பத்ம புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
மகனே! நாளைக்கு அந்த மந்திரத்தை உபதேசிக்கிறேன். நீ சென்று அவர்கள் காதில் படும்படி இந்த மந்திரத்தைப் பாடி அவர்கள் துயரம் நீங்க உதவி புரிவாயாக. மறுநாள் அந்தக் குஞ்சுக்கிளி அரசன், அவன் மனைவி இருவரும் பிணத்தைத் தின்ன வரும்பொழுது அவர்கள் காதில் படும்படி அந்த மந்திரத்தைப் பாட அவர்கள் இருவரும் இக்கொடுமை யிலிருந்து மீண்டு விஷ்ணுலோகம் சென்றனர்.
அழுகையில் மலர்ந்த மலர்கள்: ஆலமரத்தில் இருந்த குஞ்சலா என்ற தந்தைக் கிளி. கபிஞ்சலா என்ற நான்காவது மகனைப் பார்த்து, மகனே! நீ எங்கேயிருந்து வருகிறாய்? ஏதாவது அதிசயத்தைப் பார்த்தாயா என்றது.
கபிஞ்சலா: ஆம் தந்தையே, நான் தினமும் கைலாச மலைக்குச் செல்கிறேன். கைலாயம் மிக அற்புதமான அழகுடன் இயற்கை எழில் கொஞ்சும் நிலையில் உள்ளது. கங்கை முதல் நூற்றுக்கணக்கான புண்ணிய நதிகள் அங்கே ஒடுகின்றன. கைலாயத்தின் ஒரு புறத்தில் ஒரு பெரிய ஏரியில் நீர் நிறைந்துள்ளது. அந்த ஏரியில் மலர்கள் பூத்துக் குலுங்கு கின்றன. அதன் ஒருபுறத்தில் ஒரு கற்பாறை உள்ளது. அதன் மேல் ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள். அவள் கண்ணிர் ஏரியில் வந்து விழுந்தவுடன் தாமரை மலர் போன்ற ஒரு மலர் பூக்கின்றது. அந்தப் பாறையின் பக்கத்தில் சிவனுடைய விக்கிரகம் உள்ளது. அந்த மலர்ந்த மலரை ஒரு தவசி எடுத்துச் சிவனுக்குச் சாத்துகிறார். பல மலர்களைச் சாத்திய பிறகு பாடுகிறார்; நடனம் ஆடுகிறார். பிறகு ஓவென்று கதறி அழுகிறார். அவர் உடம்பு வெறும் எலும்புக் கூடாகத் தான் இருக்கிறது. காய்ந்து போன சருகுகளையே அவர் உண்கிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தப் பெண் ஏன் அழுகிறாள்? அவள் கண்ணிர் ஏன் மலராக மலருகிறது? அந்தத் தவசி ஏன் அழவேண்டும்? இதன் விளக்கத்தை அறிய வேண்டுகிறேன்.
தந்தை: மகனே கபிஞ்சலா! கைலாயத்தில் மிக அற்புதமான ஒரு நந்தவனம் உண்டு. மிக அற்புதமான மரங்கள் அங்கே பூத்துக் குலுங்கும். ஒருநாள் சிவனும், பார்வதியும் அதைப் பார்க்க வந்தனர். எல்லா மரங்களையும் பார்த்து மகிழ்ந்து வந்த பார்வதி ஒரு குறிப்பிட்ட மரத்தைப் பார்த்து அதிசயித்து நின்றாள். இது என்ன மரம்?' என்று சிவனைக் கேட்டாள். சிவன், இது கற்பக மரம் என்ன வேண்டுமென்று கேட்கின்றாயோ அதைக் கொடுக்கும் என்று கூறியவுடன், பார்வதி அந்த மரத்தைப் பார்த்து, மிக அழகான பெண்ணொருத்தி வேண்டும் எனக் கேட்டாள். அந்தக் கணமே ஈடு இணையில்லா அழகுடன் ஒரு பெண் வந்து பார்வதியை வணங்கி, ‘என் பணி யாது?’ எனக் கேட்டாள். பார்வதி, 'இந்த வனத்திலேயே இருந்து வருவாயாக, நகுஷன் என்ற மன்னன் உன்னை வந்து மணம் செய்துகொள்வான்' என்று கூறிவிட்டு, அசோகசுந்தரி என்று அப்பெண்ணிற்குப் பெயரிட்டு மறைந்தாள். அசோகசுந்தரி அந்த வனத்தில் இருந்து வந்தாள்.
விப்ரசித்தி என்ற அசுரனுக்கு ஹீண்டா என்ற மகன் இருந்தான். அவன் ஒருநாள் கைலாசத்தில் உள்ள நந்தவனத் திற்குச் சென்றான். உடனே அசோகசுந்தரிமேல் காதல் கொண்டு தன்னை மணம் புரிந்து கொள்ளுமாறு வற்புறுத்தி னான். அசோகசுந்தரி மறுக்கவே பல மந்திர தந்திரங்கள் தெரிந்த ஹீண்டா ஒரு பெண் வடிவு எடுத்து, அவளைச் சந்தித்தான். அப் பெண் வடிவை யார் என்று அசோகசுந்தரி கேட்க, அப் பெண் தான் ஒரு விதவை என்றும், தன் ஆசிரமத்தில் தவம் புரிவதாகவும் கூறிவிட்டு, அசோக சுந்தரியைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்தாள். அந்த வார்த்தை களை நம்பிக் கொண்டு அப் புதிய பெண்ணுடன் சென்ற அசோகசுந்தரிக்குப் பெரிய இடையூறு வந்தது. தன் இடம் போனதும், ஹீண்டா தன் பழைய வடிவை எடுத்துக்கொண்டு அசோகசுந்தரியை பலாத்காரம் செய்ய முயன்றான். தன் கணவன் நகுஷன் வந்து கொல்வான் என்று கூறித் தப்பித்து வந்தாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 14 | 15 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பத்ம புராணம் - பகுதி 11 - Padma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அந்த, பெண், அசோகசுந்தரி, பார்த்து, வந்து, ஹீண்டா, கேட்டாள், பார்வதி, ஏரியில், கபிஞ்சலா, அற்புதமான, உள்ளது, மகனே