முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » அறிவுக் கதைகள் » அறிவுக் கதைகள் 100 » 99. சங்ககால நூல்களில் ஒரு காட்சி
அறிவுக் கதைகள் 100 - 99. சங்ககால நூல்களில் ஒரு காட்சி
வெளியில் சென்றுவந்த ஒரு தாய், வெகுகாலமாகியும் திருமணமாகாதிருந்த தன் மகளை வீட்டில் காணாமல் தெருவில் ஒடி தேடியலைந்தாள். ஒரு வயது சென்ற கிழவர், "உன் மகள் தன் காதலனோடு இப்பொழுது தான் தென்புறச் சாலை வழியாகப் போனாள்” என்றார்.
அத் தாய் தென்புறச் சாலை நோக்கி விரைந்தோடி தேடினாள். நெடுந்தூரம் சென்றும் காணவில்லை. எதிரே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வந்தனர். அவர்களிடம் கேட்டாள், "என் மகள் ஒரு காளையோடு இவ்வழிச் செல்வதைக் கண்டீர்களா?" என்று.
வந்தவன் கூறினான், "ஆம் கண்டேன். திரண்ட தோள்களும், பரந்த மார்பும், விரிந்த நெற்றியும் உடைய ஒரு ஆண்மகன் செல்வதைக் கண்டேன்" என்று கூறி. 'அயலே" என்று அருகிலுள்ள தன் மனைவியைப் பார்த்தான்.
அவள் கூறினாள். ஆம்! மயிலின் சாயலையுடைய அழகிய பெண்ணொருத்தி ஒரு ஆடவனுடன் செல்வதைக் கண்டேன்" என்று
என்ன பண்பு? ஆண், ஆணை மட்டுமே கண்டான். அருகில் சென்ற பெண்ணைக் காணவில்லை. பெண். பெண்ணை மட்டுமே கண்டாள். உடன் சென்ற ஆணைக் காணவில்லை.
அவர்களிடம் அத் தாய் கேட்டாள், "எவ்வளவு தூரத்தில் செல்லுகிறாள் விரைந்து சென்றால், அவளைக் கண்டுபிடிக்க முடியுமா? அவளைக் காணாமல் பெற்று வளர்த்த வயிறு பற்றி எரிகிறதே!" என்று அழுதாள்.
அவர்கள் கூறினார்கள், 'வீணாக ஒடித் தேடியலை யாதே அவர்கள் வாழத் துவங்கி விட்டாாகள். பக்குவம் அடையும் வரையில்தான் அவள் உனக்குச் சொந்தம். பக்குவமடைநது விட்டால், அவள் பிறருக்குச் சொந்தம். செந்தாமரை மலர் சேற்றில்தான் பிறக்கிறது. - அது சேற்றிலேயே கிடந்தால், அது அழுகித்தானே போகும்? சேற்றைவிட்டு வெளியேறி மக்கள் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமைடைகிறது.
"முத்துக் கடலில்தான் பிறக்கிறது. கடலிலேயே கிடந்துவிட்டால் அதற்கு என்ன பெருமை? அது கடலை விட்டு வெளியேறி மன்னர்களின் முடியை அலங்கரிக்கும் போதுதானே அது பெருமையடைகிறது. திரும்பிக் செல்லுங்கள்” என ஆறுதல் கூறி அனுப்பிளைத்தார்கள்.
கதை நமக்கு ஒரு படிப்பினையை உண்டாக்குகிறது. அது, 'இறக்கை முளைத்த பறவையை கூண்டில் அடைத்து வைத்திருப்பதைப்போல. மணம் செய்விக்காமல் பக்குமடைந்தப் பருவப் பெண்களை மணம் செய்விக்காமல் வீட்டில் அடைத்து வைத்திருப்பதும் தவறு” என்பது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
99. சங்ககால நூல்களில் ஒரு காட்சி - அறிவுக் கதைகள் 100 - Knowledge Stories - அறிவுக் கதைகள் - ", அவள், செல்வதைக், காணவில்லை, தாய், சென்ற