பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
லட்சுமி
கிருஷ்ணனின் இடப்பாகத்தில் இருந்து ஒரு தேவதை தோன்றினாள். அவள் தானே இரண்டாகப் பிளந்து, லட்சுமி யாகவும், ராதிகா ஆகவும் ஆனாள். ஆடனன் இடப்புறத்தில் இருந்து நான்கு கைகளுடன் நாராயணனும், வலப்புறத்தில் இருந்து கிருஷ்ணனும் தோன்றினர். ராதிகாவை மணந்து கிருஷ்ணன் கோலோகமும், லட்சுமியை மணந்து விஷ்ணு வைகுந்த லோகமும் சென்றனர்.
லட்சுமியை வைகுந்தத்தில் சொர்க்கலட்சுமி என்றும், இல்லங்களில் கிருகலட்சுமி என்றும், அரசிகளில் ராஜலட்சுமி என்றும் அழைக்கிறார்கள். பிரம்மா, சிவன், விஷ்ணு இவர்களால் வணங்கப்பட்டவள் லட்சுமி.
ஒருநாள் இந்திரன் ஐராவதத்தில் வரும்பொழுது துர்வாச முனிவர் விஷ்ணுவிடம் நேரடியாகப் பெற்ற தெய்வீக சக்தி வாய்ந்த பாரிஜாத மலரை இந்திரனுக்குக் கொடுத்தார். எல்லை மீறிக் குடித்திருந்த இந்திரன் அம்மலரை வாங்கி தான் ஏறி இருந்த ஐராவதம் யானைமேல் வைத்தான். மலரின் அருமை அறியாமல் அதனை அலட்சியப்படுத்திய இந்திரனைப் பார்த்து, லட்சுமி உன்னை விட்டு நீங்கி விடுவாள். நீ ஏறியுள்ள ஐராவதத்தின் தலை வெட்டப்பட்டு, சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த கணேசருக்குப் பொருத்தப்படும் என்று சாபம் கொடுத்தார். மிக்க துயரம் அடைந்த இந்திரன் எல்லா வற்றையும் இழந்த நிலையில் பிரம்மாவிடம் சென்று முறையிட, அவர் நானொன்றும் செய்ய முடியாது. விஷ்ணுவிடம் போகலாம் என்று இந்திரனை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் போனார். விஷ்ணு இந்திரனைப் பார்த்து, நீ இழந்த அத்தனையும் லட்சுமி உள்பட உன்னிடம் வருமாறு செய்கிறேன் என்று கூறிச் சென்றார்.
லட்சுமியைத் திருப்திப்படுத்த தானதருமங்கள் செய்ய வேண்டும். வீட்டில் துளசிச் செடியை வளர்க்க வேண்டும். சங்கு, சாலக்கிரமம் ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும். இதனை அடுத்து பிரம்ம வைவர்த்த புராணத்தில் பாற்கடல் கடைந்த கதை பல முரண்பாடுகளுடன் பேசப்படுகிறது. இந்தக் கதை வேறு பல புராணங்களில் காணப்பட்டாலும் இந்தப் புராணத்தில் பல மாற்றங்களுடன் காணப்படுகிறது. முற் பகுதியில் ஐராவதம் கதையைச் சொல்லிவிட்டு, பிற்பகுதியில் ஐராவதம் பாற்கடலில் இருந்து விழுவதாகக் கூறுவது குழப்பத்தை விளைவிப்பதாகும்.
(அரசன் சுராதாவும், வைசிபன் சமாதியும் தங்கள் குறைகளை முனிவர் மேதாவிடம் கூற அவர் துர்க்கையை வழிபடுமாறு கூறுகிறார். இக்கதை ஏற்கெனவே மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை அறியவும். மார்க்கண்டேய புராணப்படி மேதா முனிவர் துர்க்காசப்தசதி என்ற எழுநூறு மந்திரங்களால் சண்டிஹோமம் செய்வித்தார் என்பதும், அந்த'ஹோமத்தின் இறுதியில் துர்க்கையின் அருளால் சுராதாவிற்கு அவனுடைய ராஜ்ஜியம் திரும்பக் கிடைத்தது என்பதும் அம்பிகையின் அருளில் தோய்ந்த அவன் ராஜ்ஜியம் வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்றான் என்பதும் இப்புராணத்தில் இடம் பெறவில்லை),
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம வைவர்த்த புராணம் - பகுதி 10 - Brahma Vaivarta Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, லட்சுமி, இருந்து, வேண்டும், புராணத்தில், என்பதும், ஐராவதம், இந்திரன், என்றும், யாகம், முனிவர், விஷ்ணுவிடம்