பிரம்ம புராணம் - பகுதி 12 - பதினெண் புராணங்கள்
கங்கைக் கரையில் சுவேதா என்ற வேதியன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய சிவபக்தன். அவன் காலம் முடிந்த வுடன் யமதூதர்கள் அவனைக் கொண்டு போக வந்தனர். ஆனால் அவன் ஆசிரமத்துக்குள் நுழைய முடியாதபடி சிவனுடைய படைகள் காவல் காத்து வந்தன. சென்ற தூதர்கள் மீண்டு வராமையால் மிருத்யு (சாவு) என்ற தன் தோழனை அனுப்பினான் யமன். மிருத்யு பாசக் கயிற்றை சுவேதாவின் கழுத்தில் மாட்ட முயன்ற பொழுது சிவ கணங்களால் கொல்லப்பட்டான். இதைக் கேள்விப்பட்ட யமன் தானே படைகளுடன் வந்து போர் தொடங்கினான். சிவனுடன் இருந்த நந்தி, விக்னேஷ்வரன், கார்த்திகேயன் ஆகிய அனைவரும் யமனுடன் போர் தொடுத்தனர். இப்போரில் கார்த்திகேயன் யமனையும் கொன்றுவிட்டான். யமன் இல்லையானால் சாவு, வாழ்வு நடைபெறாது என்பதை அறிந்த தேவர்கள், சிவனிடம் முறையிட்டனர். ஒரு நியதியின் பேரில் சண்டையை நிறுத்த சிவன் ஒப்புக் கொண்டார். சிவ பக்தர்கள் இறந்தால் யம தூதர்கள் அங்கே வரக் கூடாது. அவர்கள் நேரே சிவலோகம் சென்று விடுவர். இதை எல்லாரும் ஏற்றுக்கொள்ள, நந்திதேவர் கங்கைத் தண்ணீரைக் கொண்டு வந்து யமன், மிருத்யு.மேல் தெளிக்க அவர்கள் உயிர் பெற்றனர். கெளதமி கங்கையின் சிறப்புக்களுள் இதுவும் ஒன்று.
குபேரன்
விஸ்ரவனுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவியின் மகன் குபேரன். பெருஞ் செல்வத்துடன் இலங்கையை ஆட்சி செய்து வந்தான். அரக்கியாகிய இரண்டாம் மனைவியின் பிள்ளைகள் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர். முதலில் இவர்கள் குபேரனுடன் நட்புடன் இருந்தனர். இராவணன் தாய் மகனை அழைத்து, “நீ அரக்கன்; குபேரன் தேவ வர்க்கம். நீங்கள் எல்லோரும் நட்புக் கொள்வது தவறு. காலங்காலமாக தேவர்களுக்குப் பகை அரக்கர்களும், அசுரர்களும். அவனை எப்படியாவது வென்று அவன் செல்வத்தை நீ பறித்துக் கொள்” என்று கூறினாள். இராவணன் முதலிய மூவரும் பிரம்மனைக் குறித்துப் பெரும் தவம் செய்து பல வரங்களைப் பெற்றனர். அதன் பயனாக குபேரனை வென்று இலங்கையை விட்டே விரட்டி விட்டனர். தாத்தாவாகிய புலத்தியனுடைய அறிவுரையின்படி குபேரன் கெளதமி கங்கையின் கரைக்கு வந்து சிவனைக் குறித்துப் பெரும் தவம் இயற்றினான். இறுதியில் சிவன் தோன்றி, குறையாத செல்வத்தின் தலைவனாக குபேரனை ஆக்கினார்.
அரிச்சந்திரன் கதை
இக்சுவாகு பரம்பரையில் வந்த அரிச்சந்திரனுக்கு மகன் இல்லை. நாரதர் அரிச்சந்திரனைப் பார்த்து, “நீ கங்கைக்கரை சென்று வருணனைக் குறித்துப் பிரார்த்தனை செய்தால் உனக்கு மகன் பிறப்பான்” என்று கூறினார். அரிச்சந்திரன் அவ்வாறே செய்தான். அவன் முன் தோன்றிய வருணன், "உனக்கு ஆண் குழந்தை பிறக்குமாறு வரம் தருகிறேன். ஆனால் என்னைக் குறித்து ஒரு யாகம் செய்து அதில் உன் மகனை பலியிடுவதானால் உனக்கு ஆண் மகவு பிறக்கும்” என்றான். அரிச்சந்திரன் அதனை ஒப்புக் கொண்டான். மகன் பிறந்த ஏழாம் நாள், ஏழாம் ஆண்டு, பதினாறாம் ஆண்டு முடியும் பொழுதெல்லாம் வருணன் வந்து எப்பொழுது யாகம் என்று கேட்கும்பொழுதெல்லாம் அரிச்சந்திரன் ஒவ்வொரு சமாதானம் கூறினான். மகனுக்குப் பதினாறு வயதாகும் பொழுது வருணன் மறுபடியும் வந்து கேட்டான். உடன் இருந்த மகன் ரோஹிதன் 'விஷ்ணுவைக் குறித்து யாகம் செய்யப் போகிறேன். முடிந்தவுடன் உனக்கு பலியாவேன்' என்றான். யாகம் செய்யக் காட்டிற்குச் சென்றபொழுது 'அஜிகர்தா என்ற முனிவனைச் சந்தித்து தன் வரலாற்றைக் கூறினான். அதுகேட்ட முனிவன் தன் மூன்று பிள்ளைகளுள் தனக்கு வேண்டிய முதல் மகனையும், மனைவிக்கு வேண்டிய மூன்றாவது பிள்ளையையும் விட்டுவிட்டு நடு மகனைப் பலிக்கு அழைத்துச் செல். அவனுக்கு விலையாக ஆயிரம் பசுக்கள், ஆயிரம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 12 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வந்து, அவன், மகன், அரிச்சந்திரன், உனக்கு, குபேரன், யமன், யாகம், வருணன், குறித்துப், செய்து, கங்கையின், கெளதமி, மிருத்யு, இராவணன்