பிரம்ம புராணம் - பகுதி 16 - பதினெண் புராணங்கள்
தர்மத்தின் வழி நடந்தால்…
பவனா என்ற ஊரில் கெளதமன் என்பவன் வாழ்ந்து வந்தான். பிறப்பால் பிராமணன் ஆயினும், அவன் தாயின் தூண்டுதலால் எந்தத் தீய காரியத்தையும் அஞ்சாமல் செய்யும் துணிவு பெற்றிருந்தான். அப்படி இருந்தும் வைசிய குலத்தைச் சேர்ந்த மணிகுண்டலன் என்பவன் இவனுக்கு நண்பனாக இருந்தான். மணிகுண்டலன் பெருஞ் செல்வந்தருடைய மகன். சூழ்ச்சிக்காரனாகிய கெளதமன் தோழனிடமிருந்து பொருளைக் கொள்ளை அடிக்க நினைத்தான். அது உள்ளுரில் முடியாத காரியம் ஆயிற்று. எனவே நல்லவன் போல் நண்பனைப் பார்த்து, “மணிகுண்டலா! நாம் இருவரும் வெளியூர் சென்று வாணிபம் செய்து பொருள் ஈட்டி வரலாம்” என்றான். இத்திட்டத்திற்கு மணிகுண்டலன் உடன்படவில்லை. “நண்பனே! என் தந்தையிடம் பெருஞ்செல்வம் குவிந்து கிடக்கிறது. நான் ஏன் வெளியூர் சென்று பொருள் தேட வேண்டும்?” என்றான். சூழ்ச்சிக்காரனாகிய கெளதமன், “நண்பனே! மலைபோன்ற செல்வம் தந்தையிடம் இருந்தாலும் மகன் அதை அனுபவிப்பதில் பெருமை இல்லை. தானாகச் சம்பாதிப்பதுதான் சிறப்பாகும்” என்றான். இந்த வாதத்தை மணிகுண்டலன் ஏற்றுக் கொண்டதால் பெரும் பொருளுடன் இருவரும் வெளியூர்களுக்குச் சென்று வாணிபம் செய்தனர். கெளதமன் மிக ஏழை ஆதலால், முதலாகப் போட்ட பொருள் முழுவதும் மணிகுண்டலனுடையதே ஆகும். வியாபாரம் நன்கு நடக்கவே தோழர்கள் வருமானத்தைப் பங்கிட்டுக் கொண்டனர்.
எந்த நிலையிலும் தர்மம்தான் சிறந்தது. தர்ம வழி செல்வதே சிறப்புடையது என்று மணிகுண்டலன் கூறிக் கொண்டிருப்பான். பிராமணனாகப் பிறந்த கெளதமன், ‘பைத்தியக்காரத்தனம். தர்மமாவது, ஒன்றாவது! எப்படியாவது பொருளைச் சேகரித்து வாழ்வதே புத்திசாலித்தனம்’ என்றான். கருத்து வேறுபாடு முற்றவே கெளதமன் ஒரு வழி சொன்னான். “மணிகுண்டலா! நாம் வெளியில் பார்க்கும் பலரையும் இதுபற்றிக் கேட்கலாம். அவர்கள் தர்மம்தான் சிறந்தது என்று சொன்னால், என் பங்குக்குரிய செல்வம் முழுவதையும் உனக்குத் தந்து விடுகிறேன். நான் சொல்வதுதான் சரி என்றால் உன் பங்குக்குரிய செல்வம் முழுவதையும் எனக்குத் தந்துவிடவேண்டும்” என்றான். அப்பாவியாகிய மணி குண்டலன் அதற்குச் சம்மதித்தான். வழியில் போவோர்களைச் சந்தித்துக் கேட்டார்கள். அறிவில்லாத அந்தச் சாதாரண மக்கள் கெளதமன் சொல்வதுதான் சரி என்றனர். மணிகுண்டலன் பங்கு முழுவதும் கெளதமனுக்குப் போய்விட்டது. மறுபடியும் வியாபாரம் நடந்தது. மணிகுண்டலன் தான் சொன்னதையே சொன்னான். இரண்டாம் முறை பந்தயம் கட்டி மணி குண்டலன் கருத்தை யாரும் பேசாததால் கெளதமன் அவன் கைகளை வெட்டி எறிந்தான். அந்நிலையிலும் மணிகுண்டலன் தர்மத்தின் சிறப்பைப் பேசிக் கொண்டிருந்தான். அவனை ஒழித்துவிட எண்ணிய கெளதமன், மறுபடியும் பந்தயம் கட்டி தான் ஜெயித்தவுடன் மணிகுண்டலனின் இருகண்களையும்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 16 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கெளதமன், மணிகுண்டலன், என்றான், பொருள், தான், செல்வம், சென்று, வேண்டும், வழிபட்ட, பில்லா