பிரம்ம புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
தட்சன், அசிக்கிளி என்பவளை மணந்து ஐயாயிரம் பிள்ளைகள் பெற்றனர். இவர்கள் உலகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க முனைந்த பொழுது, நாரதர் அங்கு தோன்றி, "உலகம் எப்படிப்பட்டது, பூகோள அமைப்பு எப்படி என்பதை அறிந்து கொள்ளாமல் நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது தவறு. எல்லாரும் சென்று உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்த பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்கலாம்” என்று கூறினார். அதன்படியே தட்சனின் மைந்தர்கள் ஐயாயிரவரும் உலகைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டுச் சென்றனர். சென்றவர்கள் சென்றவர்கள்தான். திரும்பவேயில்லை. தட்சன் மறுபடியும் ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றான். இவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்கப் புறப்பட்ட பொழுது மறுபடியும் நாரதர் தோன்றி இவர்களது மூத்த சகோதரர்களுக்குச் சொன்னவற்றையே திரும்பக் கூறினார். இந்த ஆயிரவரும் உலகைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். சென்றவர்கள் மீளவே இல்லை.
தன்னுடைய ஆயிரம் பிள்ளைகளும் நாரதரின் புத்திமதியைக் கேட்டு அதன்வழி நடக்கத் தொடங்கிக் காணாமலே போய்விட்டார்கள் என்பதனால், நாரதர்பேரில் தட்சனுக்கு அளவற்ற கோபம் உண்டாயிற்று. எப்படியாவது நாரதரைக் கொன்று விட வேண்டும் என்று தட்சன் முயல்கையில் பிரம்மா குறுக்கிட்டார். நாரதரைக் கொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காகச் சில வரையறைகளை பிரம்மா நிறைவேற்ற வேண்டும் என்று தட்சன் கூறிவிட்டான். அவ்வரையறைகளின்படி தட்சன் பெண்களுள் ஒருத்தியை பிரம்மா மணந்துகொள்ள வேண்டும். அவள் வயிற்றில் நாரதர் வந்து பிறக்க வேண்டும் என்பனவாகும். தட்சனுக்கு 60 பெண்கள் இருந்தார்கள். அவர்களுள் 27 பெண்களை சோமன் என்றழைக்கப்படும் சந்திரனும், பத்துப் பெண்களை தர்ம தேவதையும், எஞ்சிய பெண்களை ஆங்கீரசா முதலிய முனிவர்களும் மணம் செய்து கொண்டனர். இவருள் ப்ரியா என்பவளை மட்டும் பிரம்மன் மணந்து கொண்டான். தர்ம தேவதையை மணந்த பத்துப் பெண்களுள் அருந்ததிக்கு 'உலகத்திலுள்ள பொருள்கள்’ எனும் குழந்தைகளும், வசுவிற்கு "அஷ்டவசுக்கள் என்ற எட்டுக் குழந்தைகளும் பிறந்தன. அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய அனலன் என்பவனுக்குக் “குமரன்” எனும் பிள்ளை பிறந்தான். இந்தக் குமரன் என்ற பிள்ளையை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையின் அவன் 'கார்த்திகேயன்’ எனப் பெயர் பெற்றான். அஷ்ட வசுக்களுள் ஒருவனாகிய பிரபசாவுக்கு விஸ்வகர்மா பிள்ளையாகப் பிறந்தான். விஸ்வகர்மா சிறந்த கட்டடக் கலைஞனாகவும், ஆபரணங்கள் செய்வதில் தேர்ந்தவ னாகவும் இருந்தான். சோமனை மணந்த 27 பெண்களும் 27 நட்சத்திரங்கள் எனப்பட்டனர். தட்சனுடைய எஞ்சிய பெண்களில் காசிப முனிவன் 13 பெண்களை மணந்தான். அவருள் அதிதி என்ற பெண்ணுக்கு 12 ஆதித்தர்களும், திதி என்ற பெண்ணுக்கு ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன் முதலிய அரக்கர்களும், அவர்கள் சகோதரியாகிய சிம்ஹிகாவிற்கு வாதாபி, வில்வலன், மாரீச்சன் முதலிய அரக்கர்களும் தோன்றினர்.
அர்ஷிதா என்ற பெண்ணுக்கு கந்தர்வர்கள் மக்களாகத் தோன்றினர். சுரசா என்பவளுக்குப் பாம்புகள் பிறந்தன. காஷா என்ற பெண்ணிற்கு குபேரனுக்கு நண்பர்களாகிய யக்ஷர்கள் தோன்றினர். சுரபியின் வயிற்றில் பசுக்களும், எருமைகளும் தோன்றின. வினதாவிற்குப் பறவைகளின் அரசனாகிய கருடனும், அருணாவும் மக்களாகத் தோன்றினர். தாமராவின் வழியில் ஆந்தைகள், வல்லூறுகள், காகங்கள், குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள் தோன்றின. குரோத வஷாவிற்கு 14,000 பாம்புகள் பிறந்தன. இலா என்பவள் வயிற்றில் மரங்கள், செடி கொடிகள் தோன்றின. கத்ரு என்ற பெண்ணின் வயிற்றில் அனந்தன், வாசுகி, தட்சகன், நகுசன் முதலிய நாகங்கள் தோன்றின. முனி என்ற பெண்ணிற்கு அப்சரஸ்கள் பெண்களாகத் தோன்றினர்.
அதிதியின் பிள்ளைகளாகிய தேவர்களுக்கும், திதியின் பிள்ளைகளாகிய அசுரர்களுக்கும் ஓயாது போர் நடந்தது. பல அசுரர்கள் தேவர்கள் தலைவனாகிய இந்திரனால் கொல்லப்பட்டனர். இதனை அறிந்த திதி இந்திரனைக் கொல்ல தனக்கு ஒரு பிள்ளை வேண்டுமென விரும்பினாள். அப்படி
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 3 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தட்சன், வேண்டும், தோன்றினர், பெண்களை, முதலிய, வயிற்றில், ஆட்சிப், தோன்றின, பொறுப்பை, பெண்ணுக்கு, பிரம்மா, நாரதர், சுற்றிப், பிறந்தன