பிரம்ம புராணம் - பகுதி 13 - பதினெண் புராணங்கள்
ததீசியின் கதை
ததீசி என்ற முனிவர் லோபா.முத்ரா என்ற தன் மனைவியுடன் கங்கைக் கரையில் ஒர் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். அவர் தவப் பலன் காரணமாகத் தைத்தியர்கள், அரக்கர்கள், அசுரர்கள் என்பவர்கள் அச்சம் காரணமாக அவருடைய எல்லைக்குள் நுழைய முயன்றதேயில்லை. ஒருமுறை நடந்த தேவ,அசுரப் போரில் தேவர்கள் வென்றனர். வெற்றியடைந்த அவர்கள் ததீசியிடம் வந்து ஐயனே! உனது ஆசீர்வாதத்தால் நாங்கள் அசுரர்களை வென்றோம். போர் முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் தேவையில்லை. அசுரர்கள் கவர்ந்து செல்ல முடியாத ஒரிடத்தில் இவற்றைப் பாதுகாப்பாக வைக்க விரும்பினோம். அவர்கள் அண்ட முடியாத இடம் என்று நினைத்தவுடன் உன் ஆசிரமம்தான் நினைவுக்கு வந்தது. ஆகவே இவற்றை இங்கு விட்டுச் செல்கிறோம் என்று கூறிச் சென்றார்கள். ஆண்டுகள் பல சென்றன. ஆயுதங்கள் பளபளப்புக் குன்றி தங்கள் மந்திர சக்தியை இழக்கத் தொடங்கின. இந்த நிலையில் மனைவி லோபாமுத்திரை, “ஐயனே! தாங்கள் செய்தது சரியில்லை.
உலக பந்தத்தில் இருந்து விடுபட்ட நீங்கள் இந்தப் பொருட்களை வைத்துக் கொண்டிருப்பது சரியில்லை. மேலும் அசுரர்கள் அவர்கள் விரோதிகளான தேவர்களின் ஆயுதங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றறிந்தால், உங்கள்மேல் விரோதம் பாராட்டுவார்கள்,” என்று கூறினாள். அதுகேட்ட முனிவர் "நீ சொல்வது சரிதான். ஆனால் வாக்குக் கொடுத்து விட்டேன். அதை மீற முடியாது” என்று கூறிவிட்டார். இந்நிலையில் ஆயுதங்கள் ஒளி இழப்பதை அறிந்த முனிவர் அவற்றை கங்கை நீரில் கழுவி அந்நீரைக் குடித்துவிட்டார். ஆயுதங்களின் சக்தி முழுவதும் அவரது உடம்பில் சேர்ந்து விட்டது. பல ஆண்டுகள் ஒடி மறைந்தன. திடீரென்று ஆசிரமத்திற்கு வந்த தேவர்கள், "முனிவரே! அசுரர் கை ஓங்கிவிட்டது. எங்கள் ஆயுதங்களைக் கொடுங்கள்,” என்று கேட்டனர். முனிவர் நடந்தவற்றைக் கூறி “நான் யோகத்தால் என் உயிரைப் போக்கிக் கொள்கிறேன். என் உடம்பில் உள்ள முதுகெலும்பைக் கொண்டு நீங்கள் புதிய ஆயுதம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறி அவர் அப்படியே உயிரை விட அவர் எலும்பைக் கொண்டு விஸ்வகர்மா 'வஜ்ராயுதம் என்ற ஆயுதத்தைப் படைத்தான். அதை எடுத்துக்கொண்டு தேவர்கள் போய்விட்டனர். அச்சமயம் லோபாமுத்திரை அங்கு இல்லை. சிலகாலம் கழித்து மீண்டும் வந்த அவள் நடந்தவற்றை அறிந்து தன் குழந்தை பிறக்கும் வரை தன் உயிரை வைத்துக் கொண்டிருந்து பிறகு தீயில் மூழ்கிவிட்டாள். இறப்பதற்கு முன் தான் பெற்ற மகனை ஒர் அத்திமரத்திடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றாள். அத்திமரத்தால் வளர்க்கப்பட்ட மகன் அத்தி மரத்தின் வட மொழிப் பெயராகிய பிப்பலா என்ற பெயரைப் பெற்றான். ஒருமுறை தன் பெற்றோர் யார் என்று அத்தி மரத்தைக் கேட்க, அத்தி மரம் நடந்தவற்றைக் கூறிற்று. கடுங்கோபம் கொண்ட பிப்பலா, தேவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவனை நோக்கித் தவம் செய்தான். சிவபிரான் தோன்றியவுடன் "தேவர்களை அழிக்க வேண்டும்” என்று வரம் கேட்டான். அதுகேட்ட சிவன், "என் நெற்றியில் இருக்கும் மூன்றாவது கண் எப்பொழுது உனக்குத் தெரிகிறதோ அப்பொழுது உன் விருப்பம் நிறைவேறும்” என்று சொல்லி மறைந்தார். பல ஆண்டுகள் தவம் செய்து சிவபிரானுடைய நெற்றிக்கண்ணைப் பார்க்கும் ஆற்றலைப் பெற்றான் பிப்பலா. அந்த நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு கொடிய பூதம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட பூதம் "உன்னுடைய விருப்பம் என்ன?’ என்று கேட்க, பிப்பலா, “தேவர்களை அழித்து விடுக!” என்று கூறினான். உடனே பூதம் அவனுடன் போர் செய்யத் துவங்கியது. “ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று பிப்பலா கேட்க, ‘தேவர்களை அழிக்க வேண்டும் என்றுதானே நீ சொன்னாய். ததீசியின் பிள்ளையாகிய நீயும் ஒரு தேவன்தானே! ஆகவேதான் அழிக்கும் வேலையை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரம்ம புராணம் - பகுதி 13 - Brahma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ", பிப்பலா, முனிவர், பூதம், நீங்கள், அத்தி, அழிக்க, ஆண்டுகள், கேட்க, ஆயுதங்கள், கொண்டு, செய்து, தேவையில்லை, அவர், தேவர்கள், அசுரர்கள், வேண்டும்