பாகவத புராணம் - பகுதி 19 - பதினெண் புராணங்கள்
யயாதி இருவரை மணந்த கதை
அசுரர்களுக்கு அரசனான விருஷபர்வாவிற்கு சர்மிஷ்டா என்ற மகள் இருந்தாள். அசுர குருவான சுக்ராச்சாரிக்கும் தேவயானி என்றொரு பெண் இருந்தாள். இவர்கள் இருவரும் தோழிகள். ஒருமுறை இருவரும் ஒரு குளத்தில் குளிக்கச் சென்றனர். குளித்தபிறகு கழற்றிவைத்த உடைகளை அணியும் பொழுது, குருவின் மகளாகிய தேவயானியின் உடையை தவறுதலாக சர்மிஷ்டா அணிந்து கொண்டாள். இதைக் கண்டு பொறாத தேவயானி 'குருவின் மகளாகிய யான் உங்களைவிட உயர்ந்தவள். என்னைவிடத் தாழ்ந்தவளாகிய நீ எப்படி என் உடையை அணியலாம்? என்று கேட்டாள்.
இதைக்கேட்ட சர்மிஷ்டா. 'என் தந்தை அரசன் என்பதை மறந்து விடாதே! அரசன் போடுகிற சாப்பாட்டில்தான் குருவும் வயிறு வளர்க்கிறார். எனவே அரசன்தான் உயர்ந்தவன். உன்னைவிட நானே உயர்ந்தவள்’ என்று கூறிவிட்டு, சுக்ராச்சாரியார் மகள் தேவயானியைக் கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டாள். நல்ல வேளையாக அவ்வழியே வந்த யயாதி மன்னன் நீர் குடிக்கலாம் என்று கிணற்றுக்குள் பார்க்க, உள்ளே கிடந்த தேவயானியைக் காப்பாற்றி அவளை மணம் செய்துகொள்ள ஒப்புக் கொண்டான். உயிருடன் மீண்ட தேவயானி தந்தை சுக்ராச்சாரியாரிடம் நடந்தவற்றைச் சொல்ல, அவர் நாட்டை விட்டே புறப்பட ஆயத்தமானார். குரு நாட்டை விட்டுப் போவதால் ஏற்படக் கூடிய விளைவை அறிந்து நடுக்கமுற்ற விருஷபர்வா, உடனே ஒடிவந்து குருவின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவன் மகள் சர்மிஷ்டா தன் மகள் தேவயானிக்குப் பணிப்பெண்ணாக இருக்க ஒப்புக் கொண்டால் நாட்டிலேயே இருப்பதாக சுக்ராச்சாரியார் ஒப்புக் கொண்டார். யயாதி இப்பெண்கள் இருவரையும் மணந்து கொண்டான். தேவயானிக்கு யாது. துர்வாசு ஆகிய இரு மகன்களும், சர்மிஷ்டாவிற்குத் துருயா, புரு ஆகிய மகன்களும் பிறந்தனர்.
துஷ்யந்தனும், சகுந்தலையும்
பரிட்சித்து மன்னன் சந்ததியில் வந்தவன் துஷ்யந்தன். காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது கன்வ முனிவர் ஆசிரமத்தில் சகுந்தலை என்ற அழகிய பெண்ணைக் கண்டு காமுற்றான். விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்தவள் அவள் என்று தெரிந்து அவளோடு கந்தர்வ மணம் செய்து கொண்டு, விரைவில் அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு நாட்டிற்கு வந்தவன், அவளை மறந்தே போனான். நீண்ட நாள் கழித்துத் தன் பிழையை உணர்ந்து ஆசிரமம் வந்து மனைவியையும், குழந்தை பரதனையும் அழைத்துச் சென்றான். துஷ்யந்தனுக்குப் பிறகு பட்டம் பெற்ற பரதன் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 19 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, மகள், விட்டு, சர்மிஷ்டா, கொண்டான், ஒப்புக், குருவின், கொண்டார், யயாதி, தேவயானி