கருட புராணம் - பகுதி 5 - பதினெண் புராணங்கள்
ஒர் அரசன் என்பவன் தன் பகைவர்களை வென்று, குடிமக்கள் நலமுடன் வாழ வழிவகுக்க வேண்டும்.
மாலை கட்டுபவன் செடி, கொடிகள், மரங்கள் என்பவற்றில் இருந்து தனக்கு வேண்டுமான பூக்களைப் பறித்துக் கொள்கிறானே தவிர, அச்செடி கொடி மரங்களை வேரோடு பிடுங்குவதில்லை. அதேபோல, அரசன் நாட்டைக் காப்பதற்குத் தேவையான பொருளை வரிமூலம் வசூல் செய்யலாம். ஆனால் அந்த வரிச்சுமை வரி செலுத்துவோரை ஆண்டிகளாக ஆக்கிவிடக் கூடாது. பூப்பறிக்கும் ஒருவன் அச்செடி கொடிகளுக்கு நீர் விட்டுக் காப்பது போல அரசனும் வரிப்பணம் செலுத்தும் குடிமக்கள் நலமுடன் வாழ தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
குடிமக்களிடமிருந்து வசூல் செய்யும் வரிப்பணத்தை ஆடம்பரம், கேளிக்கை என்பவற்றில் செலவிடாது, பயனுடைய வழியில் செலவு செய்ய வேண்டும். அரசன் குடிமக்களைத் தன் குழந்தைகள் போலப் பாதுகாக்க வேண்டும். அரசன் புரோகிதர்கள், அமைச்சர்கள், பணியாளர்கள் என்பவர்களை நியமிக்கும் பொழுது மிக்க கவனத்துடன் இருக்க வேண்டும். நன்கு ஆராய்ந்து, ஒவ்வொருடைய தகுதி, பண்பு, விசுவாசம் என்பவற்றை ஆராய்ந்தே இவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும். பிரச்சினைகள், இடையூறுகள் வரும் பொழுது மன்னன் மனம் கலங்கிவிடக் கூடாது. அதற்கெதிராக, மனத் துணிவோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். இராகுவால் பிடிக்கப்பட்ட சந்திரன் மறுபடியும் அதிலிருந்து விடுதலை அடைவது போல், அரசனுக்கு வரும் இடையூறு களையும், பிரச்சினைகளையும் தக்க முறையில் சந்தித்தால் நீங்கிவிடும். பணியாளர்களை அன்புடன் நடத்தாமல் எப்பொழுதும் ஏசிக்கொண்டே இருந்தால் அவர்கள் மனம் ஒடிந்து பணிகளைச் செவ்வனே செய்யமாட்டார்கள்.
ஒர் அரசனிடம் ஆறுவகையான இயல்புகள் எதிர் பார்க்கப்படுகின்றன. அவையாவன: ஊக்கமுடைமை, மனத்தைரியம், பொறுமை, அறிவுடைமை, வண்மை, உடல் வலிமை என்பவையாம். அமைச்சர்கள், மருத்துவர்கள் என்பவர்களை நியமனம் செய்யும் பொழுது, மிக்க கவனத்துடன் அவர்களுடைய அரச விசுவாசத்தைப் பல வழிகளில் ஆராய்ந்து, சோதனை செய்து அதன் பின்னரே அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும்.
மருத்துவம்
தன்வந்திரி, சுஷ்ருதா என்ற முனிவருக்கு ஆயுர்வேதங் களைக் கற்றுத் தந்தது பற்றி, ஆயுர்வேத நூல்கள் விரிவாகப் பேசுகின்றன. கருடபுராணம் நான்கு அத்தியாயங்களில் இதை அப்படியே எடுத்துக் கூறுகிறது. ஒரு நோயைக் கண்டு அறிவது, சிகிச்சை அளிப்பது என்பதை ஐந்து படிகளாக ஆயுர்வேதம் கூறுகிறது. அதையே கருட புராணமும் சொல்கிறது. ஐந்து படிகள் பின்வருமாறு: முதலாவது நிதானா என்று சொல்லப் படும் ஒரு நோய் தோன்றுவதற்குரிய அறிகுறிகள் வெளிப் படையாகத் தெரிவதற்கு முன்னரே குறிப்பிட்ட நோய் வர வாய்ப்புள்ளது என்று அறிவதே நிதானா எனப்படும். உதக பூர்வரூபோ எனப்படும்- நோய் ஒருவனைத் தாக்கு வதற்கு முன்னர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருட புராணம் - பகுதி 5 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், அரசன், நோய், பொழுது