகாதேவருடைய நிஷ்டையைக் கலைத்து, பார்வதியை மணந்து கொள்ளுமாறு செய்வாயாக!' என்று வேண்டினர்.
அவர்கள் விருப்பப்படியே மன்மதன் சிவனிருக்கும் இடம் சென்றான். அவன் வரவால் இயற்கையும் கூடக் கால மாறுதலைச் செய்தது. திடீரென்று இளவேனிற்காலம் வந்தது. தென்றல் வந்தது. மரங்கள் மலர்கள் பூத்தன. வண்டுகள் ரீங்காரமிட்டன. பறவைக் கூட்டங்கள் ஜோடி ஜோடியாக இசைபாடிக் களித்தன. சிவபிரான் கண்ணை விழித்தார். அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில் தவம் செய்து கொண் டிருந்த பார்வதியும் இங்கு வந்து சேர்ந்தார். கண்விழித்த சிவபெருமானுக்குச் சுற்றுமுற்றும் பார்க்கையில் திடீரென்று தோன்றிய வசந்தகாலம் யாரால் வந்தது என்று பார்த்தார். தன் தவம் கலைக்கப்பட்டதைப் பார்த்தார். மன்மதன் இங்குமங்கும் ஒடி ஒளிந்து கொள்ள முயற்சிப்பதையும் பார்த்தார். உடனே அவர் நெற்றிக்கண் திறந்தது. மன்மதன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவியாகிய ரதி ஒலமிட்டு அழத் துவங்கினாள். தேவர்கள் சிவபிரானை வந்து வணங்கி, ‘ஐயனே! தாரகாசுரன் கொடுமையைத் தாங்க முடியாத நாங்கள் செய்த சூழ்ச்சிதான் அது. எங்கள் வேண்டுகோளை ஏற்றுத்தான் மன்மதன் இவ்வாறு செய்தான். அவனை மன்னித்து உயிர்ப் பிச்சை தர வேண்டும்” என்று வேண்டினர்.
சிவபிரான், "அது நடவாத காரியம். நடந்தது நடந்து விட்டது. மன்மதன் கிருஷ்ணனின் பிள்ளை பிரத்யும்னனாகத் தோன்றுவான். அதுவரையில் ரதி பொறுத்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டார். தேவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. சிவன் - பார்வதி திருமணம் நடைபெறவில்லை. மன்மதன் சாம்பலானதுதான் மிச்சம்.
பார்வதியின் தவம்
சிவபிரானிடம் மனத்தைப் பறிகொடுத்த பார்வதி, மன்மதனும் எரிந்து விட்டதால் என்ன செய்வது என்று அறியாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். அப்பொழுது நாரதர் தோன்றி, "அம்மா! நான்முகனும், விஷ்ணுவும் கூட சிவனைப் பார்க்க முடியாது. கடும் தவம் ஒன்றினால்தான் அவரைக் காண முடியும். அதைவிடக் கடுமையான தவத்தை மேற்கொண்டால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியும். எனவே தாங்கள் கெளரிசிகரம் என்ற மலையுச்சியை அடைந்து தவத்தில் ஈடுபடுங்கள்” என்று கூறிவிட்டுப் போனார். பார்வதியும் தாய் தந்தையரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, தம் அணிகலன்கள், ஆடைகள் அனைத்தையும் துறந்து மரஉறி
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாயு புராணம் - பகுதி 3 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தவம், மன்மதன், செய்தான், செய்து, நூறு, தேவர்கள், கொண்டு, பார்வதி, பார்த்தார், வந்தது, ", ஆண்டுகள், பிரம்மன், தாரகன், முடியாது