அக்னி புராணம் - பகுதி 9 - பதினெண் புராணங்கள்
இறுதியில் பீமனுக்கும் துரியோதனனுக்கும், கதாயுதப் போர் நடந்தது. துரியோதனனின் தொடையினைக் கிழித்து, அவனைக் கொன்றான் பீமன். துரோணர் கொல்லப்பட்ட செய்தி அறிந்த அசுவத்தாமன் கடுங்கோபம் கொண்டான். நடுநிசியில், பாண்டவர்களின் பாசறையில் புகுந்த அசுவத் தாமன், திருஷ்டத்தூய்மனையும், திரெளபதியின் ஐந்து புதல்வர்களையும் கொன்றான். அசுவத்தாமனைப் பழிவாங்க வேண்டும் என்று கூறிய திரெளபதி அருச்சுனனை அசுவத்தாம னுடன் போர் புரியும்படிக் கூற இருவரும் தெய்வீக அஸ்திரங் களை ஏவினர். அவை பூமியை அழித்து விடும் என்பதனால் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கூறப்பட்டது. அர்ச்சுனன் தன் அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். ஆனால் அசுவத்தாமனால் திரும்பப் பெற முடியவில்லை. அது நேராக, அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருவில் இருந்த குழந்தையைக் கொன்றது. இறந்த குழந்தைக்கு உயிர் கொடுத்துக் காத்தான் கிருஷ்ணன். அக் குழந்தையே பரிட்சித்து என்ற பெயர் பெற்றது.
யுத்தம் முடிந்தவுடன், யுதிஷ்டிரனுக்கு அரசனுடைய கடமைகள் அனைத்தையும் கற்பித்தார் பீஷ்மர். அதன் பிறகே அவர் இறந்து போனார். அரச பதவி பெற்ற யுதிஷ்டிரன் பல யாகங்கள் செய்து திறம்பட ஆட்சி செய்து வந்தான். சில காலங்களில் யாதவர்கள் அழிக்கப்பட்டு விட்டனர் என்று கேள்வியுற்று, தன் அரச பதவியைப் பரிட்சித்துவிடம் ஒப்படைத்து விட்டு, பல க்ஷேத்திரங்கள் சென்று இறுதியில் இறந்து போயினர். கிருஷ்ணன், பாண்டவர்களைத் தனது கருவியாக உபயோகித்து, கெட்டவைகளை அழித்து, நல்லவைகளை நிலை நிறுத்தினார். யாதவர்களும் அழியப் போவதை அறிந்த கிருஷ்ணன், பிரபாச என்ற க்ஷேத்திரத்தில் இறந்து போனான். கிருஷ்ணன் இறந்த பிறகு, அவரால் நிர்மாணிக்கப்பட்ட துவாரகை கடலில் மூழ்கியது.
9. புத்தரும் கல்கியும்
விஷ்ணு தன்னுடைய ஒன்பதாவது அவதாரமாக புத்த அவதாரம் எடுத்தார். இனி வரப் போவது பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம்.
பல வருடங்களுக்கு முன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அசுரர்கள் தேவர்களை வென்றனர். உடனே தேவர்கள் விஷ்ணுவிடம் பாதுகாப்புத் தேடி ஓடினர். விஷ்ணுவும் அவர்களிடம், “தேவர்களே! வீணாகக் கவலைப்பட வேண்டாம். மாய மோகா என்பவன் சுத்தோதனரின் மகன் புத்தனாகப் பிறப்பான்” என்று கூறினார்.
பல காலங்களுக்குப் பிறகு விஷ்ணுயாஷா என்பவனின் மகனாக, விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார். கல்கியின் குருவாக யக்ஞவல்கியர் இருப்பார். நான்கு வர்ணங்களும், நான்கு ஆசிரமங்களும் மீண்டும் நிர்மாணிக்கப்படும். மக்கள் புனிதமான வேதங்கள், சாத்திரங்களை மதித்துப் போற்றுவார்கள். புதிய சத்திய யுகம் தோன்றும். ஒவ்வொரு கல்பத்திலும், ஒவ்வொரு மன்வந்திரத்திலும் விஷ்ணு வெவ்வேறு வடிவங்களில் அவதரிப்பார். விஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றிக் கேட்டும், படித்தும் பயன் பெறுபவர்கள் சுவர்க்கத்தினை அடைவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 9 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, போர், கிருஷ்ணன், பீஷ்மர், இறந்து, அவதாரம், விஷ்ணு, இறந்த, துரோணர், மகன், திரும்பப்