கருட புராணம் - பகுதி 15 - பதினெண் புராணங்கள்
புலன்கள் ஐந்து வகைப்படும். சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் ஆகியவை ஐம்புலன்கள் ஆகும். இந்தப் புலன்களுக் குரிய பொறிகள் வாய், கண், உடல், காது, மூக்கு என்பவை ஆகும். செயல்படும் கருவிகள், கை, கால், நா முதலியவை. பத்து வகை நாடிகள் உடம்பில் உள்ளன. அவையாவன: இட, பிங்கல சுஷ்மன, காந்தாரி, ஹந்தி, ஜிஹ்வா, புஷாயஷா, அலம்புஷா, குஹீ. சங்கினி என்பவையாம்.
பத்துவகை வாயுக்கள் உடலில் உள்ளன:- அபானம், சமான, உதானம், வியானம், நாக, கூர்ம, கிரிகர, தேவதத்தா, தனஞ்செயன் முதலியவை ஆகும். மனிதனின் உடலில் மூன்றரைக் கோடி ரோமங்கள் உள்ளன. தலையில் மூன்று லட்சம் ரோமங்கள் உள்ளன. முப்பத்திரண்டு பற்களும், இருபது நகங்களும் உள்ளன. ஆயிரம் பலம் (அன்றைய அளவு முறை) எடை சதை, நூறு பலம் எடை ரத்தம், பத்து பலம் எடை கொழுப்பு, பத்து பலம் எடை தோல், பன்னிரண்டு பலம் எடை எலும்பு ஜவ்வு உள்ளதென அறிஞர் கூறுவர்.
மனித உடலுக்கும், பூமிக்கும் ஒருவகை ஒற்றுமை உள்ளது. இடுப்பின் கீழே உள்ள பகுதி பாதாள லோகத்துடனும், இடுப்பிற்கு மேற்பட்ட பகுதி பூமிக்கு மேலே உள்ள உலகங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளது. குதிகால்கள் தாள லோகத்துடனும், கணுக்கால்கள் விதல லோகத்துடனும், கெண்டைக்கால் சுதல லோகத்துடனும், முட்டிக்கால் தராதல லோகத்துடனும், தொடைகள் ராஜாள லோகத்துடனும், இடுப்பு பாதாள லோகத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது. கொப்பூழ் பூலோகத்துடனும், வயிறு புவர்லோகத்துடனும், இருதயம் சொர்க்க லோகத்துடனும், தொண்டை மகரலோகத்துடனும், முகம் ஜனலோகத்துடனும், நெற்றி தடலோகத்துடனும், உச்சந் தலை சத்திய லோகத்துடனும் தொடர்புடையது. இவ்வாறாகப் பதினான்கு லோகங்கள் மனிதனின் உடம்புடன் தொடர்பு கொண்டுள்ளன.
தீர்த்தங்கள்
புண்ணிய ஸ்தலம் எனப்படும் இடமே தீர்த்தமாகும். கங்கையும், அதனைச் சார்ந்த இடங்களும் மிகப் புண்ணியம் வாய்ந்த இடங்களாகும். அவற்றில் மிகச் சிறப்பானவை ஹரித்துவாரா, பிரயாகை, கங்கா சாகரம் முதலியவையாகும்.
வாரணாசியும் சிறந்த தீர்த்தமாகும். ஏனெனில் சிவனும், விஷ்ணுவும் அங்கு எப்பொழுதும் இருக்கின்றனர். தானம் செய்வதற்குக் குருக்ஷேத்திரம் சிறந்த இடமாகும். பிரபசா, துவாரகை, சரஸ்வதி, கேதாரம் ஆகிய இடங்களும் புண்ணிய பூமிகளாகக் கருதப்படுகின்றன. ஒருவர் புண்ணிய பூமிக்குச் சென்றுதான், பரப்பிரம்மத்தை நினைத்துத் தவம் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் அமர்ந்து பரப்பிரம்மனை நினைத்துத் தியானம் செய்தால், அந்த வீடே புண்ணிய தீர்த்தத்தின் மகிமையைப் பெறுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருட புராணம் - பகுதி 15 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, லோகத்துடனும், பலம், புண்ணிய, தொடர்பு, பத்து, ஆகும்