பவிஷ்ய புராணம் - பகுதி 11 - பதினெண் புராணங்கள்
3. பிருகதரதாஸ்: இப்பரம்பரையில் வந்தவன் ஜராசந்தன், கத பேரரசன். இவன் வழியில் வந்த சேனஜித் மன்னன் காலத்தில் இப்பகுதி எழுதப்பட்டது. இவனுக்குப் பின் பதினாறு அரசர்கள் ஆட்சி செய்வார்கள். 723 ஆண்டுகள் இவர்கள் ஆட்சி நடக்கும். அதன் பிறகு 32 பிருகதரதாஸ் 100 ஆண்டுகள் ஆட்சி புரிவர்.
4. பிரத்யோதாஸ்: பிருகதாஸ்க்குப் பிறகு புலிகா தன் தலைவனைக் கொன்று, தன் மகன் பிரத்யோதாஸை அரசனாக்குவான். இவனுக்குப் பின்வரும் அரசர்களும் சேர்த்து பிரத்யோதா மன்னர்கள் 138 வருடம் இப்பூமியை ஆள்வர்.
5. சிஷனாகாஸ்: சிஷீனாகா, பிரத்யோதாஸை அழித்து தானே அரசனாவான். பிம்பிசாரா, அஜாத சத்ரு போன்றோர் ஆட்சி புரிவர். இவர்கள் பதின்மர், நூற்றி அறுபத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்வர்.
6. நந்தன்: இவ்வரசன், தன்னுடைய சூத்திர மனைவியின் மகனை அரசனாக்குவான். அதன் பிறகு சத்ரியர்கள் அழிக்கப் பட்டு, சூத்திரர்களே அரசாள்வர். இறுதியில் கெளடில்யா என்ற பிராமணர் நந்தர்களை ஒழிப்பார். நந்தர்கள் 100 ஆண்டுகள் ஆண்டபின், மெளரியர்கள் ஆள்வர்.
7. மெளரியர்: கெளடில்யர் சந்திரகுப்தரை நியமித்து, மொத்தம் 9 மெளரியர்கள் 137 ஆண்டுகள் அரசாட்சி செய்வர்.
8. சுங்கர்: மெளரியரை அடுத்து இவர்கள் அரசாட்சிக்கு வருவர். பிருகதரதா அரசனைத் துரத்திவிட்டு, படைத்தலைவன் புஷ்யமித்ரா புதிய ஆட்சியை உருவாக்குவான். பத்து சுங்கர்கள் 112 ஆண்டுகள் ஆண்டபின் கன்வர்கள் பூமியை எடுத்துக் கொள்வர்.
9. கன்வர்கள்: தேவ பூமி என்ற அரசனை வீழ்த்திவிட்டு கன்வ அரசை ஸ்தாபிப்பான். கன்வ பிராமணர்கள் 45 ஆண்டுகள் ஆட்சி புரிவர்.
10. ஆந்திரர்: கன்வர்களிடம் இருந்து பூமியைப் பெற்று 30 ஆந்திர அரசர்கள் 460 ஆண்டுகள் ஆண்டனர்.
சூரியனும் அதன் பன்னிரு வகைக் கூறுகளும்
துரியதேவன் தன் பண்புகளை பன்னிரு ரூபங்களாகக் கொண்டுள்ளான். அவையாவன: 12 ஆதித்தியர்கள் என்று கூறப்பெறும். அவை இந்திரா, ததா, பர்ஜன்யா, புஷா, துவஷ்டா, ஆர்யமா, பகாவைவஸ்வனா, விஷ்ணு, அம்ஷீ, வருணா, மித்ரா ஆகியவை.
இந்திரனாக தேவர்களின் தலைவனாகவும், அவர்களின் அரசனாகவும் இருக்கிறான். ததாவாக எல்லா உயிரினங்களையும் படைக்கின்றான். பர்ஜன்யனாக மேகங்களினிடையே வாழ்ந்து, மழையைத் தோற்றுவிக்கின்றான். புஷாவாக எல்லா தானியங்களிலும் வாழ்ந்து, உயிர்களுக்கு சத்துள்ள உணவைப் படைக்கின்றான். துவஷ்டாவாக, மரங்கள், கொடிகளில் வாழ்கின்றான். ஆர்யமாவாக மேகத்திலிருந்து, உயிர்களுக்கு மூச்சுக் காற்றை வழங்குகின்றான். பகாவாக பூமியிலும், உயிரினங்களின் உடம்பிலும் வாழ்கின்றான். வைவஸ்வனா வாகத் தீயில் இருந்து, உணவினைச் சமைக்க அருள்கின்றான். விஷ்ணுவாக, தேவர்களின் பகைவர்களைக் கொல்லுகின்றான். அம்oவாகக் காற்றில் இருந்து எல்லா உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கின்றான். வருணனாக நீரில் இருந்து, உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவனாகிறான். மித்ராவாக சந்திரபாக் நதிக்கரையில் தோற்றம் தருகிறான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பவிஷ்ய புராணம் - பகுதி 11 - Bhavishya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, ஆண்டுகள், ஆட்சி, இருந்து, புரிவர், எல்லா, இவர்கள், இப்பரம்பரையில், பிறகு