பவிஷ்ய புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
பெண்களும், திருமணமும்: பெண்களுக்கு விரைவில், திருமணம் செய்து விடவேண்டும் என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது. ஏழு வயதுடைய பெண்ணை கெளரி என்றும், பத்து வயதுடைய பெண் நக்னிகா என்றும், பன்னிரண்டு வயதுடைய பெண் கன்யகா என்றும், அதற்கு மேல் வயதுடையவர்களை ரஜஸ்வலா என்றும் குறிப்பிடுகிறது இப்புராணம்.
திருமணத்தில் எட்டு வகைகள் உள்ளன. அவையாவன::
1. பிரம்மம்: இம்முறைத் திருமணத்தில் பெண்ணுக்கு விலை உயர்ந்த ஆடைகள் அணிவித்து நல்ல ஆபரணங்கள் பூட்டி கல்வி அறிவில் சிறந்து விளங்கும் மணமகனுக்குத் திருமணம் செய்து வைப்பர்.
2. தெய்வ மணம்: ஆபரணங்கள் அணிந்த பெண், நல்லொழுக்கம் நிறைந்த மணமகனுக்கு சாத்திர சடங்குகள் நிறைவேற்றப்பட்டு, புரோகிதர்கள் யாகம் வளர்க்க, மணம் செய்து கொடுக்கப்படுவாள்.
3. அர்ஷ மணம்: இதன்படி, சடங்குகள் அனைத்தும் நடைபெற்றபின், பெண்ணின் தந்தை, மணமகனிடம் தன் மகளை ஒப்படைப்பார். பசு அல்லது எருதினை மணமகனுக்கு தானமாக அளிப்பார்.
4. பிரஜாபத்ய மணம்: இத்திருமணத்தில், தந்தை தன் மகளை மணமகனிடம் திருமணம் செய்து கொடுக்கும் பொழுது, மதச்சடங்குகள் செய்யும்பொழுது அவர்கள் இணை பிரியாது செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி, மகளை மணமகனுடன் அனுப்பி வைப்பர்.
5. அசுர மணம்: மணமகனிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னரே மணமகளின் தந்தையும், உறவினரும் அவருக்குத் திருமணம் செய்து வைப்பர்.
6. கந்தர்வ மணம்: ஒர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பி, மணம் புரிந்து கொள்ளுதல்.
7. ராகூடிச மணம்: ஒரு பெண்ணைக் கவர்ந்து சென்று திருமணம் புரிந்து கொள்ளுதல்.
8. பிசாசு மணம்: பெண்ணின் சம்மதமில்லாமல், அவளைக் கட்டாயப்படுத்திக் கவர்ந்து சென்று மணந்து கொள்ளுதல்.
திருமணத்திற்குப் பின்னர், ஒரு பெண் தன் கணவனின் குடும்பத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். தன் கணவனை தெய்வமாக நினைக்க வேண்டும். பவிஷ்ய புராணக் கூற்றுப்படி மனைவி, கணவனின் உடம்பின் பாதியாகக் கருதப்படுகிறாள். எந்தக் குடும்பத்தில், மனைவிக்கு மதிப்பு இல்லையோ அக்குடும்பம் வீணாகிப் போகின்றது.
ஒரு மனைவியின் கடமைகள் என்ன என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது. மனைவி ஆனவள், அதிகாலையில் எழுந்து, பணியாளர்களை எழுப்பி அன்றைக்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலையினைத் தெளிவுபடக் கூறவேண்டும். தன் கணவனுக்குத் தேவையான உணவு வகைகளைத் தயாராக வைத்துக்கொண்டு, அவன் வரவை எதிர்நோக்கி இருக்க வேண்டும். சமையலறையில், பாத்திரம் கழுவுதல், தயிர் கடைதல், தரை கழுவுதல், ருசியுள்ள உணவுகளைத் தயாரித்தல் ஆகிய வேலைகளைச் செய்ய வேண்டும். பெண்கள் சில காரியங்களைச் செய்யக் கூடாது என்று பவிஷ்ய புராணம் வலியுறுத்துகிறது. அவள் தனியாக அமர்ந்திருக்கக் கூடாது; அந்நியர்கள் அமர்ந்திருக்கும் பொழுது வாய்விட்டுச் சிரித்தல் கூடாது; வாயிற்புறத்தில் நிற்கக்கூடாது; சத்தம் போட்டுப் பேசக் கூடாது; கணவன் இல்லாதபொழுது தன்னை அலங்கரித்துக் கொள்ளுதல் தவறாகும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே தனியே வெளியே செல்லலாம், ஆயினும் விரைவில் வீடு திரும்பிவிட வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பவிஷ்ய புராணம் - பகுதி 9 - Bhavishya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, மணம், பாணா, வேண்டும், செய்து, பவிஷ்ய, திருமணம், கொள்ளுதல், கூடாது, பெண், புராணம், என்றும், ஆடைகள், வயதுடைய, மகளை, மணமகனிடம், வைப்பர், செய்ய