பவிஷ்ய புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
ஒருவனுக்கு இரண்டாவதாக ஒரு மனைவி இருப்பாளெனில், அவன் மூத்த மனைவியைத் தன் தாயைப்போலப் பேண வேண்டும். தன்னுடைய இல்லத்தினின்று கொண்டு வந்தது எதுவாயினும், அதனை மூத்த மனைவிக்கே முதலில் கொடுக்க வேண்டும். இவர்கள் இருவரிடமும் பொறாமை ஏற்படும்படிக் கணவன் நடந்து கொள்ளக் கூடாது.
பவிஷ்ய புராணம், மேலும் சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளைக் கூறுகிறது. வெவ்வேறு மலர்களை வெவ்வேறு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கும் பொழுது ஏற்படும் பலன்கள் ஆகியவற்றைக் கூறுகிறது.
இதை அடுத்து, இப்புராணம் எதிர்காலம் பற்றிப் பேசுகிறது. இப்புராணத்தின் மூன்றாவது பிரிவு பிரத்திசமுகம். வரலாற்றுச் சிறப்புகளைக் கூறுகிறது. மனு அரியணை ஏறியது முதல் முடிவில் பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்தது பற்றியும், ராணி விக்டோரியா அரசாண்டது பற்றியும் பேசுகிறது.
சூரியவம்சம், சந்திரவம்சத்தில் வந்தவர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெகு காலத்திற்குப் பின்பு வந்த ராஜபுதன அரசர்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. பாபர், ஹாமாயூன், அக்பர். சலீம், ஒளரங்கசீப், சிவாஜி ஆகியோர் பற்றியும் குறிப்புகள் உள்ளன. ஆங்கில வார்த்தைகளான ஜனவரி, பிப்ரவரி போன்ற சொற்களும் உள்ளன.
(இவற்றைத் தொடர்ந்து கலியுகம் பற்றி இப்புராணம் பேசுகிறது. நான்கு யுகங்கள், அவற்றின் கால அளவுகள் இவற்றைப் பற்றி மற்ற புராணங்களில் கொடுத்திருப்பதால் அங்கு குறிப்பிடப் பெறாத பகுதிகளை மட்டும் இங்கு தருகிறோம்), இனி பவிஷ்ய புராணம் கலி. பற்றிக் கூறுகிறது.
1. பெளரவர்கள்: பாண்டு புத்திரர்களில் மூன்றாவது இடத்தைப் பெறுபவன் அருச்சுனன். இவனுடைய பேரன் பரீட்சித்து மன்னன். இம்மன்னனின் பேரன் சடனிகா ஆவான். அவனுடைய மகனே வீரம் மிகுந்த அஸ்வமேத தத்தா ஆவான். இவனுடைய மகனே அதிசிம்ம கிருஷ்ணா. (இம்மன்னனுடைய காலத்திலேதான் இப்புராணத்தின் இப்பகுதி எழுதப்பட்டது.)
அதிசிம்ம கிருஷ்ணாவின் மகன் நிசக்ஷீ. அஸ்தினாபுரத்தை கங்கை தன்னுள் அடக்கிக் கொள்ளும் பொழுது, நிசக்ஷீ அரசன் அரியணை துறந்து கெளசம்பி நகரத்திற்குச் சென்று விடுவான். அவனுக்கு எட்டு மகன்கள் இருப்பர். அவனுடைய முதல் மகன் உஷ்ணா. புரு வம்சத்தில் வந்த இருபத்தி ஐந்து பேர் அரசாள்வர். இந்தப் பெளரவ வம்சத்தில் வருவோர் தேவர்களாலும், முனிவர்களாலும் போற்றப் பெறுவர். இவ்வம்சத்தினின்று பிராமணர்களும், சத்ரியர்களும் தோன்றி, அருச்சுனன் வழிவம்சம் கலியுகத்தில் முடிவு பெறும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பவிஷ்ய புராணம் - பகுதி 10 - Bhavishya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கூறுகிறது, வேண்டும், பற்றியும், கூடாது, பெறும், பேசுகிறது, கணவன், பவிஷ்ய, புராணம், பொழுது, விவாகரத்து