நாரத புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
அசுரர் வழிவந்த பகீரதன் மிகவும் பலம் பொருந்திய மன்னனாக வாழ்ந்தான். நேர்மை நல்லொழுக்கம் விஷ்ணு பக்தி இவற்றை முழுவதும் பெற்றிருந்ததால் அவனுடைய ஆட்சி மிகவும் சிறப்புற்றிருந்தது.
ஒருநாள் இயமன் பகீரதனைப் பார்க்க வந்தான். பகீரதன் எழுந்து இயமனுக்கு வணக்கம் செய்து, "தெய்வங்களுள் ஒருவரான தாங்கள் என்னைப் போல ஒரு சாதாரண மனிதனைத் தேடி வந்தது என் புண்ணியமாகும். தர்மம் என்றால் என்ன? அது எப்படிச் செய்யப்பட வேண்டும்? என்பதை விரிவாகக் கூறினால் பெரும் பயன் விளையும். தயவு செய்து தர்மத்தைப் பற்றி விளக்க வேண்டுகிறேன்.” என்று கேட்டுக்கொண்டான். இயமன் சொல்ல ஆரம்பித்தான். “பொதுமக்களுக்குப் பயன்படும்படியான குளம் தோண்டுவது நல்ல தர்மம். சிவன், விஷ்ணு ஆகியவர்களுக்குக் கோயில் கட்டுவது பெரும் புண்ணியம். கல்லால் கட்டினாலும் செம்பு முதலான உலோகங்களால் கட்டினாலும் புண்ணியம். ஏழைகளுக்கு உணவு, உடை, மாடுகள், ஆடுகள் முதலிய வற்றைக் கொடுப்பதும் புண்ணியமாகும். மற்ற புண்ணியத் திற்குரிய செயல்கள் மரம் நடுதல், தோட்டம் உண்டாக்கிப் பாதுகாத்தல் ஆகியவையாகும். துளசிச் செடிகளை நட்டு வளர்ப்பது பெரும் புண்ணியம். துளசி மாலை அணிவதும் புண்ணியமாகும். சிவன் அல்லது விஷ்ணு சிலைகளுக்குப் பால், நெய், இளநீர், கரும்புச் சாறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியமாகும். சுக்கிலபட்சக் காலத்தில் பஞ்சமிதிதி, அஷ்டமி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தசி, பெளர்ணமி ஆகிய திதிகளில் சிவன்-விஷ்ணு சிலைகட்குப் புண்ணிய நீரால் அபிஷேகம் செய்வது நல்லது. பசி உடையவர் கட்கு உணவும் தண்ணிரும் தருவதும் நல்லது. இப்படித் தருமம் செய்பவர்கள் நரகத்தையே எட்டிப் பார்க்க மாட்டார்கள். தன்னை அடைக்கலம் என்று அடைந்தவர்கட்கு உதவுகிறவர்கள் பெரும் புண்ணியத்தை அடைகிறார்கள். ஒருவன் பெற்ற கல்வி அறிவை மற்றவர்களுக்கு போதிப்பது பெரும் புண்ணியம் தரும். பொன், வெள்ளி முதலியவற்றையும் தேவையுள்ளவர்களுக்கும் வழங்கலாம். சிவன்-விஷ்ணு சிலைகள் செய்து தானம் செய்யலாம். புண்ணியம் செய்தவர்களுக்குச் சில அடையாளங்கள் உண்டு. இதனால் அவர்களை மற்றவர்களில் இருந்து பிரித்து அடையாளம் கண்டு கொள்ள முடியும். அந்த அடையாளங்களாவன: அவர்கள் பிறரைப் பழி தூற்ற மாட்டார்கள். அவர்கள் பொறி புலன்களைக் கட்டுப்படுத்திய வர்கள் ஆவார்கள். அவர்கள் அதிகமாக உண்ணமாட்டார்கள். அவர்கள் தன் குருவையும், விருந்தினர்களையும் நன்கு உபசரிப்பார்கள். எப்பொழுதும் விஷ்ணுவையும் சிவனையும் நினைத்துக்கொண்டேயிருப்பார்கள். பாவம் என்பது நரகத்தில் ஒருவரைக் கொண்டு செலுத்தும். பிறர் பொருளைத் திருடுவது பாவம். தருமம் முதலானவற்றைச் செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டுப் பிறகு செய்யாமல் பின்வாங்குவது பாவம். அகங்காரம் அடைவதும் பாவம். மருத்துவம், சோதிடம் முதலியவற்றில் நல்ல பயிற்சி இல்லாமல் செய்வதும் சொல்வதும் பாவம். பிறர் பழி தூற்றுதல், பிறரை அவமானமாகப் பேசுதல், ஆடம்பரம், பெய் பேசுதல், பிறரை ஏமாற்றுதல், கொலை ஆகியவையும் பெரும் பாவங்களாகும். ஒரு பாவியுடன் பழகுவதும் பாவம். பாவங்களைப் போக்கத் தவம் மேற் கொள்வது நல்ல வழியாகும்.
“விஷ்ணு பாவம் போக்குகிறார். செய்யும் காரியங்களின் பலாபலன்களை விஷ்ணுவினிடமே விட்டுவிட வேண்டும். விஷ்ணு பக்தி மிக முக்கியமானதாகும். விஷ்ணு பக்தி பல வகைப்படும். அவை சத்துவ, ராஜச, தாமச குணங்களைப் பொறுத்து வேறுபடும். பிறருடைய அழிவுக்காக விஷ்ணுவை வேண்டுவது அதம-தாமச குணமாகும். விஷ்ணுவுக்கு வழிபாடு செய்வது போலப் பாசாங்கு செய்வது மத்தியமதாமச குணமாகும். மற்றவர்கள் வழிபாடு செய்வதைப் பார்த்துத் தானும் விஷ்ணுவை வழிபடுவது உத்தம-தாமச குணமாகும். விஷ்ணுவை வழிபட்டுப் பொன்னும் பொருளும் வேண்டும் என்பது அதம-ராஜச குணமாகும். பெரிய காரியங்களைச் செய்துவிட்டு அதனால் புகழடைய விரும்பு வதும் மத்தியம-ராஜச குணமாகும். மயக்கம், அஞ்ஞானம் என்பவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்பது உத்தம-ராஜச குணமாகும். தான் செய்த பாவங்களில் இருந்து விடுதலை வேண்டும் என விரும்புவது அதம-சாத்விக குணமாகும். விஷ்ணு மகிழ்ச்சி அடைவார் என்று நினைத்துப் பிரார்த்தனை செய்வது மத்தியம-சாத்விக குணமாகும். எந்த ஒன்றையும் விரும்பாமல் பிரார்த்தனையைப் பிரார்த்தனைக்காகவே செய்வது உத்தம-சாத்விக குணமாகும். இங்குக் கூறப்பட்ட ஒன்பது வகை பக்திகளுக்கும் மேலாக மற்றொரு வகை பக்தி இருக்கிறது. அது உத்தமோதம பக்தி எனப்படும். அதாவது விஷ்ணுவை தியானம் செய்யும்போது, தான் வேறு விஷ்ணு வேறு என்று நினைக்காமல் ஒன்றாகவே இருப்பது உத்தமோதம பக்தியாகும்.”
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 16 | 17 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத புராணம் - பகுதி 8 - Narada Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, குணமாகும், விஷ்ணு, பாவம், பெரும், செய்வது, புண்ணியம், வேண்டும், பக்தி, ராஜச, புண்ணியமாகும், சிவன், விஷ்ணுவை, உத்தம, சாத்விக, என்பது, செய்து, நல்ல, தாமச