கருட புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
முதல் வீட்டில் சுக்கிரனும், சந்திரனும் இரண்டாம் வீட்டில் சந்திரன், புதன், சுக்ரன், குரு மூன்றில் செவ்வாய், சனி, சூரியன்; நான்கில் புதன் ஐந்தில் சுக்கிரன், குரு, சந்திரன், கேது, ஆறில் சனி, சூரியன், செவ்வாய் ஏழில் குரு சந்திரன், எட்டில் புதன், சுக்கிரன், ஒன்பதில் குரு பத்தில் சூரியன், சனி, சந்திரன்; பதினொன்றில் எந்த கிரகம் இருந்தாலும்; பன்னிரண்டாம் வீட்டில் புதன், சுக்கிரன் இருந்தால் நலம் பயக்கும்.
ருச்சி
முன்னொரு காலத்தில் ருச்சி என்ற முனிவர் இளமைப் பருவம் தொட்டே உலக பந்த பாசங்களில் அகப்படாமல் ஊர் சுற்றுவதையே தொழிலாகக் கொண்டிருந்தார். தியானம் செய்த நேரம் போக, சுற்றி வருவதையே தொழிலாகக் கொண்டிருந்த அவரை அவர் பிதுர்க்கள் ஒருமுறை சந்தித்துப் பின்வருமாறு கூறினர்.
“ருச்சி! நீ இவ்வாறு எதிலும் பற்றில்லாமல் சுற்றி வருவது பட்டதன் நோக்கம் ஒருவன் ஒருத்தியை மணந்து குழந்தைகள் பெற்று, நேர்மையான வழியில் வாழ்ந்து வாழ்வின் பயனை அடைவதாகும். இல்லறத்தில் இருக்கின்ற காரணத்தால் பந்த பாசங்கள் ஒட்டிக் கொள்ளும் என்று நினைப்பது தவறு. உலகத்தில் இருந்தபடியே கடமைகளைச் செய்து கொண்டு ஒன்றிலும் பற்று வைக்காமல் வாழ முடியும். அப்படி வாழ்வதற்காகத்தான் உலகம் படைக்கப்பட்டுள்ளது” என்று கூறினர்.
ருச்சி முன்னோர்களைப் பார்த்து, 'பரம ஏழையாயும், இளமைப் பருவம் இல்லாதவனாகவும் இருக்கும் எனக்கு யார் பெண் தருவார்கள்? என்று கேட்க, 'பிரம்மனை நோக்கித் தவம் செய்க என்று முன்னோர் கூறினர்.
அதன்படியே ருச்சி, நூறு ஆண்டுகள் பிரம்மனை நோக்கித் தவம் செய்தான். பிரம்மன் தோன்றி, பிரம்மலோச்சா என்ற அப்ஸரஸின் மகளை மணந்து கொள்ளுமாறு பணித்தார். அக்கட்டளைப்படி மானினி என்ற பெண்ணை மணந்து வாழ்ந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருட புராணம் - பகுதி 4 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, இருந்தால், வீட்டில், சந்திரன், ஜென்ம, ருச்சி, குரு, புதன், மணந்து, கூறினர், சூரியன், சுக்கிரன்