முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » அறிவுக் கதைகள் » அறிவுக் கதைகள் 100 » 44. செட்டியாரும் காகமும்
அறிவுக் கதைகள் 100 - 44. செட்டியாரும் காகமும்
செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம்.
மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது.
நரி-'காக்கா காக்கா-உன் குரல் எவ்வளவு அழகாக-இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்' என்றது.
காகம் அதை நம்பி, வாய்திறந்து-கா கா என்றது.
உடனே மூக்கிலிருந்த வடை விழவே-அதை நரி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. காகம் ஏமாந்தது
இது கேட்ட என் பேத்தி"தாத்தா-உங்க காலத்து காக்கா கதை அது. இந்தக் காலத்து காகம்
நரி பாடச் சொன்னபோது, வடையை காலில் வைத்துக்கொண்டு காகா-என்று பாடியது.
நரி 'உன் பாட்டு நன்றாக இருக்கிறது. ஒரு ஆட்டம் (டான்சு) ஆடு'-என்றது. உடனே காகம்.
வடையை மூக்கில் வைத்துக்கொண்டு (டான்சு) ஆட்டம் ஆடியது.
அதுகண்ட நரி, மறுபடியும், ஏ. காக்கா-உன் பாட்டும் ஆட்டமும் நன்றாக இருக்குது. ஆனால் கொஞ்சம் பாடிக் கொண்டே ஆடு என்று கேட்டது. அதற்குக் காகம், சற்று நிதானித்து, வடையை முழுதும் தின்றபின்பு, காகா என்று கத்திப் பாடியும்,
தாதை என்று ஆடிக் காட்டியும், பறந்து ஓடிப் போய்விட்டது. .
-என்று பேத்தி கூறவே, நான் இது நவீன காலத்துக் காக்கைக் கதை போலும்-என்றேன்.
இது பழங்காலக் காக்கை, நரியை மட்டும் பொறுத்த தல்ல.
இக்காலத்துக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியினையும் நமக்குக் காட்டுகிற கதையாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
44. செட்டியாரும் காகமும் - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள் - காகம், வடையை, காக்கா, என்றது