கருட புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
ஜூரம் என்று எடுத்துக் கொண்டால் அது பலவகைப்படும். விக்கல், வாந்தி, தோலில் கொப்புளங்கள் தோன்றுதல், பசியின்மை, சோர்வு, தூங்கிவிழுதல் என்பவை போகத் தலைவலி, உடல்வலி, வலிப்பு, மயக்கம், தூக்கமின்மை, ஜன்னி, அதீதமான வியர்வை, தாகம் ஆகிய அறிகுறிகளும் தோன்றலாம். இது ஜுரத்தின் நிதானா பகுதி ஆகும். இவற்றுள் எந்தெந்த அறிகுறிகள் காணப்படுகின்றன என்பதைப் பொறுமையாக இருந்து சோதிக்க வேண்டும். இவற்றை அடுத்து கருடபுராணம், கபக்காய்ச்சல், கூடியரோகம், இதயக்கோளாறு, கல்லீரல் தொழிற்படாமை, வயிறு சம்பந்தமான நோய்கள், மூலம், பூச்சிகள், கீல்வாதம் என்பன போன்ற நோய்களும் அவற்றின் அறிகுறிகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. எந்தெந்த நோய்க்கு எந்தெந்த மருந்துகள் என்பதையும் கோடைக்காலம், மழைக்காலம் போன்ற காலவேறுபாட்டை அறிந்து மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நோயை அறிய முற்படும்பொழுது அது வாயு, பித்தம், கபம் என்ற மூன்றில் எதனோடு தொடர்புடையது என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
கவசங்கள்
கவசங்களுள் மிக முக்கியமானது விஷ்ணு கவசம் ஆகும். இதை அணியும் பொழுது பின்வரும் பிரார்த்தனையுடன் அணியவேண்டும்.
பெரிய ஜனார்த்தனனை வழிபட்டு இந்தக் கவசத்தை அணிகிறேன். அந்த ஜனார்த்தனன் நோய்களில் இருந்து என்னைக் காப்பானாக. விஷ்ணு முன்பகுதியைக் காக்க, கிருஷ்ணன் பின்பகுதியைக் காக்க, ஹரி தலையைக் காக்க, ஜனார்த்தனன் இருதயத்தைக் காக்க, ரிஷிகேசன் மனத்தைக் காக்க, கேசவன் நாக்கைக் காக்க, வாசுதேவன் கண்களைக் காக்க, சங்கர்சக காதுகளைக் காக்க, பிரத்யும்னன் மூக்கைக் காக்க, அனிருத்தன் தோலினைக் காக்க, வனமாலி கன்னத்தைக் காக்க, ஸ்ரீவத்ஸன் கீழ்ப்பகுதியைக் காக்க, விஷ்ணுவின் சக்கரம் இடப்புறம் காக்க விஷ்ணுவின் கதை வலப்புறம் காக்க கருடன் என் முயற்சிகளைக் காக்க.
வராகம் என்னை நீரில் காக்க, வாமனம் ஆபத்தில் காக்க நரசிம்மம் கர்க்க கேசவன் எங்கும் காக்க விஷ்ணு எதிரிகளிடமிருந்து காக்க, விஷ்ணு என் பாவங்களைப் போக்க, என் மனத்தைக் காத்து,
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருட புராணம் - பகுதி 6 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, காக்க, எனப்படும், அறிகுறிகள், விஷ்ணு, எந்தெந்த, அறிகுறிகளும், வேண்டும்