பாகவத புராணம் - பகுதி 17 - பதினெண் புராணங்கள்
உயிர் பெற்ற குழந்தை “நாரத முனிவரே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஏதோ தாய், தந்தை என்றீர்கள். அவர்கள் யார்? அவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னைப் பொறுத்தவரை தாய் என்றோ, தந்தை என்றோ யாருமில்லை. என் ஆத்மா அழிவற்றது. இதற்கு முன்னர் இருந்த உடல் தோன்றக் காரணமான தாய் தந்தையர் வேறு. அதுபோல எத்தனையோ தாய் தந்தையரைப் பார்த்து விட்டேன். ஏதோ அரசு, செல்வம் என்றெல்லாம் கூறினர்கள். என்னைப் பொறுத்தவரை இந்த மாயைகளுக்கு என் மனத்தில் ஈடுபாடு இல்லை” என்று கூறிவிட்டு, அந்தக் குழந்தையின் ஆன்மா பிரிந்து போய்விட்டது. மன்னன் சித்ரகேது அஞ்ஞானத்தி னின்று விடுபட்டு, யமுனை நதியின் கரையில் ஒர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கித் தவம் செய்யத் தலைப்பட்டான். அதே சித்ரகேதுதான் விருத்ராசுரனாகத் தோன்றினான். இதற்குக் காரணம் சித்ரகேது ஒரு காலத்தில் தன் விஷ்ணு பக்தி காரணமாக சிவபெருமானை அவமதித்துப் பேசினான். சிவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பார்வதிதேவி, நீ அசுரனாகப் பிறக்கக் கடவாய்! என்று சாபமிட்டார். அந்தச் சாபம் காரணமாகவே சித்ரகேது, விருத்ரா சுரனாகத் தோன்றினார்.
(ஹிரண்ய கசிபு கதை விஷ்ணு புராணத்தில் விரிவாகத் கூறப்பட்டுள்ளது. அதே கதை இங்கேயும் விரிவாகக் கூறப் படுகிறது. இரண்டு கதையும் ஒன்றாயினும் முடிவு- அதாவது நரசிம்மத்தின் வருகை வெவ்வேறாகக் குறிக்கப்பட்டுள்ளது. பாகவத புராணப்படி தரகிம்மன் துணுக்குள் ஒளிந்திருந்தது என்பதும், விஷ்ணு துணுக்குள் இருக்கிறானா, இதை உடைக் கிறேன் பார் என்று ஹிரண்யன் சொல்வதும், துணை ஹறிரண்யன் அடிக்க நரசிம்மம் வெளிப்பட்டு அவனைக் கொன்றது என்பதும் அறியக் கிடக்கின்றன)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 17 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தாய், என்ன, மன்னன், சித்ரகேது, விஷ்ணு, பார், சம்பந்தம், ஆங்கீரச, அவன், குழந்தை, ஆத்மா