பிரம்ம புராணம் - பகுதி 14 - பதினெண் புராணங்கள்
நாகேஸ்வரனின் கதை
பிரதிஷ்டனா என்ற நகரை “சுரசேனா என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். நீண்ட காலம் அவனுக்கு மகப்பேறு இல்லை. பல தவங்கள் செய்து இறுதியாக ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் என்ன துரதிஷ்டம்! அக்குழந்தை மனித உருவுடன் இல்லாமல் ஒரு பாம்பாக அமைந்துவிட்டது. அரசனும் அரசியும் யாருக்கும் சொல்லாமல் அக்குழந்தையை வளர்த்தார்கள். திருமணப் பருவம் வந்தவுடன் அப்பாம்புப் பிள்ளை, “உடனே எனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” என்றது. பெற்றோர் என்ன செய்ய முடியும்? அமைச்சனிடம் நடந்தவற்றை அரசன் கூறினான். வயது முதிர்ந்த அமைச்ச னொருவன் அதற்கொரு வழியைக் கண்டான். “கீழ்த்திசையை ஆட்சி செய்யும் விஜயன் என்ற மன்னனுக்கு போகவதி என்ற அழகான பெண் இருக்கிறாள். அவளை மணமுடித்து வைக்கிறேன்.” என்று கூறிவிட்டுப் பிறகு அக்கிழ அமைச்சர் விஜயனிடம் சென்று பெண் பேசினார். அவன் ஒத்துக் கொண்ட பொழுது ராஜபுத்திர முறையில் மணமகன் வராமல் அவனுடைய வாளுக்கு மாலையிட்டாள் போகவதி. திருமணம் முடிந்த பிறகு புகுந்த வீட்டிற்கு வந்தாள் போகவதி. மணப் பெண்ணைத் தனியாக அழைத்து, "இந்த வீட்டில் ஒரு தேவன் பாம்பு வடிவத்துடன் இருக்கிறான். அவனுக்குத்தான் நீ மாலையிட்டாய்” என்று ஒரு தாதி கூறினாள். தேவன் என்று கூறியவுடன் மணமகள் மகிழ்ச்சி அடைந்து பாம்புக் கணவனைப் பார்க்கச் சென்றாள். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர். முற்பிறவியில் இருவரும் கைலாயத்தில் சிவனின் ஆபரணமாக இருந்தனர். இருவரும் இப்பொழுது கங்கையில் சென்று குளித்தனர். மூழ்கி எழுந்தவுடன் பாம்புக் கணவன் அழகான மனித தேகத்தைப் பெற்றுவிட்டான். நீண்ட காலம் ஆட்சி செய்த பிறகு இருவரும் கைலை சென்றடைந்தனர்.
நான்முகன் கதை
முன்னொரு காலத்தில் தேவாசுரப் போர் மிகக் கடுமையாக நடந்தது. இப்போரில் தேவர்கள் தோற்றனர். தோற்ற தேவர்கள் பிரம்மாவிடம் ஒடிச் சென்று தங்கள் பரிதாபமான நிலையைக் கூறி வருந்தினர். அப்பொழுதெல்லாம் பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. நான்கு தலைகள் வடிவுக்கேற்ற தலையாகவும், ஐந்தாவது தலை ஒரு கழுதையின் தலையாகவும் இருந்தது. அவர்கள் குறையைக் கேட்ட பிரம்மன், “நீங்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டால் அவர் ஒருவரால்தான் அசுரர்களை அழிக்க முடியும். ஆகவே செல்லுங்கள்” என்று ஆணையிட்டான். தேவர்கள் சிவனிடம் முறையிட அவர்கள்பால் இரக்கம் கொண்ட சிவன் தான் ஒற்றையாக நின்று அசுரர்களுடன் போர் தொடுத்தார். அசுரர் படை சின்னாபின்னமாகியது. தேவர் உலகத்தைக் கடந்து, பூமிக்கு ஒடி, அங்கும் துரத்தப்பட்ட காரணத்தால் கீழ் உலகம் சென்றனர். சிவபிரான் தான் ஒருவராக நின்று போர் தொடுத்தமையின், அவர் உடம்பிலிருந்து வியர்வைத் துளிகள் வெளிப்பட்டுத் தரையில் சிந்தின. அந்தத் துளிகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாத்ரிகள் எனப்படும் சிவ கணங்கள் தோன்றின. இப்பொழுது இந்த மாத்ரிகளும் அசுரர்களை விரட்டியடித்தன. ஒருவாறு அசுரர்கள் ஒடி மறைகின்ற நிலையில் போரில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. கங்கைக் கரையில் ஏனைய தேவர்களோடு தங்கியிருந்த பிரம்மாவின் கழுதை வடிவுடைய ஐந்தாவது தலை அசுரர்களைக் கூவி அழைத்தது. நீங்கள் ஏன் அஞ்சி ஒடுகிறீர்கள்? மீண்டும் வந்து
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 14 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, செய்து, இருவரும், சென்று, தேவர்கள், போர், போகவதி, இப்பொழுது, ஆட்சி, தான், பிறகு