பாகவத புராணம் - பகுதி 21 - பதினெண் புராணங்கள்
ஜராசந்தன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு, ஜராசந்தனால் சிறைப்பிடிக்கப்பட்ட இருபதாயிரத்து எண்ணுறு சிற்றரசர் களை விடுதலை செய்தார்கள்.
சிசுபாலன் முடிவு
யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் செய்ய முற்பட்ட பொழுது பல தேசத்து அரசர்களும் முனிவர்களும் அங்குக் கூடி யிருந்தனர். கூடி இருந்த அரசர்களுள் சிசுபாலனும் ஒருவன். அவன் வசுதேவரின் சகோதரியாகிய சிருத்தசர்வா' என்பவளின் மகனாவான். எனவே இவன் கிருஷ்ணனின் அத்தை மகனாவான். இந்த உறவிருந்தும், கிருஷ்ணனை யாதவன் என்றே ஏசினான். யுதிஷ்டிரன், யாருக்கு முதல் அர்க்கியம் கொடுக்க வேண்டும் என்று சபையில் உள்ள பெரியவர்களைக் கேட்டபொழுது, அவர்கள் ஒருமுகமாக “கிருஷ்ணனுக்கே முதல் மரியாதை” என்றனர். யுதிஷ்டிரன் அதனைச் செய்தவுடன், சிசுபாலன் எத்தனையோ அரசர்கள் இருக்கும் இந்த அவையில் ஒரு இடையனுக்கு முதல் மரியாதை செய்வது நியாயமில்லை என்று கூறிக் கிருஷ்ணனை வாயில் வந்தபடி ஏசத் தொடங்கினான். தன் அத்தைக்குக் கொடுத்த வாக்குப்படி சிசுபாலன் அவதூறுகளை எண்ணிக் கொண்டே வந்த கிருஷ்ணன் சக்கரத்தால் சிசுபாலன் கழுத்தை வெட்டினான்.
சால்வனின் முடிவு
சிசுபாலன் இறந்ததும் அவனுடைய நண்பனாகிய சால்வன் யாதவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒர் ஆண்டு முழுவதும் மண்ணையே தின்றுகொண்டு கடுந்தவம் புரிந்தான். இறுதியில் சிவன் எதிர்ப்பட்டதும் யாதவர்களை அழிக்கத் தனக்கு ஒரு விமானம் தேவை என்று வேண்டிக் கொண்டான். தைத்தியர்களில் ஒருவனாகிய மாயா என்பவனைக் கொண்டு இரும்பாலான ஒரு ரதத்தைச் செய்யச் சொன்னான். அதை வைத்துக்கொண்டு சால்வன் துவாரகை மீது படையெடுத்து அதன் கோட்டை, கொத்தளங்கள் நந்தவனங்கள் ஆகியவற்றை அழித்தான். கிருஷ்ணன் அப்போது அங்கில்லாததால் கிருஷ்ணனின் மகன் பிரத்யுமநன் சால்வனுடன் பெரும்போர் செய்தான். யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் போர் நடந்து கொண்டிருக்கும்போது கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பினான். பிரத்யுமநன் போருக்குச் செல்வதைத் தடுத்துத் தானே சென்று கதாயுதத்தால், சால்வனின் தேரை அடித்து உடைத்துவிட்டுச் சக்கரத்தால் அவனைக் கொன்றான்.
ஸ்ரீதமா (குசேலர்) கதை
கிருஷ்ணன் சாந்தீப முனிவரிடம் கல்வி கற்ற காலத்தில் உடன் கற்றவன் ஸ்ரீதமா என்ற பிராமணன். ஸ்ரீதமாவின் குடும்ப வாழ்க்கை மிகவும் மோசமாக அமைந்தது. உண்ண உணவோ, உடுக்க உடையோ இன்றி அவர்கள் வருந்தினர். திடீரென்று ஒருநாள் ஸ்ரீதமாவின் மனைவி கணவனைப் பார்த்து, “உங்கள் பால்ய தோழனான கிருஷ்ணன் இப்பொழுது மிகுந்த வசதியுடன் இருக்கிறான் என்று கேள்விப் பட்டோமே, அவனிடம் சென்று நம் கஷ்டத்தைச் சொன்னால் நிச்சயம் அவன் உதவுவான். ஏன் நீங்கள் போகக் கூடாது?” என்று கேட்டாள். அதற்குடன்பட்ட ஸ்ரீதமா, நண்பனுக்கு ஏதாவது ஒரு பரிசினைக் கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்து ஒன்றும் இல்லாமையால் இரண்டு பிடி அவலை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றான். பெருமகிழ்ச்சியுடன் அவனை வரவேற்ற கிருஷ்ணன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, "இவ்வளவு நாட்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தாயே, எனக்கு என்ன
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 21 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கிருஷ்ணன், சிசுபாலன், ஸ்ரீதமா, யுதிஷ்டிரன்