பவிஷ்ய புராணம் - பகுதி 8 - பதினெண் புராணங்கள்
2. விருஷப தானம்: எருதினை தானம் செய்தால் ஏழு ஜென்மத்தின் பாவம் தொலைந்து விடும்.
3. பூமி தானம்: சிறிதளவு பூமியை தானம் செய்தாலும், செய்த பாவங்கள் நீங்கும்.
4. ஆபக தானம்: ஒராயிரம் பாத்திரங்களை தானம் செய்தால், செல்வம், மகன் பிறப்பு ஆகியவை கிடைக்கும்.
5. கிருஹ தானம்: அலங்கரிக்கப்பட்ட வீட்டினை தானம் செய்தால், சிவபெருமானின் இருப்பிடம் செல்ல முடியும்.
6. அன்னதானம்: உணவினை தானம் செய்தால், விஷ்ணுவின் இருப்பிடத்தை அடையலாம்.
7. பிரபதானம்: வழிப் போக்கர்களுக்கும், பிரயாணம் செய்பவர்களுக்கும் தண்ணீர் வழங்குதல், சுவர்க்கம் செல்ல வழிவகுக்கும்.
மேலே கூறியவற்றுடன் இன்னும் பல வழிகளில் தானம் செய்வதைப் பற்றியும் இப்புராணம் பேசுகிறது.
கல்வி: ஒரு கிணற்றினைத் தோண்டி நீர் எடுப்பது போல, ஒரு மாணவன் தன் குருவிற்குக் கடமையினைச் செய்து ஞானம் பெறுகிறான். தன்னுடைய கல்வி முடிந்தவுடன் தன்னுடைய குருவிற்கு, நிலம், குடை, துணிகள், தானியங்கள், காய்கறிகள் இவற்றை தட்சிணையாகக் கொடுக்கலாம். தட்சிணை செலுத்தினால் அன்றி, அவன் கற்ற கல்வி முடிவு பெற்றதாக ஆகாது.
காயத்ரி மந்திரம் பற்றிய உண்மையான பொருளை உணர்ந்தவரும், அம்மந்திரத்திற்கான வழிமுறைகளைக் கடைப் பிடிப்பவருமே யாவரிலும் சிறந்த ஆசிரியனாகக் கருதப்படுவார். ஆசிரியர் நிலையில், ஐந்து விதமான வளர்ச்சிப் படிகள் உண்டு. அவையாவன :
1. ஆச்சாரியர்: வேதங்களின் கல்ப ரகஸ்யங்களை உபதேசிப்பவர்.
2. உபாத்தியாயர்: வேதங்களைக் கற்று அதனை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்பவருக்குப் படிப்பறிவித்தல்.
3. குரு: இவருடன் மாணவர்கள் தங்கிக் கல்வி கற்று, குருவின் இல்லத்தினருடன் சேர்த்துக் கொள்ளப்படுவர். சடங்கு முறைகள் அனைத்தையும் குரு போதிப்பார். இவர்களுக்கு உணவு, உறைவிடம் அனைத்தையும் குருவே வழங்குவார்.
4. ரித்விஜா: யாகங்கள் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்.
5. மகா குரு: எல்லா ஆசிரியர்களிலும் தலைசிறந்து நிற்பவர். அனைவராலும் வணங்கப்படுபவர். இராமாயணம், பாரதம், பதினெண்புராணம் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவராயினும், இறைவனின் நாமத்தையே விடாது ஜெபிப்பவர்.
ஊதியம்: ஒவ்வொருவருக்கும் அவர் செய்யும் வேலையின் முக்கியத்துவத்தைப் பொறுத்து ஊதியம் கணக்கிட்டுக் கொடுக்கப்படுகிறது.
மிகக் குறைந்த அளவு ஊதியம் வரதா எனப்படும். இருபது வரதாக்கள் ஒரு ககிணி எனப்படும். நான்கு ககினிக்கள் ஒரு பாணா எனப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பவிஷ்ய புராணம் - பகுதி 8 - Bhavishya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தானம், கல்வி, செய்தால், எனப்படும், ஊதியம், குரு, அனைத்தையும்