மச்ச புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
மன்வந்திரங்கள்
பிரம்மனுடைய ஒரு நாள் ஒரு கல்பம் எனப்படும். அவருடைய ஒரு நாளில் இந்த உலகைப் பொருத்தவரையில் பதினான்கு மன்வந்திரங்கள் வந்து போகின்றன. ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், இப்பூமி இல்லாமல், அண்டம் முழுவதும் அழிக்கப்படுகிறது. அழிக்கப்பட்ட பிறகு புதிய உற்பத்தி தொடங்குகிறது.
இப்பொழுது நடைபெறுகின்றது ஏழாவது மன்வந்திரம் ஆகும். ஆறு மன்வந்திரங்கள் முன்னரே வந்து போய்விட்டன. இந்த அண்டம் மறுபடியும் அழிவை எய்துவதற்கு இப் பொழுது நடைபெறுகின்ற மன்வந்திரம் போக இன்னும் ஏழு மன்வந்திரங்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு மன்வந்திரத்திலும் தெய்வங்களும், சப்த ரிஷிகளும், இந்திரர்களாக மாறுகின்றனர்.
1. முதல் மன்வந்திரம் சுவயம்பு மனு-தேவர்கள்; யமன்கள்.
2. இரண்டாவது ஸ்வரோசிஷா மன்வந்திரம்-தூத்ரஸ், முனிவர்கள் : தத்தோலி சாயாவனா, ஸ்தம்பா, ப்ரனா, காசிப, ஒளர்வா, பிரஹஸ்பதி.
3. மூன்றாவது - ஒளத்தமாவே மூன்றாவது மனு. தேவர்களுக்குப் பாவனர்கள் என்று பெயர். கெளகுருந்தி, டால்பியா, சங்கா, பிரவாஹனா, சிவா, சீதா, சஸ்மிதா ஆகியோர் சப்த ரிஷிகளாவர்.
4. நான்காவது தாமசமே நான்காவது மனு. ஏழு முனிவர்கள் - கவி, பிருத்து, அக்னி, அகபி, கபி, ஜல்பா திமனா தேவர்களுக்கு சாத்யாஸ் என்று பெயர்.
5. ஐந்தாவது ரெய்வதாவே ஐந்தாவது மனு, தேவர்கள் அபுதரஜஸ் எனப்பட்டனர். தேவவாஹீ. சுவாஹீ, பார்ஜன்ய, சோமபாமுனி, ஹிரண்ய ரோமா, சப்தஷ்வா ஆகிய சப்த ரிஷிகள்.
6. ஆறாவது - சக்ஷீஸாவ ஆறாவது மனு. தேவர்கள் லேகாஸ் எனப்பட்டனர். சப்தரிஷிகள், பிருகு, சுதாமா, விரஜா, சஹிஷீனு, நதா வைவஸ்வன், அடினமா.
7. ஏழாவது - இப்பொழுது நடைபெறும் மன்வந்திரம். வைவஸ்வத மனு என்று பெயர். அத்ரி, வசிட்டர், காசிபர், கெளதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்கினி ஆகிய ஏழு ரிஷிகள். தேவர்கள் சத்யாஸ் எனப்பட்டனர்.
8. எட்டாவது - சாவர்ணி எட்டாவது மனு, அஸ்வதாமா, சரத்வன, கெளசிகா, காலவ, விடானந்த, காசிடர், ராமா ஆகியோர் சப்த ரிஷிகளாவர்.
9. ஒன்பதாவது மனு ரெளக்யா, பத்தாவது மனு பெளத்யா, பதினோராவது மனு மேருசாவரணி, பன்னிரண்டாவது மனு ரிதா, பதின்மூன்றாவது மனு ரித்தமா, பதினான்காவது மனு விஸ்வகேசனா ஆகியவர் ஆகும். இதன் பின்பு பிருத்துவின் தோற்றம் விவரிக்கப்படுகிறது.
சூரிய வம்சம் காசியப முனிவன் அதிதி மூலம் பெற்ற மகன் வைவஸ்வத மனு ஆவான். இவனே சூரியனும் ஆவான். இவனுக்கு மூன்று மனைவியர் இருந்தனர். இவருள் சம்ஜனா என்பவருக்கு வைவஸ்வத மனு என்ற பிள்ளையும், யமன், யமுனா என்ற இரட்டைப் பிள்ளைகளும் பிறந்தனர். இரண்டாவது மனைவியாகிய ரஜனிக்கு ரேவதா என்ற மகனும், மூன்றாவது மனைவியான பிரபா என்பவருக்கு பிரபதா என்ற மகனும் தோன்றினர்.
சூரியனின் மிகுதியான ஆற்றலைத் தாங்க முடியாத சம்ஜனா தன்னைப் போலவே ஒரு பெண்ணைத் தன் உடம்பிலிருந்து உண்டாக்கினாள். அந்த வடிவத்திற்குச் சாயா என்று பெயர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மச்ச புராணம் - பகுதி 4 - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, மன்வந்திரம், பெயர், மன்வந்திரங்கள், தேவர்கள், சப்த, வைவஸ்வத, எனப்பட்டனர், மூன்றாவது