அறிவுக் கதைகள் 100 - 42. திதி கொடுத்தல்
குப்புசாமி என்ற சிற்றூர்வாசி தன் தந்தைக்கு திதி கொடுக்க நினைத்தார். ஒரு ஐயரை அணுகினார். அவர் கொடுத்த பாட்டியல்படி சாமான்களை வாங்கி வைத்திருந் தார்.
ஐயர் வந்ததும் திதி கொடுக்கத் தொடங்கினார்.
குப்புசாமி, இந்தச் சாமான்கள் எல்லாம் எதற்காக?-என்று ஐயரைக் கேட்டார்.
அவர், மேல் உலகத்தில் உள்ள உன் தந்தைக்கு மந்திரங்களை ஜெபித்து-ஜெபித்து அவருக்கு இவையெல்லாம் அனுப்பி வைக்கப்பெறும்" என்றார்.
குப்புசாமிக்குப் பெரிய மகிழ்ச்சி! தந்தை இறந்த பிறகும், அவர் உண்ண உணவு கொடுக்கின்றோமே என்ற மகிழ்ச்சி! -
சடங்குகள் தொடங்கின.
'ஐயர் சாமான்களைப் பார்வையிட்ட போது அங்கிருந்தது “புழுங்கல் அரிசி, இது வேண்டாம் பச்சரிசி கொண்டு வா-என்று சொன்னார்.
உடனே குப்புசாமி--
'சாமி! எங்கப்பாவுக்கு பச்சரிசி ஆகாது. அதைச் சாப்பிட்டதனால்தான் வயிற்றுவலி வந்து இறந்தார்.
மேலுலகத்துக்கும் இதை அனுப்பி அவரைத் துன்புறுத்த வேண்டமே' என்று வினயத்துடன் வேண்டிக் கொண்டான். -
ஐயருக்கு, அப்ப-என்ன சொல்வது, என்ன செய்வது என்று விளங்கவே இல்லை.
உங்களுக்கு ஏதாவது விளங்குகிறதா?
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
42. திதி கொடுத்தல் - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள் - அவர், குப்புசாமி