பவிஷ்ய புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
இவற்றை அடுத்து, பவிஷ்ய புராணம் சூரிய தேவனுக்கு உரிய விரதங்கள் பற்றிப் பேசுகின்றது. அவற்றுள் சிலவற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளோம்:
1. அபயபக்ஷசப்தமி விரதம்: சுக்ல பட்சத்தில், ஏழாவது நாள் இவ்வழிபாடு நடைபெறும். சூரிய தேவனைத் துதிப்பதால் தர்மம், செல்வம், மோட்சம் ஆகியவை கிடைக்கும். 2. அபய சப்தமி விரதம்: சுக்கில பட்சம் பதினைந்தாவது நாள், ஆவணி மாதத்தில் இவ்விரதம் அனுஷ்டித்தால், இறந்த பின்பு சூரியனுடைய இருப்பிடம் செல்லலாம். 3. பாத்ர விரதம்: துரிய தேவனின் விக்கிரகத்தை நன்கு தூய்மை செய்து, பால் முதலியவற்றால் அபிஷேகம் செய்து, வணங்கிவர வேண்டும். இவ்விரதம் இருப்போர் பகற் பொழுதில் தூங்குவதோ, துன்மார்க்கர்களிடம் பேசுவதோ கூடாது. இவ்விரதத்தின் பலன் சூரியனுடைய இருப்பிடம் அடையலாம். 4. சப்தமி விரதம்: ஒவ்வொரு மாதமும் ஏழாவது நாள் சூரியனை வணங்கிவந்தால், ஒருவருடைய கடன்பிடி தீரும். சூரியனை வழிபட அனுஷ்டிக்கும் விரதங்களைப் பற்றிப் பேசிய பவிஷ்ய புராணம், இனி மற்ற தெய்வங்களுக்காகக் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் பற்றியும் பேசுகிறது.
1. ஆனந்த சதுர்த்தசி விரதம்: சுக்கிலபட்சம் பதினான்காம் நாள், விஷ்ணுவின் விக்கிரகத்தைத் தூய்மைப்படுத்தி வணங்கினால் குழந்தைப் பேறு கிடைக்கும். சிவனுடைய விக்கிரகத்தைத் தூய்மைப்படுத்தி, மந்திரம் கூறினால் நினைத்த காரியம் நிறைவேறும். 2. அசோக விரதம்: அசோக மரத்தினை வணங்கி வந்தால் வாழ்க்கையின் சோகங்கள் விலகிவிடும். 3. கோஷ்பாத திரிதிய விரதம்: சுக்கிலபட்சம் மூன்றாம் நாள் பத்ரபத நட்சத்திரம் விண்ணில் இருக்கும் நாள் அனுஷ்டிக்கப்படும். எண்ணெய், உப்பு சமைத்த உணவு ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். கோலோகா என்ற உலகை அடைய, இவ்விரதம் துணைபுரியும். 4. கோவத்ஸ் துவாதசி விரதம்: கார்த்திகை மாதம், கிருஷ்ணபட்சம் பன்னிரண்டாம் நாள் பசுவுடன், அதன் கன்றையும் சேர்த்து வணங்குவர். இவ்விரதம் இருப்பவர், தரையில் படுத்துறங்க வேண்டும். கோலோகா என்ற உலகை அடைய இவ்விரதம் கடைப்பிடிக்க வேண்டும். 5. உய்கதுவாதசி விரதம்: மார்கழி மாதத்தில், பன்னிரண்டாம் நாள் விஷ்ணுவை வழிபட்டால் காது கேளாமை, வாய் பேசாமை, தொழுநோய் ஆகியவற்றி னின்று விடுபடலாம். 6. சரஸ்வதி விரதம்: பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை சரஸ்வதியைத் தொழுது, தொடர்ந்து தலைசிறந்தவனாக விளங்கலாம். 7. அசுன்ய சயன விரதம்: பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை- இவ்விரதம் இருந்து எல்லா தெய்வங்களுக்கும் இனிப்பு, பழம் முதலியன கொடுத்து வணங்கி வந்தால், கணவன் மனைவி என்றும் பிரியாது ஒற்றுமையாய் இருப்பர்.
மேலே கூறியவற்றோடு, மேலும் சில விரதங்கள் பற்றியும் இப்புராணம் பேசுகிறது. ஒருவருக்கு தானம் செய்வதினால் செல்வம் என்றுமே வீணாவதில்லை. நிலையில்லாதது செல்வம். ஒருவர் இறந்த பிறகு எவ்விதப் பயனுமற்றது. ஆதலால், உயிருடன் இருக்கும்பொழுதே அவற்றை நன்முறையில் பயன்படுத்துதல் சாலச் சிறந்தது. தன்னுடைய செல்வத்தினின்று பிறருக்கு தானம் அளிப்பதே மிகச் சிறந்த முறையாகும். நீண்ட ஆயுளும், வலிமையான உடலும் பெற்று, மற்றவர்களுக்கு எவ்விதப் பிரயோஜனமும் இன்றி வாழ்வதில் எப்பயனும் இல்லை. ஒவ்வொரு யாகம் செய்யும் பொழுதும் தட்சிணை வைக்க வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பவிஷ்ய புராணம் - பகுதி 7 - Bhavishya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விரதம், நாள், இவ்விரதம், வேண்டும், செல்வம், தானம், விரதங்கள்