பத்ம புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
விஷ்ணுலோகம் சென்ற எலியின் கதை
திரேதாயுகத்தில் ஒரு விஷ்ணுவின் கோயிலில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த ஊரில் வாழும் ஒரு பக்தன் கோயிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி விட்டுப் போனான். அவன் போனபிறகு திரி கொஞ்சம் மங்கி எரிந்தது. ஆனால் விளக்கில் இருந்து நெய் வாசம் வெகுதூரம் பரவியது. இந்த வாசனை யால் இழுக்கப்பட்ட எலி, மெல்ல வந்து விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க ஆரம்பித்தது. அதன் பயனாக திரி சற்று உயரத்திற்கு வர திடீரென்று அதிக வெளிச்சம் பரவியது. இந்த அதிக வெளிச்சத்தால் விஷ்ணுவின் சிலை. பளிச் சென்று தெரிய ஆரம்பித்தது. சிலையைச் சுற்றியிருந்த இருள் அகன்றது. காலாந்திரத்தில் விளக்கில் இருந்து நெய்யைக் குடித்துச் சென்று எதிர்பாராமல் திரியைத் துண்டிச் சென்ற எலியை ஒரு பாம்பு கடித்து இறந்தது. யம தூதர்கள் வந்து எலியின் ஆவியைக் கட்டி இழுத்துக்கொண்டு யம லோகம் செல்லப் புறப்பட்டனர். திடீரென்று விஷ்ணுவின் பணியாளர் பலர் அங்கே வந்தனர். எமபடர்களைப் பார்த்து, நீங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்! இந்த எலி ஒருநாள் கோயிலுக்குள் இருக்கும் விளக்கைத் தூண்டி, விஷ்ணுவின் சிலைக்குமேல் அதிகமாக ஒளி படரச் செய்தது. இந்தத் தொண்டினால் அது செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டன. என்று கூறிவிட்டு எலியின் ஆவியை விஷ்ணுலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். பலகாலம் விஷ்ணுலோகத்தில் இருந்து மகிழ்ந்த அந்த எலி பின்னர் ஒரு அரசகுமாரியாகப் பிறந்தது. விஷ்ணு கோயிலுக்கு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் மிகப் பெரிய பயனை இக்கதை அறிவிக்கிறது.
திரேதாயுகத்தில் ஸ்ரீதரன் என்ற அரசனும், ஹேமப் பிரபாவதி என்ற அரசியும் சுகமாக வாழ்ந்து வந்தனர். எல்லா சுகம் இருந்தும் தங்கட்குப் பிள்ளை இல்லையே என்ற கவலை வாட்டி வதைத்தது. ஒருமுறை ஸ்ரீதரன் வேத வியாசரை சந்தித்துத் தனக்கு ஏன் பிள்ளை இல்லை என்று கேட்டான். உன்னுடைய பூர்வ ஜென்மத்தில் சந்திரன் என்ற பெயருடைய பிராமணனாக வாழ்ந்தாய். இப்பொழுதுள்ள உன் மனைவி, சங்கரி என்ற பெயருடைய உன் மனைவியாக வாழ்ந்தாள். நீங்கள் இருவரும் ஏதோ ஒரு காரியத்திற்காக அவசரமாகப் புறப்பட்டுச் செல்கையில் ஒரு குழந்தை தண்ணிருக்குள் மூழ்கி இறக்கும் நிலையில் இருந்தது. உங்கள் காரியமே முக்கியம் என்று சட்டை செய்யாமல் போனிர்கள். அதனால் இந்த ஜென்மத்தில் உங்களுக்குப் பிள்ளை இல்லாமல் போய் விட்டது என்றார். அதுகேட்ட ஸ்ரீதரன் இப்பொழுது என்ன செய்யலாம் என்று கேட்க, பூசணிக்காய், பொன் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் குழந்தை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்ம புராணம் - பகுதி 13 - Padma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தர்ம, சர்மா, விஷ்ணுவின், வந்து, ஸ்ரீதரன், பிள்ளை, இருந்து, எலியின், வாழ்ந்து, விளக்கில்