பாகவத புராணம் - பகுதி 18 - பதினெண் புராணங்கள்
முன்னொரு காலத்தில் திரிகுடா என்ற பெரிய மலைத் தொடர் கடல் வரை நீண்டிருந்தது. மிக அடர்த்தியானதும், உயரமானதுமாகிய காடு. அம்மலையில் நிறைந்திருந்தது. அக்காட்டில் பல யானைகளுக்குத் தலைவனாகிய ஒர் ஆண் யானை ஆட்சி செய்து வந்தது. ஒரு நாள் அம்மலையில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றது. நீருக்குள் இருந்த முதலை இந்த யானையின் காலைப் பற்றிக்கொண்டது. எவ்வளவு முயன்றும் யானை தன் காலை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. யானையைத் தண்ணிருக்குள் இழுக்கும் சக்தி முதலைக்கு இல்லை. இந்தப் போராட்டத்தில் நெடுங்காலம் சென்றது. பலங் குறைந்த யானை விஷ்ணுவை தியானிக்கத் தொடங்கியது. உடனே விஷ்ணு தோன்றிச் சக்கரத்தால் முதலையின் வாயை அறுத்து யானைக்கு விடுதலை தந்தார். கொலையுண்ட முதலை பழம்பிறப்பில் ஹீஹீ என்ற கந்தர்வனாக இருந்தான். ஒரு முனிவரின் சாபத்தால் முதலையாகப் பிறந்தான். விஷ்ணுவால் சாப விமோசனம் ஏற்படும் என்று முனிவரே கூறியிருந்தார். அதுபோல் இப்பொழுது நடந்தது.
இந்த யானையும் முற்பிறப்பில் இந்திரத் தூய்மனன் என்ற மன்னனாக இருந்தவன். ஒரு முனிவரின் சாபத்தால் யானை யாகப் பிறந்திருந்தான்.
(பாற்கடல் கடைந்த கதை: இக்கதை விஷ்ணு புராணத்தில் பேசப்பட்டுள்ளபடியே இங்கும் இடம் பெறுகிறது. ஒரே ஒரு புதிய நிகழ்ச்சி பேசப்பட்டுள்ளது. விஷ்ணு புராணத்தில் விஷவாயு ஆகாயம் வரை பரவியது என்று கூறப்படுகிறது. பாகவத புராணத்தில் விஷம் ஆலகாலம் என்ற பெயருடன் தோன்றியது என்றும், இந்த விஷத்தைக் கண்டு அஞ்சி ஒடிய தேவர், அசுரர் அனைவரும் சிவபிரானிடம் சென்று முறையிட அவர் அந்த ஆலகாலத்தை எடுத்துக் குடித்து விட்டார் என்றும், அந்த விஷம் அவரை ஒன்றும் செய்யவில்லை என்றும், அவர் கழுத்து மட்டும் நீலநிறமாகி விட்டபடியால், சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றும், அவர் விஷத்தைக் குடிக்கும் பொழுது சிந்திய விஷத்தைப் பாம்பு, தேள் முதலியவை தாம் எடுத்துக் கொண்டன என்றும் கூறப்படுகிறது.
அசுரர்களுக்கு மறுக்கப்பட்ட அமிர்தத்தை ராகு என்ற அசுரன் திருடி உண்ணும் பொழுது, விஷ்ணுவால் அவன் தலை துண்டிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ராகு உண்ட அமிர்தம் அவன் தலை துண்டிக்கப்பட்டதால் அவன் உடலில் இறங்கவில்லை. ஆனால் அவன் வாயில் அமிர்தம் இருந்ததால் தலைமட்டும் அமரத்துவம் பெற்றுவிட்டது. அதனை பிரம்மா கோள்களுள் சேர்த்து விட்டார்).
(மச்ச அவதாரம்: விஷ்ணு புராணத்தில் மச்ச அவதாரக் கதை சொல்லப்பட்டதற்கு மேல் இங்கு பேசப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சி வேதங்களை எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் ஒளிந்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டார்).
அம்பரீஷன் கதை
அம்பரீஷன் என்ற அரசன் எல்லாச் செல்வங்களும் பெற்று இப்பூவுலகை ஆண்டு வந்தான். பெரிய விஷ்ணு பக்தன் ஆகையால் அவன் ஆட்சியிலும், செல்வத்திலும் சிறிதும் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தான். வைணவ சமய சம்பந்தமான சடங்குகளைச் செய்வதில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான். இத்தகைய ஒரு சடங்கில் மூன்று நாட்கள் முழு பட்டினி இருந்து மூன்றாம் இரவு முடிந்தவுடன் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது விதி. இதைச் செய்ய முற்பட்ட அம்பரீஷன் விரதத்தை முடிக்க வேண்டிய நேரத்திற்குச் சற்று முன்னர் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். அவரை உண்ண அழைத்தான் அம்பரீஷன். இதோ வருகிறேன் என்று சொல்லி, வெளியே சென்றவர் விரதம் முடிக்கும் நேரத்தில் வந்து சேரவில்லை. இரவு முடியும் நேரத்தில் உடனேயே உண்ண வேண்டும் என்பது கட்டளை. ஆனால் வந்த விருந்தினரை, அதிலும் துர்வாசரை விட்டு விட்டுச் சாப்பிடுவது பெரிய அபசாரம். இத் தருமசங்கட நிலையில் மாட்டிக் கொண்ட அம்பரீஷன் இரண்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நீரைப் பருகி விரதத்தை முடித்தான். விரத நேரம் கழித்து வந்த துர்வாசர் தன்னை
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாகவத புராணம் - பகுதி 18 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்றும், அம்பரீஷன், அவன், விஷ்ணு, புராணத்தில், யானை, விரதத்தை, வேண்டும், அவர், பெரிய, எடுத்துக்