அக்னி புராணம் - பகுதி 10 - பதினெண் புராணங்கள்
அக்னி, பிரபஞ்சம் தோன்றிய வரலாற்றை வசிட்டருக்குக் ஆகிய மூன்று தொழில்களையும் செய்தார். பிரபஞ்ச உற்பத்திக்கு முன்னர், எங்கும் பரப் பிரம்மமே நிறைந்திருந்தது. தொடக்கத்தில் பிரம்மாண்டத்தின் விதைகளை விஷ்ணு தூவ, அது மிகப் பெரிய பொன் முட்டை வடிவுடன் தோன்றிற்று. பிரம்மன் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டு, அதனுள்ளேயே ஓராண்டு இருந்தார். பிறகு அந்த முட்டையை இரண்டாகப் பிளந்தார். மேல்பகுதி சொர்க்கமாகவும், கீழ்ப்பகுதி பூலோகமாகவும் ஆக்கப்பட்டது.
(இதன்பிறகு சொல்லப்பட்ட அக்னி புராணம் சொல்லும், பிரபஞ்ச உற்பத்திக் கதை ஏற்கெனவே பல புராணங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.)
பிரார்த்தனை செய்வது, கோயில் கட்டுவது, சிலை வடிப்பது எவ்வாறு ?
(அக்னி புராணம் பிரார்த்தனை செய்வது எப்படி, கோயில் கட்டுவது எப்படி, தெய்வ வடிவங்கள் செய்வது எப்படி என்பன பற்றியெல்லாம் விரிவாகப் பல அத்தியாயங்களில் கூறிச் செல்கிறது. அவை, பிரார்த்தனை பற்றிக் கூறும் பொழுது, மிக துணுக்கமான பல விஷயங்களைக் கூறுவதால் நூலின் சுருக்கம் கருதி மிகச் சுருக்கியேஇங்கு ததுள்ளோம்)
சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய தெய்வங்களைப் பிரார்த்திக்கும் பொழுது, பொதுவாக எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும் என்று கூறுவதுடன், குறிப்பிட்ட தெய்வங்களைப் பிரார்த்தனை செய்யும் பொழுது அந்தத் தெய்வத்திற்குரிய சிறப்பான மந்திரங்களையும், அக்னி புராணம் கூறிச் செல்கிறது. பிரார்த்தனை தொடங்குவதற்கு முன் குளிக்க வேண்டும் என்று கூறுவதுடன், குளிக்கக் கூடப் பல முறைகளைக் கூறுகிறது அக்னி புராணம்.
கோயில் கட்டுதல்
ஒருவன் பொருள்களைக் கொண்டு கோயில் கட்ட வேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினால் நூறு ஜென்மங்களில் செய்த பாவம் போகும். கோயில் கட்டுபவரின் மூதாதையர்கள் நரகத்திலிருந்து விடுபடுவர். ஒரு கோயில் கட்டுபவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். இரு கோயில்கள் கட்டுபவர் பிரம்ம லோகத்திற்கும், ஐந்து கோயில்கள் கட்டுபவர் சிவலோகத்திற்கும், பதினாறு கோயில் கட்டுபவர் பிறப்பினின்றும் விடுபடுவர். தானம் செய்வதினால் ஏற்படும் புண்ணியத்தைவிட, கோயில் கட்டுவதால் ஏற்படும் புண்ணியம் அதிகம்.
சிலை வடித்தல்
கோயில் கட்டுவதைவிட, ஒரு சிலை வடிப்பது அதிக புண்ணியம். தெய்வங்களின் சிலைகளை, நகரத்தை நோக்கிப் பார்க்கும்படியாக நிர்மாணிக்க வேண்டும். நகரத்துக்கு வெளியே பார்க்கும்படியாக அமைக்கக் கூடாது. இந்திரன் சிலை நகருக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்க வேண்டும். சண்டியின் சிலை நகருக்குத் தென்புறத்திலும், பிரம்மன் சிலை நகர் நடுவிலும் இருக்கவேண்டும். விஷ்ணுவின் சிலையை எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம்.
விஷ்ணுவின் விதவிதமான சிலைகள், வேறுபட்ட வடிவங்களைக் கொண்டவை. உதாரணமாக, விஷ்ணுவின் பத்து அவதாரங்களைச் சிலையாக வடிக்கும்பொழுது, மச்ச அவதாரத்தில், மச்சம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 23 | 24 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அக்னி புராணம் - பகுதி 10 - Agni Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, கோயில், சிலை, வேண்டும், பிரார்த்தனை, அக்னி, கட்டுபவர், புராணம், விஷ்ணுவின், எப்படி, செய்வது, பொழுது