முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » அறிவுக் கதைகள் » அறிவுக் கதைகள் 100 » 43. நரியும் திராட்சையும்
அறிவுக் கதைகள் 100 - 43. நரியும் திராட்சையும்
கடும்பசியால் திராட்சைப்பழத் தோட்டத்திலே நரி நுழைந்தது. பழங்களை உண்ணவேனும் என்ற ஆசை. எட்டி எட்டிப் பார்த்தது. முடியாமல் நெடுநேரத்துக்குப் பின், 'சீசீ இந்தப் பழம் புளிக்கும்; இது வேண்டாம்' என்று சொல்லிப் போய்விட்டது நரி,
இந்தக் கதையை என் பேத்தியிடம் சொன்னேன்.
பேத்தி, தாத்தா அது உங்க காலத்து நரி, இந்தக் காலத்து நரி என்றால், 'ஸ்டுல்'-பலகை எடுத்துக் கொண்டுபோய்ப் போட்டு, அதன்மேல் ஏறி, எல்லாத் திராட்சைப் பழங்களையும் நன்றாகத் தின்று விட்டு போய்விடும்-'
என்று சொல்லவே.நான்-"இது இக் காலத்து நரிக்கதை போலும்' என்றேன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
43. நரியும் திராட்சையும் - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள் - காலத்து